Tuesday 8 September 2015

சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா, செவ்வாய் கிரகத்திலா?

sidhdha 3
“டாக்டர்… சென்னை அரும்பாக்கம் தவிர வேறு எங்கேயும் சித்த மருத்துவமனைகள் கிடையாதா…?“ இப்படி கேட்டார் மத்திய அரசு பணியில் இருக்கும் ஒருவர். ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அரசு சித்த மருத்துவமனைகள் பற்றிய மக்களுக்கான அறிமுகம் அவ்வளவுதான்.
இந்த கட்டுரையில் நிறுவனமயமாக்கப்பட்ட சித்த மருத்துவமனைகள் பற்றியும், அதன் வரலாற்றையும் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
எல்லாத் துறைகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடத்தில் அறிவு இருந்து வந்திருந்தாலும், அறிவைக்கூட தனியுடைமையாகவே கருதி வந்திருக்கிறோம். யாரோ ஒரு வள்ளுவரையும், ஒரு கணியன் பூங்குன்றனாரையும், ஒரு தேரையரையும், ஒரு யூகியையும் தவிர பெரும்பான்மையானவர்கள் சிறிய வட்டம் போட்டு அதற்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
நாளந்தா பல்கலைக்கழகம் போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் தோன்றியிருந்தும், மூடநம்பிக்கை என்பதையே மூலதனமாகக் கொண்ட பெரும்பான்மை வாதம், அறிவை ஆடிமாதத்தில் ஆற்றில் கொட்டிவிட்டது. இதற்கு உலகை சுற்றி வந்த பல பயணிகள் நம்மைப்பற்றி கூறியவைகள் சாட்சிகளாக வரலாற்றில் இருக்கின்றன.

எது எப்படியோ, வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ நிர்வாகம் வந்தது. சித்த மருத்துவம் பிழைத்தது. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment