Monday 4 July 2016

கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!


Siragu kanavanaal1

கணவன் தன் மனைவி மீது  தொடர்ந்து  வன்முறை தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்ற போது, அது மன ரீதியாகவும் இருக்கலாம் அல்லது உடல் ரீதியாகவும் இருக்கலாம்; இந்தத் தொடர் தாக்குதலால் அந்தப்  பெண் ஒரு  விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார் என்கின்றது ஆய்வுகள். இதனை ஆங்கிலத்தில் Battered Woman Syndrome என்று அழைக்கின்றார்கள். இதைப் பற்றி முதலில் 1970 -இல் டாக்டர். லெனோரே வால்கெர் (Dr. Lenore Walker) என்ற உளவியல் நிபுணர் தான் கோட்பாடாக, இந்த  சமூகத்தில் ஒரு பெண் மன மற்றும் சமூக ரீதியாக தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாகும் போது எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார் என்று “The Battered Woman” என்ற நூலில் கூறினார்.

தொடர்ந்து தாக்குதலுக்கு தன் கணவனால் உள்ளாகும் பெண் ஒரு வன்முறை சுழற்சிக்கு ஆளாகி மன ரீதியாக பாதிப்படைகின்றாள். அப்படி பாதிக்கப்படும் பெண் அந்தக் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க தன் கணவனை கொலை செய்கின்றாள். Dr . Walker தெளிவாகக் கூறுகின்றார் இது ஒரு நோய் அல்ல தொடர்ந்து  கணவனால் துன்பப்படுத்தப்படும் பெண் பல்வேறு சமூகக் காரணங்களால் அந்த உறவில் இருந்து வெளியேற முடியாமல் கணவனைக் கொன்றுவிடுகின்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment