Sunday 13 September 2015

இந்தி எதிர்ப்பால் தமிழகம் இழந்தது என்ன? – மீள்பதிவு

ஏப்ரல் 15, 2012 அன்று வெளிவந்த இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.
சமீப காலங்களில் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றிருப்பவர்கள்  மேலே படத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்திருப்பீர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து ஏறத்தாழ  ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட  நிலையில் நடுவண் அரசு  இந்தியை தமிழகத்தில் மென்மையாக பரப்புரை செய்வதைத்தான் இந்தப் பதாகை உணர்த்துகிறது. எத்தனை ஆண்டுகளாயினும் இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசு உறுதியாகத்தான் இருக்கின்றது. இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை தமிழர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர் அன்று. இன்று?
இன்று இந்தி எதிர்ப்பைப் பற்றி பேசும்பொழுது தமிழர்களில் பெரும்பாலானோர்  கூறுவது “ஆமாம், இந்தியைப் படிக்காதே என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வாரிசுகளை எல்லாம் இந்தியைப் படிக்க வைத்து  நடுவண் அரசில் அமைச்சர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள், நாம்தான் அவர்கள் பேச்சைக் கேட்டு மோசம் போனோம்!”. மக்களின் இந்த விரக்தியில் உண்மையில்லாமல் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியை கடுமையாக எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) பின்னர் படிப்படியாக இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் இந்தி பேசுபவர்களின் வாக்குகளைக் கவர சென்னையிலேயே இந்தியில் பதாகைகள் வைக்கும் அளவிற்கு அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

தி.மு.க.வின் இந்த மாற்றத்தால் மக்கள் அடைந்திருக்கும் விரக்தியில் தமிழர்கள் இந்தியை இன்று எளிதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. கடந்த கால இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வை மட்டுமே சார்ந்திருந்திருந்தால், இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பும் பலவீனமடைந்த நிலையில்தான் இருக்கவேண்டும். ஆனால் வரலாற்றைப் பார்க்கையில், இந்தி எதிர்ப்பு போராட்டம் தி.மு.க.வின் கட்சிப் போராட்டம் போன்றல்லாமல் ஓட்டுமொத்த தமிழினத்தின் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment