Wednesday 30 September 2015

புதிய நந்தனும் பழைய நந்தனும்

nandhanaar4
சமூகத்தில் நம்மைச் சுற்றிக் காணப்படும் கொடுமைகளை இலக்கியப் படைப்பாளர்கள் பதிவுசெய்கின்றனர். அவற்றில் நமது கவனத்தைக் குவியச் செய்கின்றனர். சிலர் அக்கொடுமைகளுக்குத் தீர்வும் வழங்க நினைக்கின்றனர். இது காலம் காலமாக இருந்துவரும் நிகழ்வு.
nandhanaar5
மணிமேகலைக் காப்பியத்தை எழுதிய சீத்தலைச் சாத்தனார் ஒரு பெரும் புரட்சியாளர். எவரும் பசிக்கொடுமையால் வாடக்கூடாது என்று நினைத்தவர். வறுமையே எல்லாச் சமூகத் தீமைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கண்டவர். ஆகவே ‘பசியைத் தீர்ப்பதே அடிப்படை மனித தர்மம்’ என்று நினைத்தார். ஆனால் அவரைச் சுற்றி அவர் கண்ட சமுதாய நிலையை அவரால் மாற்ற முடியவில்லை. அதற்குச் சரியான தீர்வும் அவருக்குத் தெரியவில்லை. எனவே கற்பனையான தீர்வு ஒன்றைத் தமது நூலில் அவர் வழங்குகிறார். அமுதசுரபி என்பதுதான் அக்கற்பனைத் தீர்வு. ஓர் அமுதசுரபி போன்ற பாத்திரம் இருந்து விட்டால், மணிமேகலை போன்ற ஒரு நல்ல பெண்மணியும் கிடைத்துவிட்டால் உலகிலுள்ள பசியையெல்லாம் போக்கிவிடலாம் என்பது அவர் கண்ட கனவு.

இதே பிரச்சினைதான் சென்ற நூற்றாண்டில் நமது தமிழ்நாட்டிலே பிறந்த வள்ளலாருக்கும். அவரும் பசியைத் தீர்ப்பது அடிப்படை மனித தர்மம் என்பதை உணர்ந்தவர்தான். அதனால் தினமும் சித்தி வளாகத்திற்கு வருவோர்க்காவது உணவிடவேண்டும் என்ற ஒரு ஏற்பாட்டினைச்செய்தார். யாவருக்கும் அன்புசெய்து அன்னமிடும் அமைப்புகளை நிறுவினால் சரியாகப் போய்விடும் என்று நினைத்தார். ஆனால் அதுவும் தோல்வியே ஆயிற்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 29 September 2015

முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-8



pulithevar1












ஒண்டி வீரன் குதிரையை, குதிரை லாயத்தில் இருந்து விடுவித்து புறப்படும்போது, அங்கு குதிரையின் சத்தம் கேட்டு வெள்ளையர்களின் வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்த உடனே ஒண்டிவீரன் அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக அங்கிருந்த வைக்கோல்களை தன் மீது போட்டுக்கொண்டு தரையில் படுத்து மறைந்து கொண்டார். அங்கு வந்த வெள்ளையர்கள், இந்த ஒரு குதிரை மட்டும் எப்படி குதிரை லாயத்திலிருந்து கயிற்றை அவிழ்த்து இங்கு வந்தது, இதனை இழுத்துச்சென்று கட்டிவிட வேண்டும் என்று குதிரையை இழுக்கின்றனர். ஆனால் உடனே, எதற்கு இந்த இரவில் அங்கு செல்ல வேண்டும், அதற்குப் பதில் இந்தத் தரையிலேயே ஒரு குதிரை லாயத்தை அரைந்து அந்த கம்பில் குதிரையைக் கட்டிவிட எண்ணுகிறார்கள். வெள்ளையர்களில் ஒருவன் ஒரு ஈட்டி போன்று கூர்மையான ஒரு கம்பை எடுத்து வருகிறான். அந்த கம்பை அழுத்தி வைத்து அடித்து தரையில் இறக்கின்றார்கள். ஆனால் அந்தக் கம்பு தரையில் செல்வதற்கு முன் ஒண்டி வீரன் கையைத் துளைத்துக் கொண்டு தரையில் செல்லுகிறது. பின்னர் அந்த வெள்ளையர்கள் குதிரையை அந்தக் கம்பில் கட்டிவிட்டு செல்லுகிறார்கள்.
அவர்கள் கம்பை அடித்து தரையில் செலுத்தும்போது, தனது கையை துளைத்துக் கொண்டு கம்பு செல்கிறது, ஆனால் இதன் வலியை ஒண்டி வீரன் சிறிதும் பொருட்படுத்தவில்லை, அவர் வலியில் துடிக்கவும் இல்லை, சத்தம் கூட போடவில்லை. எந்த வித அசைவும் இன்றி அவர் தரையில் படுத்திருந்தார். வெள்ளையர்கள் சென்றதும் எழுந்த ஒண்டி வீரன் தன் கையைத் துளைத்திருந்த கம்பை பிடித்து இழுத்து வெளியே எடுத்து அதனை தூரமாக வீசி எறிந்துவிட்டு, அந்த குதிரையின் மீது ஏறி நெற்கட்டான் செவ்வல் பகுதி வந்து புலித்தேவரை சந்தித்து தான் சொன்னதை செய்து விட்டதாக பெருமிதம் கொண்டார். புலித்தேவர் இவர் வீரத்தினை பெரிதும் பாராட்டுகிறார். அப்போது புலித்தேவர் ஒண்டி வீரனின் கையை கவனிக்கின்றார். கை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. என்ன இது என்று கேட்டு பதறுகிறார் புலித்தேவர். ஒண்டி வீரன் நடந்ததைக் கூறுகிறார். உன் வீரமும், நாட்டுப்பற்றும் நாம் யார் என்று வெள்ளையர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று ஒண்டிவீரனைப் புகழ்ந்தார் புலித்தேவர்.
pulithevar ii
1759ம் ஆண்டு நெற்கட்டான் செவ்வல் பகுதியின் மீது போர் தொடுத்த யூசுப்கான் படுதோல்வி அடைந்து திரும்பினான். அவன் மீண்டும் புலித்தேவரை போரில் வெற்றி கொள்ள நினைத்து, அந்த ஆண்டில் வாசுதேவ நல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் புலித்தேவர் யூசுப்கானை அடித்து விரட்டுகிறார். யூசுப்கான் மீண்டும் தோல்வி அடைந்து திரும்புகிறான். யூசுப்கான் எப்படியாவது புலித்தேவரை போரில் வெற்றி கொள்ள வேண்டும் என்று, மீண்டும் 1760ம் ஆண்டில் வாசுதேவ நல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் யூசுப்கான் புலித்தேவரிடம் தோல்வியை சந்திக்கிறான். யூசுப்கானின் கோபம் உச்சத்தில் இருந்தது. எப்படியாவது புலித்தேவரை போரில் வெற்றிகொள்ள என்ன செய்வது என்று வெள்ளையர்களுக்கு கடிதம் எழுதினான். யூசுப்கானுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. யூசுப்கான் மீண்டும் 1761ம் ஆண்டில் நெற்கட்டான் செவ்வல் மற்றும் வாசுதேவநல்லூர் மீது போர் தொடுக்கிறான். இந்தப் போரிலும் யூசுப்கான் தோல்வியை சந்திக்கிறான். புலித்தேவர் போரில் வெற்றி பெறுகிறார். இதனால் புலித்தேவரை வெற்றி கொள்ள வேண்டுமெனில் அதற்கு தகுந்த ஆலோசனைகள் கூறுமாறு யூசுப்கான் வெள்ளையர்களுக்கு கடிதம் எழுதினான்.
இந்தக் கடிதப் போக்குவரத்தினை கால்டுவெல் திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் மற்றும் நாட்குறிப்புகளின் தந்தை என அழைக்கப்படும் அனந்த நாராயணன் என்பவரின் நாட்குறிப்பு பதிப்புகளிலும் புலித்தேவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 
http://siragu.com/?p=18515

Monday 28 September 2015

கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு…

moottu vali1
ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.
இது ஒரு புகழ்பெற்ற உவமைக் கதை. மூட்டுவலிகளும் இந்த ஒட்டகம் போலத்தான். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாக்கி விடலாம். அல்லது அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
உண்மையில் மூட்டுவலிகளைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மூட்டுவலிகளைப் பற்றி முழுமையாக புரியவைப்பதும் சற்று சிரமம்தான்.
moottuvali 4
ஏனென்றால் நோய்க்கான காரணங்கள், நோயினால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்புகள் என்பவை பலவகைப்படுகின்றன. ஆனால் எல்லாவிதமான மூட்டுவலிகளிலும் நோயாளிகள் ஒருசேர சொல்லும். ஒரே விளக்கம் “மூட்டு வலிக்கிறது” என்பதுதான்.
மேலும் இன்னொன்றையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது “வலி மாத்திரை”(pain killer) போட்டால் வலி குறைந்துவிடுகிறது என்பதுதான். ஆனால் மூட்டுவலிகள் பல்வேறு காரணங்களால் வருகின்றன.
இவற்றை முழுமையாக இங்கே விளக்க முடியாது. ஆகவே முடிந்தவரை மிக சுருக்கமாக விளக்குகிறேன்.
ஒவ்வொரு விதமான மூட்டுவலியையும் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.

ஆனால் இந்த அளவுக்கு புரிதல் பரவினால்கூட போதும். அதுவே பெரிய விடயம் என நான் நினைக்கிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 27 September 2015

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்- இறுதிப் பகுதி

tamil menporul7
கேள்வி: இணையம் பயன்படுத்தும் இந்தக் கால தலைமுறைக்கு இறுதியாக தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?
fsftn1
பதில்(பிரகாஷ்): செய்திகளைப் பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள். இணையம் என்பதுமட்டும் கிடையாது, எதைப்பொறுத்து நடந்தாலுமே அது அப்படித்தான் நடக்கிறது. ஏனென்றால் இன்று பெரிய நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்றால், serverஐ cloud க்கு மாற்றிவிடுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களும் cloud ஒருபெரிய வெற்றிபெற்ற மாதிரியாக பார்க்கிறார்கள். அதாவது Cloud என்றால் மேகக்கணினி என்று சொல்வோம். அதாவது server-ஐ நீங்களாக வைத்துக்கொள்ளாமல், நிறுவனங்கள் server-ஐ தருவார்கள், அந்த server-ல் நீங்கள் நிறுவுவீர்கள். உங்களுக்கே ஒரு இணையதளம் வேண்டும் என்றால் நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஆரம்பிக்காமல் google blogger வைத்திருப்பார்கள், அதில் நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு இணையதளம் கிடைத்துவிடும். சிறிது காலத்திற்கு முன்பு ரவி என்று விக்கிபீடியாவில் programme director. அவர் என்ன சொல்கிறார் என்றால், “இந்தத் தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்தபின்பு மக்கள் எல்லோரும் நிறைய அலைபேசியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்பொழுது விக்கிபீடியா என்ற கட்டற்ற களஞ்சியத்தில் பயனர்கள் திருத்தம் செய்யும் முறை இருப்பதினால்தான், அது மென்மேலும் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. அலைபேசி பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை வருகிறது என்றால், மக்கள் பார்ப்பதோடு போய்விடுவார்கள், ஏனென்றால் அலைபேசியில் திருத்தம் செய்ய முடியாது”.

Apps - Tile Icons on Smart Phone
இப்பொழுது அனைவரும் app-ஐ தரவிறக்கம் செய்யுங்கள் என்பது ஒரு கலாச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. அதில் தரவிறக்கம் செய்தால் 50 ரூபாய், 20 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்பதைப் பார்த்துவிட்டு, அப்படியே சென்று விடுகிறார்கள். App பயன்படுத்துவதினால் என்ன பிரச்சனை என்றால், இப்பொழுது flipkart என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால், இணையத்தில் பார்க்கும் பொழுது 100 தயாரிப்புகளைப் பார்க்கும் நபர், App-ல் நேரம் போய்க்கொண்டிருக்கும், அதனால் இரண்டு அல்லது மூன்று தயாரிப்புகளைப் பார்த்துவிட்டு சுலபமாக சமரசம் ஆகிவிடுவார்கள். முதலாளியாக இருப்பவருக்கு அது சந்தோசமான விடயம்தான். ஏனென்றால் நிறைய வாய்ப்புகளைப் பார்க்கமுடியாது. app என்றால் flipkartல் மட்டும்தான் பார்ப்பேன், நான் snap dealக்கு போய் பார்க்கமாட்டேன், ஆனால் இணையதளம் என்றால் அப்படி கிடையாது, நிறைய பார்க்கலாம். அதற்குப்பின் இருக்கிற அரசியல் என்பது பெரியவிடயம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 23 September 2015

முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-7



0
Sha
pulithevar ii
மருதநாயகத்தினை தூக்கில் போட்டு, இறந்த பிறகு, அவரது ஆத்மா வெள்ளையர்களை தூங்கவிடவில்லை இரவில் வெள்ளையர்களின் கனவில் சென்று அவர்களை அச்சமடையச் செய்தார். இது போன்று ஆற்காடு நவாப்பின் மனநிலையும் இருந்தது. வெள்ளையர்களுக்கும், ஆற்காடு நவாப்பிற்கும் மருதநாயகம் யூசுப்கானாக மாறி எத்தனை நன்மைகளை செய்தார், அத்தனைக்கும் சிறு நன்றி உணர்வு கூட இல்லாமல், அவர் குடும்பத்தை சிதைத்து அவரை தூக்கில் போட்டு கொன்றதினால், நன்றி மறந்ததினால் அவர்கள் மன நிம்மதியை இழந்து தவித்தனர். இந்த நிலைமையை சரி செய்ய வழியின்றி இவர்கள் தவித்தனர். மன நிம்மதியை இழந்து தவித்த வெள்ளையர்களும், ஆற்காடு நவாப்பின் ஆட்களும் சேர்ந்து மருதநாயகத்தின் உடலை பல துண்டுகளாக வெட்டி எடுத்தனர். அந்த வெட்டி எடுத்த உடல் உறுப்புகளை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று எரித்தனர் மற்றும் புதைத்தனர். மருதநாயகத்தின் தலை திருச்சியிலும், கைகள் பாளையங்கோட்டையிலும், கால்கள் தஞ்சாவூரிலும், மற்றவையை மதுரையிலும் வைத்து அனைத்து காரியங்களையும் செய்து முடித்தனர்.
இது போன்று இவர்கள் செய்வதற்குக் காரணம், மருதநாயத்தினைக் கண்டு அந்த அளவிற்கு அவரின் வீரத்தினைப் பார்த்து, அவர் மீது அச்சம் கொண்டிருந்ததுதான். மேலும் அவர் இறந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வந்து விடுவார் என்று அவர்கள் பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர். எனவேதான் அவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது.

இது போன்று வீரம் செறிந்த மருதநாயகம், 1759-ம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து நெற்கட்டான் செவ்வல் பகுதி மீது போர் தொடுத்தான். இந்தப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. இதில் புலித்தேவரின் மறவர் படைத் தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் மருதநாயகத்தின் படைகள் பின் வாங்கியது. மருதநாயகம் தோல்வி கண்டு திருநெல்வேலி திரும்பினார். இந்த செய்தி வெள்ளையர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைத்துப் போர்களிலும் ஐரோப்பியர்கள் போன்று, அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு போர் செய்த மருதநாயகம் தோல்வி கண்டு திரும்புகிறார். புலித்தேவரின் மறவர் படைகள் வேல், வில் மற்றும் வாள் என்று தமிழர்களின் போர்க் கருவிகளைக் கொண்டு மட்டும் போர் செய்தனர். இவர்களின் வீரத்திற்கும், நாட்டுப்பற்றுக்கு முன் அதிநவீன போர்ஆயுதங்கள் பயன்படுத்தி போர் தொடுத்தவர்கள், அனைத்தும் தோற்று புறமுதுகிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று போர்களத்தில் இருந்து ஓடினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 22 September 2015

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 1

இக்கால இந்தியாவின் அரசியலிலும், சமூக அமைப்பிலும் எண்ணற்ற மாற்றங்கள் எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரையில், ஒரு மாறுதலற்ற தேக்க நிலையில் இந்தியாவின் சமூக வாழ்வு அமைந்திருந்தது என்பதாக கார்ல் மார்க்ஸ் (The British Rule in India – Karl Marx) கருதினார். அதுபோன்றே, இந்தியாவின் நிலையில், பொருளாதார அடிப்படையில் படிப்படியாக புராதனப் பொதுவுடைமை, அடிமையுடமை, நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் எனப் பல நிலைகளைச் சந்தித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட இயலாது என்று மார்க்சிய வரலாற்று ஆசிரியர் டி. டி. கோசாம்பி கருதினர்.
periyar1
இக்கருத்தைப் பெரியார் தனது கோணத்தில், நமது நாட்டில் இந்தச் சாதீய அடிப்படையிலான அடிமைத்தனம் ஒவ்வொரு அரசகுலத்தின் ஆட்சியிலும், பேரரசுகளிலும்மாறாது, காலம் காலமாக ஊறிப்போயிருப்பதாகக் குறிப்பார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று (1901), சென்னை மாகாணத்தில் நிலவிய சாதீயமானது மனிதர் ஒருவரின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை,பெயரை, உடையைத் தீர்மானிக்கிறது என்றே குறித்திருந்தது. இவ்வாறு வாழ்வில் பிறந்ததிலிருந்து, இறப்பதுவரை பிரிக்கவழியின்றி வாழ்வோடு கலந்து ஒருவரது வாழ்வின் போக்கையே தீர்மானிக்கும் நிலையில் புரையோடிப் போயிருந்த பாகுபாட்டையும், சமத்துவமற்ற பேத நிலையையும் அசைத்துப் பார்க்க முற்பட்டவர் தந்தை பெரியார். வரலாற்றுப் போக்கில் பெரியார் புரட்சி செய்த காலம் ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு எழுத்தாளராக … இதழியலாளராக … தனது எழுத்து, உரை ஆகியவற்றால் தமிழக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பெரியாரை, அறிஞர் அண்ணா, “பெரியார் ஒரு சகாப்தம்; ஒருகாலகட்டம்; ஒரு திருப்புமுனை” என்று புகழ்ந்துரைத்தார். அத்தகைய பெரியாரது கருத்துப் பரப்பல் முயற்சியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது மலைக்க வைக்கிறது.

ஒரு எழுத்தாளராக, இதழியலாளராக போராட்டங்கள் பல சந்தித்து தனது கருத்துகளை, உரைகளை மக்களிடம் தனது பத்திரிக்கைகள் மூலம் கொண்டு சேர்த்த பெரியாரின் பணி வியக்கவைப்பது. தமிழகத்தில் வெறும் 7% மக்களே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அவர்களிலும் 5% பிராமண குல மக்களாகவும் இருந்த காலத்தில், இந்துமதத்தின் ஆணிவேரை அசைக்கும் நோக்கில், சனாதன தர்ம அமைப்பையும், வர்ண முறையையும் தீவிரமாக எதிர்க்கும் கருத்துகள் நிரம்பிய ஏடுகளை, வசதியற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் ஓரணா, ஈரணா என்ற விலையையும் கூடப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் நிலையை உருவாக்கிய பெரியாரை, அதனால் மக்களின் சிந்தனையில் தெளிவை வளர்க்க விரும்பிய பெரியாரை எழுத்தாளராக, இதழியலாளராக பாராட்டுவது என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராலும் கூட சிறப்பாகச் செய்ய இயலாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 21 September 2015

முப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்

poornachandran6
பேராசிரியர், முனைவர் க.பூரணச்சந்திரன் அவர்களின் இணையதள அறிமுகம், அறக்கட்டளை தொடக்கம், மின் நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் நிகழ்வுத் தொகுப்பு:-
முனைவர்திரு. ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஈபர் கல்லூரி முதல்வர்திரு.பால் தயாபரன் அவர்கள் இணைய வெளியீடும் சிறப்புரையும் ஆற்றினார்.

poornachandran5

எழுத்தாளர்நாவலாசிரியர் இமயம் சிறப்புரையும் மின் இதழ்கள் வெளியீடும் செய்துபேராசிரியர் அவர்களுடனான தமது இலக்கிய தொடர்பு, தமது முதல் நாவலாகிய கோவேறுகழுதைகள் உருப்பெற பேராசிரியரின் துணை ஆகியவற்றை மலரும் நினைவுகளாகவும், எழுத்தாளனின் கடமையும் பொறுப்பும் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

தற்காலக் கல்வி முறை பகுதி – 5

vaalkkaikkum vagupparaikkum6
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவனுக்கு நம்பிக்கை தரும் வேர் போன்றவர். இந்த வேர் மாணவர்களிடத்தில் உள்ள ஆளுமைப் பண்புகளை வளரச் செய்ய வேண்டும். உளவியல் அறிஞர் வாட்சன் ‘என்னிடம் குறிப்பிட்ட குழந்தைகளைத் தாருங்கள். அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்பும் வண்ணம் அறிஞராக, மருத்துவராக, குற்றவாளியாக மாற்றிக் காட்டுகிறேன்‘ என்று சவால் விட்டார். எனவே ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களைப் பிறருக்குப் பயன்படும் வகையில் நிழல் தரு மரங்களாக, கனிகளாக மாற்றிக் காட்டும் மகத்தான பணியாகும். எனவேதான் ஆசிரியர் பணி அறப்பணி என்றார்கள் . அர்ப்பணிப்பு இதயம் உள்ளவர்களால் மட்டுமே இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலைமையில் ஆசிரியர் பணி ‘சேவை‘ என்ற நிலையிலிருந்து முழுக்க முழுக்க மாற்றமடைந்து தொழில் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

ஆசிரியர்களை மட்டும் இதற்குக் காரணம் காட்டிவிடமுடியாது. கல்வி நிறுவனங்களும் சேவை என்ற நிலையிலிருந்து மாறி வணிகம் என்ற நிலைமைக்கு மாறி விட்டன. இந்நிறுவனங்களுக்கு பெற்றோர்கள் வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்களாகிய பெற்றோர்கள் விரும்பும் வகையில் மாணவர்களை உருவாக்கித் தர வேண்டிய நிலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பாடத்திட்டங்களை அப்படியே மனனம் செய்து எல்லா மாணவர்களும் நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆழமாகப் படித்து பொருள் புரிந்து கொண்டுதான்  மதிப்பெண் எடுத்தானா என்பதெல்லாம் தேவையில்லை. பாடத்திட்டம் எப்படியிருந்தாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் யாருக்கும் கவலையில்லை. நடைமுறைக்கு அப்பாடத்திட்டம் தொடர்புடையதாக இருக்கிறதா? அவனுடைய உள் ஆற்றலை வளர்க்கிறதா?  புரியும் மொழியில் தான் பாடத்திட்டம் உள்ளதா? அதையெல்லாம் குறித்து யாருக்கும் கவலையில்லை. பள்ளி மாணவன்விரும்பும் மேற்படிப்பை  எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். கல்லூரி மாணவன் பன்னாட்டு நிறுவனத்தில் சென்று எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். பணிபுரிய வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 20 September 2015

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?

Dr.Jerome
சித்த மருத்துவத்தைப் பற்றிய ஒரு முழுமையான, அடிப்படையான புரிதலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவையே இந்த தொடர் கட்டுரைகள். அந்த விதத்தில் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சையும் ஒரு துறைதான் என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
சித்த மருத்துவராகிய எனது பெயரின் பின்னால் இருக்கும் B.S.M.S என்று பட்டத்தின் விரிவாக்கம் எத்தனை பேருக்குத் தெரியுமோ? Bachelor of Siddha Medicine and Surgery அதாவது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம்.
அப்படியானால் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?
இதற்கான பதிலை கடைசியில் கூறுகிறேன்.
அதற்கு முன் சில விசயங்களைப் பார்ப்போம். அறுவை சிகிச்சை என்றாலே அதற்கு நேர்த்தியான கருவிகள் வேண்டும்.
சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கருவிகளின் பெயர்களையும், அதன் வடிவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போமா?

‘அகத்தியர் நயன விதி’ என்ற புத்தகத்தில் மட்டும் கூறப்பட்ட 26 வகையான கருவிகளை ஒரு அறிமுகத்திற்காக குறிப்பிடுகிறேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்-பகுதி-2

கேள்வி: தமிழ் மென்பொருளை உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த சிக்கல், சிரமங்கள் என்ன?
tamil menporul3
பதில்: உருவாக்குவதில் சிக்கல்கள் கிடையாது. ஆனால் எந்த ஒரு உருவாக்குனருக்கும் தன்னுடைய தயாரிப்பை யாராவது பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இங்கே பிரச்சனை என்னவென்றால் தமிழ் மென்பொருட்களைப் பயன்படுத்தும் ஆட்கள் மிகக் குறைவு, இலவசமாகவே கொடுத்தாலுமே கூட. எங்களிடம் கேட்டீர்கள் என்றால் மலேசியாவிலிருந்து வருவார்கள், சிங்கப்பூரிலிருந்து வருவார்கள், அவர்கள் சொல்கிறார்கள் பள்ளிகளில் எல்லாம் உங்களுடைய மென்பொருட்களைப் போட்டு வைத்திருக்கிறோம், குழந்தைகள் எல்லோரும் உங்களுடைய தமிழ் பார்த்துத்தான் வளர்கிறார்கள் என்று சொல்வார்கள். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்குமே தவிர நம்மைப் பொறுத்தவரை உந்து சக்தி இல்லை என்பதுதான் விசயம். மக்கள் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.
கேள்வி: தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழ் மென்பொருள் எந்த அளவிற்கு பயன்படும்?

பதில்: முழுமையான அளவிற்குப் பயன்படும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த ஒரு மொழி தன்னை வந்து மாற்றிக்கொள்ளவில்லையோ அதுதான் அழிந்துபோகும். அதுதான் நாம் வரலாற்றில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிற விசயம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆங்கிலம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மொழிப் பிரச்சனை ஒவ்வொரு விதத்திலும் நடந்துவந்து கொண்டிருக்கும். உதாரணமாக ஆங்கிலம் பேசுபவர்களுக்கு சமற்கிருத கலப்பை நீக்குவதற்காக ஒரு சில விசயங்கள் நடந்திருக்கும். அப்படியான மொழிப்போர் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இப்பொழுது தொழில்நுட்பத்துடன் மொழிப்போர். ஆங்கிலத்தைப் பார்த்தீர்கள் என்றால் எல்லா வார்த்தைகளையும் சொல்லுகிறோம், எல்லாமே grid-ல் இருந்து தன்னை ஆங்கிலம் adapt பண்ணிக்கொள்வதால்தான் வந்துகொண்டிருக்கிறது. இங்கு தமிழிலும் அதுதான் விசயம். எனவே எவ்வளவு தூரம் நீங்கள் adapt பண்ணிக்கொள்கிறீர்களோ அதுதான். இப்பொழுது எல்லோருமே கணினி சார்ந்து வளர்ந்துவந்துவிட்டார்கள். கணினியில் இந்தத் தமிழ் மொழி எவ்வளவு adapt ஆகிறதோ அவ்வளவு தூரம் மொழி நிலைத்து நிற்கும் இல்லையென்றால் இப்பவே அமெரிக்கா செல்லும் பிள்ளைகளுக்கு தமிழ் தேவைப்படுவதில்லை. பிரச்சனை என்னவென்றால் அவர்கள் படிக்காமல் வருகிறார்கள். இந்த மொழி கணினியைப் போன்ற தொழில்நுட்ப சாதனங்களுக்குள் எந்த அளவுக்கு நுழைந்து பயன்பாடு அதிகரிக்கிறதோ அவ்வளவு தூரம் அதனுடைய வாழ்நாள் அதிகமாகும். நாளைக்கு கணினி மாதிரி வேறு ஒன்று வரலாம், அலைபேசியில் தமிழ் வருவதுவும் அப்படிப்பட்ட ஒன்றே. இது மொழி வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான செயல்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Friday 18 September 2015

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் (Tamil Language Rights Federation)

tamil language

ஊடகச் செய்தி

மொழியுரிமை மாநாடு

தமிழ் உள்பட 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக்க இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதிகள் சென்னையில் மாநாடு:
சென்னை பறைசாற்றம் கூட்டறிக்கை வெளியீடு

பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன், தி. வேல்முருகன், சீமான், சுப.உதயகுமாரன், எம்.எச். ஜவாஹிருல்லா, சி.மகேந்திரன் உள்பட
தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday 17 September 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-6

puli thevar9
பாண்டிச்சேரியை விட்டு வெளியேறும் மருதநாயகம், தஞ்சை மண்ணில் தஞ்சம் அடைகிறார். அங்கு அவர் தஞ்சாவூர் மன்னனின் படைப்பிரிவில் காலாட்படையில் ஒரு சிப்பாயாக தனது பணியைத் தொடங்குகிறார். அங்கு சிறந்த முறையில் பணிசெய்து தஞ்சையிலிருந்து தற்போது, ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கு இவர் அனுப்பப்படுகிறார். அங்கு இராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார். அங்கு முகமது கமல் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இவரின் கீழ் மருதநாயகம் அவரது பணியை செய்து கொண்டிருக்கிறார். மருதநாயகத்திற்கு அங்கு தண்டலகர் (Thandalgar), வரி வசூல் (Tax Collector), (Havidar) இந்தப்பெயர்கள்அந்தக்காலகட்டத்தில்வரிவசூல்செய்பவர்களைக்குறிக்கும். வரிவசூல்செய்பவராகமருதநாயகம்பணிசெய்துகொண்டிருக்கும்போதுஆற்காடுநவாப்புடன்நட்புகொள்ளும்சந்தர்ப்பம்அமைகிறது. ஆங்கிலேயர்களினால்மருதநாயகம்சுபேதார் (Subeder) என்ற பட்டம் பெற்று வரி வசூல் செய்கிறார்.
நெல்லூரில் ஒரு சிறு இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் மருதநாயகம் அமர்த்தப்படுகிறார். இந்த இராணுவம் ஆற்காடு நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆற்காடு நவாப்பிற்கு போரில் உதவ வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் மருதநாயகம் பணியில் இருந்தார். ஆற்காட்டில் நவாப் பட்டம் பெறுவதற்காக ஏற்பட்ட வாரிசு போரில், மருதநாயகமும் நவாப்புக்கு ஆதரவாகக் கலந்து கொண்டு, தனது சிறு இராணுவத்தினைக் கொண்டு போரில் கலந்து கொள்கிறார். இந்த கர்நாடக போர்தான் மருதநாயகத்தின் இராணுவ வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது எனக் கூறலாம். இதன் மூலம் ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் நன்மதிப்பை அடைகிறார் மருதநாயகம்.
இந்த கர்நாடகப் போரில்கூட மருதநாயகம் வெள்ளையனின் தலைமையின் கீழ்தான், Stringer Lawrence என்பவரின் கீழ்தான் போரில் கலந்து கொண்டார் மருதநாயகம். இவரின் போர் பயிற்சிகள், போர் முறைகள் அனைத்தும் ஐரோப்பியர்களின் போர் முறையினைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. இவருக்குப் போர் பயிற்சி அளித்தவர்கள் அனைவரும் ஐரோப்பியர்களாக இருந்தனர். இவரின் இராணுவத்தினை செயல்படுத்தும் வீதம், வீரர்களை கட்டுக்கோப்புடன் செயல்பட வைப்பது, வீரர்களுக்கு கட்டளையிடும் செயல் போன்றவை திறமைகளை கவனித்து, சென்னை ஆளுநர் George Pigot என்பவர் மருத நாயகத்தினை பெரிதும் ஆதரித்த வெள்ளையன் ஆவார். இவரின் ஆதரவின் மூலம் இவர் Commandant of company’s sepoy’s என்ற உயர்வை அடைந்தார். பின்னர் 1760-ல் இவர் zenith என்ற ‘all-conquering’ military commandant உயரிய நிலையை அடைந்தார்.

மருதநாயகத்தினைப் பற்றி 50 ஆண்டுகளுக்குப் பிறகு john maccodm என்பவர் கூறுகையில், “இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த துணிச்சலான வீரர், இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை” என்று புகழாரம் சூட்டுகிறார். இவரின் இறப்புக்குப் பின் ஆங்கிலேயர்கள், “எங்களின் போர் முறைகளைக் கற்றுக் கொண்டு அதில் மிகச் சிறந்த வீரர்களாக திகழ்ந்தவர்கள் இருவர், மருதநாயகம் மற்றும் மைசூர் ஹதர் அலி இவர்கள் தான் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

ஆண்களே நுழையத் தயங்கும் சதுப்புநிலம் மற்றும் கடல் ஆராய்ச்சிகளில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப்பெண்!

sadhuppu nilam4
சுற்றுச்சூழலியல் மற்றும் உயிரியல் மேம்பாட்டுத்துறை நிபுணர்; குஜராத் மாநில அரசின் சூழலியல் ஆணையத்தில் சதுப்புநில மேலாளர் என்ற பொறுப்பில் அமர்ந்து 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி மரக்கன்றுகள் நடுவது மற்றும் மேம்பாட்டு பணிகளை கவனிப்பது; தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் இயற்கை வள மேம்பாடு மற்றும் கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் ஈடுபாடு; குஜராத் பாலைவன சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘அரிய மற்றும் சுருங்கி வரும் உயிரினங்கள்’ மற்றும் சதுப்புநில காடுகள் ஆராய்ச்சி; சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆராய்ச்சி; Eco Balance Consultancy நிறுவனர்..
அத்தனை பொறுப்புகளுக்கும் பின்னால் அடக்கமாகவும் அமைதியாகவும் சாதித்து நிற்கிறார் தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி. அவருடன் ஒரு நேர்க்காணல்..
உங்களைப்பற்றி?
தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: அப்பா ஸ்டான்லி சுபமணி, உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர். அம்மா அமலா பேபி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர். இருவரும் இப்போது இல்லை. ஒரு தங்கை, ஒரு தம்பி. இவ்வளவுதான் என் குடும்பம்.
தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுகலை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பில்,. தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரியில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு. சுமார் 4 ஆயிரம் ஆண்கள் மத்தியில் நான் ஒரே பெண்ணாக 5 ஆண்டு காலம் இங்கு பயின்றது ஒரு புதுமையான அனுபவம்.
சதுப்பு நிலம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் ஆர்வம் எப்படி வந்தது?

தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி: சின்ன வயதிலிருந்தே வனம் மற்றும் கடல் பற்றிய விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. அதுதொடர்பான தகவல்களை விரும்பி படிப்பேன். அதனால்தான் +1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, வனம் மற்றும் கடல் தொடர்பான பாடப்பிரிவுகளையே தேர்ந்தெடுத்தேன். எந்தவொரு சூழலும் என் ஆர்வத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென நினைப்பேன். அதனால்தான் படிப்பு முதல் பணி வரை எல்லாமே என் ஆர்வம் சார்ந்ததான வனம் மற்றும் கடல் ஆராய்ச்சிகள் என அமைந்துவிட்டன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 15 September 2015

எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

aasthumaa1
‘ஆஸ்துமா’ என்ற பெயர்தான் அனைவருக்கும் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இதற்கு சித்த மருத்துவத்தில் ‘இரைப்பு நோய்’ என்று பெயர்.
பொதுவாக இந்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். உங்கள் உறவினரோ நண்பரோ அல்லது நீங்களோ கூட அப்படிப்பட்டவராக இருக்கலாம். சிலர் இப்படி பல மருந்துகள் எடுத்துப் பார்த்து சலித்துப்போய் “இப்போதெல்லாம் நான் ஆஸ்துமாவுக்கு மருந்து எதுவும் எடுப்பதில்லை. மூச்சிரைப்பு வந்தால் Inhaler அடித்துக் கொள்கிறேன்” என்பதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு இந்நோய் முற்றிலும் குணமாவதில்லை.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
  1. சரியான மருத்துவமுறையை தேர்வு செய்யாதது. முழுமையான மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் நிவாரணம் மட்டும் எடுத்துக் கொள்வது.
  2. சரியான நோய் கணிப்பு செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது.
  3. போதுமான கால அளவு மருந்துகள் எடுத்துக் கொள்ளாதது.

இதை விரிவாக பார்ப்பதற்கு முன் இரைப்பு நோய் பற்றி சுருக்கமாக பார்ப்போமா.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

தற்காலக் கல்வி முறை பகுதி – 4

வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி சில காரணிகள்
ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச்சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய்விட்டது.
vaalkkaikkum vagupparaikkum1
பிஎச்.டி உள்ளிட்ட  உயர்ந்த   பட்டங்களைப்   பெற்ற   மாணவர்கள்   கூடதன்னம்பிக்கை இழந்தவர்களாக, வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர். நாடு விடுதலை பெற்றுப்பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சிக்கல்கள்நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. கல்வியைப்பெற்ற மாணவர்கள் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற புதிய பட்டத்தைத் தவிரவேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் வேலையில்லாதவர்களைஉற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா? என்று சாடுகிறார் ஒரு கவிஞர். கல்வியின் நோக்கம், கல்வியைக் கற்பவர் தமது வாழ்நாளெல்லாம் தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாகக் கற்றிடும் திறமையுடையவர்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.
vaalkkaikkum vagupparaikkum2
நல்ல பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வழி மாணவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் நடப்பியல் கல்வி, வியாபாரமாகிவிட்ட சூழலில், மாணவர்களையும் பெற்றோர்களையும் கடனாளியாக்குகிறதேயன்றி சிந்தித்து உழைப்பால் உயரும் முதலாளியாக்குவதில்லை. ஒருவித  குற்ற உணர்வை, தாழ்வுமனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் தற்போதைய கல்வி  முறை      ஏற்படுத்துகிறது.      ‘ஒவ்வொரு    தலைமுறையும்    அதற்கு     முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சீர்கேடு அடைகிறது’ என்பது சீனப் பழமொழி.

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனினும் கல்விக்காக ஏங்கும் குழந்தைகள், பள்ளி செல்ல முடியா வறுமையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள், உயர்கல்வி கற்க முடியா மாணவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இன்று தனியார் மயமாகி வரும் சூழலில் ஆங்கிலப்பள்ளிகளின் மோகத்தில் சொத்தை விற்றாவது கல்வி கற்கச் செய்ய வேண்டுமென்று நடுத்தர வர்க்கம் முயல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசுப் பள்ளிகளும் அரசுக் கல்லூரிகளுமே. தனியார் பள்ளிகளின் பெருக்கத்தில் இழுத்து மூடிவிடக்கூடிய நிலையிலுள்ள அரசு பள்ளிகளும், அரசு பொறியியல் கல்லூரிகளும் பெருகி வருவது கண்கூடு. இதனால் அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பதென்பதுகூட கனவாகி உள்ள கீழ்மட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இனி அந்த கதவும் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 14 September 2015

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்

tamil menporul2
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: வணக்கம், என் பெயர் சிபி, சொந்த ஊர் இராமநாதபுரம் அருகில் இருக்கிற RS மங்கலம் வரவனு என்கிற கிராமத்தில் இருக்கிறேன். நான் படித்தது என்று பார்த்தால் நான்கைந்து ஊர்களில் படித்திருக்கிறேன். முதலில் சென்னையில் ஆல்ஃபா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்திருக்கிறேன், அடுத்து தூத்துக்குடியில் ஸ்பிக் நகர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படித்தேன். ஆர்மி பள்ளி என்று சைனிக் பள்ளி அமராவதி நகரில் 3 வருடங்கள் படித்தேன். அதற்கடுத்து 11வது மற்றும் 12வது சென் சேவியர்ஸில் படித்தேன். எங்களது குடும்ப சூழ்நிலையினால் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே நான் நிறைய பள்ளியில் படிக்கவேண்டியிருந்தது. கல்லூரி வந்து B.E. Computer Science சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கிற ஹிந்துஸ்தான் கல்லூரியில் படித்தேன். அதை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். அந்த வேலை பார்த்தப்பிறகு திருப்பி UPSC (Union Publice Service Commission) என்ற தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அதற்கு நடுவில் M.E. Computer Science படித்து முடித்தேன். அதன்பிறகு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று சொல்லலாம். அதே மாதிரி தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் என் வாழ்க்கை என்று பார்த்தால் B.E யை 2008 ல் முடிக்கும் பொழுது, ஒரு சில நண்பர்கள் இணைந்து தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தோம். அதன் பிறகு 2015 வரையிலும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கேள்வி: தமிழில் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

tamil menporul1
பதில்: முதலில் தமிழ் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு இதை ஆரம்பிக்க வில்லை. நாங்கள் ஆரம்பித்தது அறிவு தனிவுடைமையாக இருக்கக்கூடாது, அறிவு பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 2008-ல் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தோம். அப்படி நாங்கள் செய்துகொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு என்ன புரிய ஆரம்பித்தது என்றால், கணினி அறிவியல் மட்டுமே ஒரு பெரிய தடை கிடையாது, ஆனால் தமிழில் கணினி அறிவியல் இல்லாததுதான் கணினியோ, அது சார்ந்த தொழில் நுட்பங்களோ மேலே போவதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்பது மாதிரி பார்த்தோம். மிகவும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ATM Machine ல் ஆங்கிலம் இருக்கிற வரைக்கும் அது பெரிய அளவில் போகவில்லை. அதன் பிறகு எப்பொழுது தமிழில் வந்ததோ அதன் பிறகுதான், ATM பயன்பாடு என்பது பெரிய அளவில் உருவாகியது. இதை புரிந்துகொண்டதற்குப் பிறகுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழில் மிக முக்கியமான சில மென்பொருட்கள் உருவாக்கவேண்டும் என்பது. இந்த விடயத்தை நாங்கள் ஆரம்பித்தது அல்ல, இதற்கு முன்பு பலபேர் செய்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 13 September 2015

இந்தி எதிர்ப்பால் தமிழகம் இழந்தது என்ன? – மீள்பதிவு

ஏப்ரல் 15, 2012 அன்று வெளிவந்த இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.
சமீப காலங்களில் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றிருப்பவர்கள்  மேலே படத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்திருப்பீர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து ஏறத்தாழ  ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட  நிலையில் நடுவண் அரசு  இந்தியை தமிழகத்தில் மென்மையாக பரப்புரை செய்வதைத்தான் இந்தப் பதாகை உணர்த்துகிறது. எத்தனை ஆண்டுகளாயினும் இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசு உறுதியாகத்தான் இருக்கின்றது. இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை தமிழர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர் அன்று. இன்று?
இன்று இந்தி எதிர்ப்பைப் பற்றி பேசும்பொழுது தமிழர்களில் பெரும்பாலானோர்  கூறுவது “ஆமாம், இந்தியைப் படிக்காதே என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வாரிசுகளை எல்லாம் இந்தியைப் படிக்க வைத்து  நடுவண் அரசில் அமைச்சர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள், நாம்தான் அவர்கள் பேச்சைக் கேட்டு மோசம் போனோம்!”. மக்களின் இந்த விரக்தியில் உண்மையில்லாமல் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியை கடுமையாக எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) பின்னர் படிப்படியாக இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் இந்தி பேசுபவர்களின் வாக்குகளைக் கவர சென்னையிலேயே இந்தியில் பதாகைகள் வைக்கும் அளவிற்கு அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

தி.மு.க.வின் இந்த மாற்றத்தால் மக்கள் அடைந்திருக்கும் விரக்தியில் தமிழர்கள் இந்தியை இன்று எளிதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. கடந்த கால இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வை மட்டுமே சார்ந்திருந்திருந்தால், இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பும் பலவீனமடைந்த நிலையில்தான் இருக்கவேண்டும். ஆனால் வரலாற்றைப் பார்க்கையில், இந்தி எதிர்ப்பு போராட்டம் தி.மு.க.வின் கட்சிப் போராட்டம் போன்றல்லாமல் ஓட்டுமொத்த தமிழினத்தின் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 9 September 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-5

pulithevar FI
புலித்தேவர் அவர்களை, அவர்காலத்து புலவர்கள் பலர் புகழ்ந்து பல பாடல்களை பாடியுள்ளனர். அந்தப் பாடல்களை சில இன்றும் நெல்கட்டான் செவ்வல் பகுதி மக்களில் சிலர் பாடுவதை நாம் கேட்கலாம். புலித்தேவரின் வீரத்தினையும் பல்வேறு பாடல்களில் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் மட்டும் இல்லாமல், கிராமங்களில் பாடும் நாட்டுப்புறப்பாடல்களின் மூலமும், திருவிழாக்களின் போது நடைபெறும் நாடகம், கலைநிகழ்ச்சி, தெருக்கூத்துகளிலும் புலித்தேவரின் வீரத்தினையும், அவர் ஆட்சி செய்ததையும், அவர் வெள்ளையனை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டி அடித்ததையும், அவர் மக்களுக்கு செய்த நல்லாட்சி பற்றியும் இந்த திருநெல்வேலி சீமையில் இன்றும் பல கிராமங்களில் நாம் காண முடியும்.
புலித்தேவரின் தோற்றத்தினை புலவர்கள் பலர் அவர்களின் பாடல்களில் கூறியுள்ளதிலிருந்து சில,
புலித்தேவரின் தோல்கள் தேக்கு மரம் போன்றது.
அவரது முகம் அதிகாலை பொன் ஒளி வீசும் ஞாயிறு(சூரியன்) போன்று ஒளிரும் தெய்வீக முகம்.
அவர் நடந்தால் அதிரும் எதிரியின் பூமி.
கண்கள் சிவந்தால் உருளும் எதிரியின் தலைகள்.
அவரின் வால் வீச்சு புயல்காற்றை போன்று இருக்கும்.
அவரது கைகள் இரண்டும் மிக நீண்ட கைகளாக இருக்கும் உதவி என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு வள்ளலாக இருப்பார்.
இவர் வீரம் புலியின் வீரம் போன்று இருக்கும்.
இவரது குரல் கேட்டதும் இடி ஓசை கேட்ட நாகம் ஓடுவது போல் எதிரிகள் ஓடுவர், நடுங்குவர்.
என்று புலவர்கள் இதுவரை வர்ணித்துள்ளனர்.

இவர் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 8 September 2015

சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா, செவ்வாய் கிரகத்திலா?

sidhdha 3
“டாக்டர்… சென்னை அரும்பாக்கம் தவிர வேறு எங்கேயும் சித்த மருத்துவமனைகள் கிடையாதா…?“ இப்படி கேட்டார் மத்திய அரசு பணியில் இருக்கும் ஒருவர். ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அரசு சித்த மருத்துவமனைகள் பற்றிய மக்களுக்கான அறிமுகம் அவ்வளவுதான்.
இந்த கட்டுரையில் நிறுவனமயமாக்கப்பட்ட சித்த மருத்துவமனைகள் பற்றியும், அதன் வரலாற்றையும் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
எல்லாத் துறைகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடத்தில் அறிவு இருந்து வந்திருந்தாலும், அறிவைக்கூட தனியுடைமையாகவே கருதி வந்திருக்கிறோம். யாரோ ஒரு வள்ளுவரையும், ஒரு கணியன் பூங்குன்றனாரையும், ஒரு தேரையரையும், ஒரு யூகியையும் தவிர பெரும்பான்மையானவர்கள் சிறிய வட்டம் போட்டு அதற்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
நாளந்தா பல்கலைக்கழகம் போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் தோன்றியிருந்தும், மூடநம்பிக்கை என்பதையே மூலதனமாகக் கொண்ட பெரும்பான்மை வாதம், அறிவை ஆடிமாதத்தில் ஆற்றில் கொட்டிவிட்டது. இதற்கு உலகை சுற்றி வந்த பல பயணிகள் நம்மைப்பற்றி கூறியவைகள் சாட்சிகளாக வரலாற்றில் இருக்கின்றன.

எது எப்படியோ, வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ நிர்வாகம் வந்தது. சித்த மருத்துவம் பிழைத்தது. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday 7 September 2015

உலகெங்கிலும் அகதிகளின் அவலநிலை

THAILAND-SEASIA-MIGRANTS
ஏதிலி அல்லது அகதி என்ற சொற்களோ, புலம் பெயர்தல் என்ற கருத்தோ தமிழருக்குப் புதிதல்ல. ஈழத்தமிழர் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவர்களில் சிலர் தமிழக அகதிகள் முகாம்களில் சிறைக்கைதிகள் போன்ற கொடுமைகளை எதிர்கொள்ளும் வாழ்வையும் அறியாதவர் யார்? அகதி என்றால் வாழ்வதற்கு அச்சம் தரக்கூடிய சூழலில் இருந்து தப்பிச் சென்று வேறொரு நாட்டில் புகலிடம் பெறுபவர் என்றும்; பிழைப்பு தேடி வேறு நாட்டிற்குச் சென்று வாழ்வது புலம் பெயர்தல் என்றும் அடிப்படையில் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.
இனஅழிப்பு, வன்முறை ஆகியவற்றில் இருந்து உயிர் தப்பி ஓடுபவர்களையும்; பஞ்சம் பிழைக்கச் செல்பவர்களையும் இவ்வாறாக சட்டப்படி ஒரு நாட்டில் குடிபுகுவதை வகைப்படுத்துவது வரை மட்டுமே அடிப்படையில் வேறுபாடு. எம்முறையில் புகலிடம் தேடிச் சென்றாலும், புலம்பெயர்பவர் வாழ்வு ஆரம்பக் காலங்களில் போராட்டம் மிக்கதாகவே இருக்கும். வேரடி மண்ணுடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட செடிகள் உயிர்பிழைக்கத் தத்தளிக்கும் நிலையுடன் ஒப்பிட வேண்டிய வாழ்வு அது. இந்த நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும், சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் துயரங்கள் பல நிறைந்தது. இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

agadhigal1
இன்றைய நாளில் உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். மனிதநேய அடிப்படையில் அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளும் பொருளாதாரச் சுமையை சுமக்கின்றன. பாகிஸ்தான் பிரிவதற்குக் காரணமாக இருந்த வன்முறையில் இருந்து தப்பிய கிழக்குப்பாக்கிஸ்தான் அகதிகள் அலையலையாக 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday 6 September 2015

தற்காலக் கல்வி முறை பகுதி -3

ஆசிரியர் – மாணவர் உறவு
aasiriyar1

கல்லூரிப் பேராசிரியர் பணி அவ்வளவு எளிதல்ல. அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவர். நம்முடைய திரைப்படங்கள் அவர்கள் மனதில் பதிய வைத்துள்ள கல்லூரி பற்றிய பதிவுகள் நடப்பியலுக்கு அப்பாற்பட்டவை. இளமையில் அனுபவிக்கக் கூடிய உல்லாசமான பருவ வயது குறும்புகளை வெளிப்படுத்தவே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பதிவுகளே மிகுதி. கல்லூரியில் முறையாகக் கற்று கடினமாக உழைத்து, கல்வியினால் முன்னேறிய ஏழை மாணவன் செல்வந்தனமாக மாறுவது போல எந்தப் படத்திலாவது ஒரு காட்சியாவது பதிவாகியிருக்கிறதா என்றால். . . . சொல்லும்படி இல்லை.

கல்லூரி என்றாலே விதவிதமான ஆடை அலங்காரங்கள், முடி அலங்காரங்கள், கலாட்டா, கேலி, கிண்டல். . . . . இவை ஒருபக்கம். கல்லூரி ஆசிரியர்களை நையாண்டியாக்கி சித்தரிக்கும் காட்சிகள் மறுபக்கம். இந்த நினைவோடு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் முறையாக பாடம் நடத்தும் ஆசிரியர்களையும், முறையாக நடக்கும் வகுப்புகளையும் விரும்புவதில்லை. இயல்பிற்கு மாறாக, அவனுடைய சுதந்திரத்தைப் பறிப்பது போல கருதி அதற்கு எதிர்வினையாற்ற முயல்கிறான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday 3 September 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-4

puli thevar9
புலித்தேவர் திருவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றிட படையுடன் சென்று போரிட்டார். இவரின் படையின் பாய்ச்சலுக்கு முன்பு, ஆற்காடு நவாப்பின் படைகளும், வெள்ளையனின் இராணுவத்தினர்களின் போய்வாய் பீரங்கி குண்டுகள், கூலிப்படையினர் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கோட்டையை விட்டு தலைத்தெறிக்க ஓடினர், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு. புலித்தேவரின் இந்த வெற்றி மதுரை நகர் முழுவதும் பரவியது. மதுரை பாளையக்காரர்கள் அனைவரும் புலித்தேவருக்கு ஆதரவு தர முன்வந்தனர். திருவில்லிபுத்தூர் கோட்டை இருந்த இடம் தற்பொழுது கோட்டைத் தலைவாசல் என்று அழைக்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் கோட்டையை புலித்தேவர் 1755ல் கைப்பற்றினார்.
பின் திருநெல்வேலியில் இருந்த ஆற்காட்டு நவாப்பின் படையையும், வெள்ளையர்களையும் விரட்டியடிக்க திட்டமிட்டார் புலித்தேவர். திருநெல்வேலியில் இருந்த மாபூசுக்கான் புலித்தேவரின் படை வருவதை அறிந்த உடனே, கிழக்கு பாளையக்காரர்களையும் வெள்ளையர்களையும் அழைத்து ஒரு கூட்டம் கூட்டி, அதில் புலித்தேவருக்கு எதிராக போரில் எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும், உதவினால் உங்களுக்கு பதவி பணம், பொன், துரைமார்களிடம் நன்மதிப்பு ஆகியவைகள் கிடைக்கும் என்று நயவஞ்சகமான வார்த்தைகளைக் கூறி, புலித்தேவருக்கு எதிராக திரும்பினான். போரில் கிழக்கு பாளையக்காரர்கள் அனைவரையும் வெள்ளையன் அணியில் சேர்ந்து நின்றனர். இந்தப் போர் 1756ல் நடந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்

Irudhayam5
தமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ → இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது. தமிழில் மீது உள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன்.
சரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதை பற்றிய கட்டுரை இது.
முதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலது மேல் அறை உடல் முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ் அறைக்கு தள்ளிவிடுகிறது. வலது கீழ் அறை அந்த இரத்தத்தை நுரையீரலுக்குள் தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு அந்த இரத்தத்துடன் கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடது மேல் அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத் தள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவையே இதய வால்வுகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday 2 September 2015

தொழில்நுட்ப, பொருளாதார ஆய்வுகளும், சோதனைகளும் முதலீடுகளுக்கு இன்றியமையாதது.

aaivugal1
நாதன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகே, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் நடத்தி வந்தார். வணிகம் அதிகரித்ததால் புறநகர் பகுதியில் சொந்த இடத்தில் நிறுவனத்தை மாற்ற எண்ணினார். மிகவும் முயற்சி செய்து சென்னைக்கு வடக்கே புறநகர்ப் பகுதியில் பத்தாயிரம் சதுரடி நிலத்தை வாங்க முடிவு செய்தார். வளரும் தனது வணிகத்துக்காகவும், இட நெருக்கடி காரணமாகவும் இந்த முடிவை தான் எடுப்பது சரியானது என்று அவர் தீர்க்கமாக நம்பினார். பத்தாண்டுகளாக வாடகை இடத்தில் நிறுவனம் நடந்து வந்ததும் அந்த முடிவை வலுப்படுத்தியது.
ஆறே மாதங்களில் தமது நிறுவனத்துக்கான கொட்டகை ஒன்றை நன்கு செலவு செய்து நிறுவி, வேலையைத் துவங்கினார், நிலம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் பிற தேவைகள் என செலவு மொத்தம் எட்டு கோடியைத் தொட்டது. அந்த எட்டு கோடி ரூபாயில் மூன்றில் இருமடங்கை வங்கிக் கடனாகவும், மீதியை தமது சொத்தை விற்றும் நாதன் திரட்டினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

விவசாய நிலங்களை விற்கமாட்டேன்.. விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டேன்..

குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார் தமிழக பெண் விவசாயி அமலாராணி. அவருடன் ஒரு நேர்காணல்:
vivasaayam2
உங்களைப்பற்றி 
அமலராணி: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தான் எனது சொந்த ஊர். நான் ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி. எனது கணவர் திருமலை கணேசன், சொந்தமாக மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 15 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன்.

வசதியுள்ள குடும்பம். பிறகு ஏன் விவசாயம்?  
அமலாராணி: நான் இப்போதுதான் வசதி வாய்ப்புடன் இருக்கிறேன். அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் விட்டுச்சென்ற விவசாய நிலங்களை விற்கவும் மனமில்லை. தரிசாகவும் போட மனமில்லை.  அதுவும் போக எனக்கு விவசாயத்தில் அதிக ஆர்வமுண்டு. அதனாலேதான் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன். வசதி வாய்ப்புள்ளவர்கள் விவசாயம் செய்யக்கூடாதா என்ன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday 1 September 2015

தற்காலக் கல்வி முறை பகுதி -2

ஆசிரியர்- மாணவர் உறவு

aasiriyar- maanavar4
ஒரு சொல் சிறுசொல் அதுகுரு சொல்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

இது திருமந்திரப்பாடல் வழி வெளிப்பாடலாகும் குரு – சீடர் உறவு நிலை. இது குருகுலத்தில் பயிலும் சீடர்கள் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள். குருகுலத்தில் வாழ்க்கைக் கல்வியாகிய சுயஒழுக்கம், பொது ஒழுக்கம், தன்னமின்மை, தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்தல், வேற்றுமையின்மை, நட்பு பாராட்டல், பிறருக்கு உதவுதல் இவை குருகுல மாணவர்கள் கற்றுக் கொண்ட வாழ்க்கைப்பாடங்கள். குருகுல முறையில் அனைவருக்கும் சமமான கல்வி தராமை, ஓராசிரியர் போன்ற குறைகளும் உள்ளன. அது போல  நிறைகளும் உள்ளன. குரு – சீடன் முறையில் குரு சொன்னதை செய்து முடிப்பவன் சீடன். தற்கால ஆசிரியர் – மாணவர் உறவில் ஆசிரியர் சொன்னதை உடனே மறந்து விடுபவன் மாணவன். இந்து மதத்தில் குரு தெய்வமாகவே வணங்கப்படக் கூடியவர். கபீர்தாசர் கடவுளும் குருவும் ஓரிடத்தில் தோன்றினால் யாரை வணங்குவது என்பதற்கு குருவைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்கிறார். கடவுளைக் காட்டியவரே குரு என்பதால் குருதான் மேன்மையானவர். கடவுளை மட்டுமா காட்டுபவர் குரு?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ள தமிழன்

jaadhikkaai2
மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாவட்டம் ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியராஜா. அவருடன் ஒரு நேர்க்காணல்:
ஜாதிக்காய் சாகுபடியின் சாதகமான வானிலை என்னென்ன?
சுப்பிரமணியராஜா: ஜாதிக்காய் மரங்கள் பசுமை மாறாத தாவர வகையைச் சார்ந்தது. அடர்ந்த இலைப் பரப்புகளைக் கொண்டு இருபது மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது. ஆண்டில் சராசரி மழை அளவு 150 செ.மீ. மற்றும் அதற்கு மேலாகக் கிடைக்கும் கதகதப்பான ஈரப்பதம் உள்ள சூழலில் மட்டுமே ஜாதிக்காய் மரம் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகள் இதற்கு ஏற்ற சூழ்நிலை ஆகும். தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

ஜாதிக்காய் மரங்களை சமவெளியில் வளர்ப்பது எப்படி சாத்தியமாகியது?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.