Wednesday 9 September 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-5

pulithevar FI
புலித்தேவர் அவர்களை, அவர்காலத்து புலவர்கள் பலர் புகழ்ந்து பல பாடல்களை பாடியுள்ளனர். அந்தப் பாடல்களை சில இன்றும் நெல்கட்டான் செவ்வல் பகுதி மக்களில் சிலர் பாடுவதை நாம் கேட்கலாம். புலித்தேவரின் வீரத்தினையும் பல்வேறு பாடல்களில் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் மட்டும் இல்லாமல், கிராமங்களில் பாடும் நாட்டுப்புறப்பாடல்களின் மூலமும், திருவிழாக்களின் போது நடைபெறும் நாடகம், கலைநிகழ்ச்சி, தெருக்கூத்துகளிலும் புலித்தேவரின் வீரத்தினையும், அவர் ஆட்சி செய்ததையும், அவர் வெள்ளையனை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டி அடித்ததையும், அவர் மக்களுக்கு செய்த நல்லாட்சி பற்றியும் இந்த திருநெல்வேலி சீமையில் இன்றும் பல கிராமங்களில் நாம் காண முடியும்.
புலித்தேவரின் தோற்றத்தினை புலவர்கள் பலர் அவர்களின் பாடல்களில் கூறியுள்ளதிலிருந்து சில,
புலித்தேவரின் தோல்கள் தேக்கு மரம் போன்றது.
அவரது முகம் அதிகாலை பொன் ஒளி வீசும் ஞாயிறு(சூரியன்) போன்று ஒளிரும் தெய்வீக முகம்.
அவர் நடந்தால் அதிரும் எதிரியின் பூமி.
கண்கள் சிவந்தால் உருளும் எதிரியின் தலைகள்.
அவரின் வால் வீச்சு புயல்காற்றை போன்று இருக்கும்.
அவரது கைகள் இரண்டும் மிக நீண்ட கைகளாக இருக்கும் உதவி என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு வள்ளலாக இருப்பார்.
இவர் வீரம் புலியின் வீரம் போன்று இருக்கும்.
இவரது குரல் கேட்டதும் இடி ஓசை கேட்ட நாகம் ஓடுவது போல் எதிரிகள் ஓடுவர், நடுங்குவர்.
என்று புலவர்கள் இதுவரை வர்ணித்துள்ளனர்.

இவர் ஆட்சி செய்த காலத்தில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment