Monday 18 July 2016

சீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்?


chiraar (2)
சென்னை கெல்லீஸ் ‌சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் இரு தரப்பினரிடையே மோதல், தப்பியோட்டம், தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் சீர்திருத்த பள்ளிகளில் இருந்து தப்பியோடியதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
மாவட்டத்துக்கு ஒரு கூர்நோக்கு இல்லம் அமைக்க வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறினாலும் தமிழ்நாட்டில் எட்டு கூர்நோக்கு இல்லங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, கோவை ஆகிய இடங்களில் 8 கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை, கோவை கூர்நோக்கு இல்லங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்தன. இதில், மதுரை கூர்நோக்கு இல்லம் 2015 பிப்ரவரி முதல் செயல்படுவதில்லை. இங்கு வரும் சிறுவர்கள் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment