Monday 18 July 2016

துன்பத்துள் வீழும் கன்னியாகுமரி ரப்பர் விவசாயிகள்


Siragu rubber article2

”ரப்பர்” குமரி மாவட்டத்தின் முக்கியமான தொழில் வளங்களில் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் ரப்பர் சாகுபடி அதிகளவில் நடைபெறுகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத்தரம் வாய்ந்தது என்பதால் குமரி ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் எப்போதுமே கடும் கிராக்கிதான். ஆனால் அண்மைக்காலமாக ரப்பரின் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சோகம் தனிக்கதை.


குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓர் ஆண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் இருந்து முப்பதாயிரம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது. சொந்தமாக ரப்பர் தோட்டம் வைத்திருப்பவர்கள், அவர்களால் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்கள், அரசு ரப்பர் தோட்டங்கள் அதன் பணியாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ரப்பர் பயிரை நம்பியே வாழ்கின்றன. குமரி மேற்கு மாவட்ட மக்களின் பொருளாதாரத்திற்கு கை கொடுப்பதிலும் ரப்பர் பயிரே முக்கியத்துவம் பெறுகிறது. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போதே, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு இடி இவர்கள் மேல் இடிக்க, இடிந்து போய் கிடக்கிறார்கள் குமரி மாவட்ட ரப்பர் சாகுபடியாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment