Wednesday 31 August 2016

இந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்?


Siragu Navodaya School1
கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பயில வாய்ப்பு.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. புதிய கல்விக் கொள்கை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளி கல்வித்திட்டம் தமிழகத்துக்கும் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தின் கீழ், 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளிதொடங்கப்பட்டது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 30 August 2016

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இன்றைய நிலை என்ன?


Siragu-assembly1

தமிழக சட்டபேரவை கூட்டம், நடக்க ஆரம்பம் ஆனதில் இருந்தே வெளிநடப்பு என்ற ஒன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப் பேரவை கூட்ட விவாதத்தின்போது, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளும் சரி, எதிர் கட்சிகளின் நடவடிக்கைகளும் சரி திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு துறை ரீதியான விவாதத்தின் போதும், இது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் நடந்தது, உங்களுடைய ஆட்சிக் காலத்தில் என்ன செய்தீர்கள் என்னும் குழாயடிச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம், நம்முடைய தொகுதியின் தேவை என்ன, அடுத்து மக்களுக்கு என்ன நலத்திட்ட உதவிகளை செய்யலாம், அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளதா என்று பார்க்காமல், ஒருவரை ஒருவரை சரமாரியாக குற்றம் சுமத்திக் கொண்டு, சட்டப் பேரவையின் பொன்னான நேரத்தை வீணடிப்பதுதான் தங்கள் நிலைப்பாடாகக் கொண்டுள்ளனர் என்பதை அழுத்தம், திருத்தமாக நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 25 August 2016

கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும்

Siragu karpu1

தமிழ்ச் சமுதாயத்தில் வரையறுக்கப்பெற்றுள்ள, அக இலக்கண மரபுகள் என்பன தனித்தன்மை வாய்ந்தன. தமிழர்கள் தங்களுக்கு அமைத்துக்கொண்ட இல்வாழ்க்கை முறையின் செறிவுகள் அக இலக்கண மரபுகளாக உறுதிப்படுத்தப்பெற்றன. தமிழ் இலக்கண நூல்களில் அகத்திணை பற்றிய பொதுவான செய்திகள் தரப்பெற்று, அதன் பின்னர் களவு, கற்பு என்று இரண்டு வாழ்க்கை முறைகள் அமைத்துக் கொள்ளப்பெற்றுள்ளன. அகத்திணை பற்றிய பொதுவான செய்திகள் என்பதில் முக்கிய இடம்பெறுவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை போன்ற திணைப் பகுப்புகள் ஆகும். இவற்றிக்கென தனித்த இடம், பொருள், ஒழுக்கம் உண்டு. அவை காலந்தோறும் மாற்றமடையாமல் ஏற்கப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வொழுக்க நடைமுறை தளர்ந்து அனைத்து நிலமும் ஒன்று கலந்து நின்றாலும் படிக்கவும் பண்பாட்டை அறிந்து கொள்ளவும் இவை அடையாளங்களாக நிற்கின்றன.


இதற்கு நிலையில் கைகோள் எனப்படும் இரு வாழ்க்கை நிலைகளை அக இலக்கண நூல்கள் காட்டுகின்றன. கைக் கொள்ளப்பெறும் வாழ்க்கை முறை கைகோள் ஆகின்றது. காதல் சார்ந்த வாழ்க்கை முறை களவு எனவும், திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 24 August 2016

இந்தியப் பொருளாதார மாற்றம் – பகுதி – 5


Siragu Indian economy2

பெயர்பெற்றோர்களின் வட்டாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிலகங்களையும், சுரங்கங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், இலாபநோக்கைக் கொண்ட தனியார் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அமைக்கவும், கோயில்களையும், ஆசிரமங்களையும், மரபுவழியான ‘அறிவியல்’களான சோதிடம், யோகம், ஆயுர்வேதம் ஆகியவற்றைப் பரப்பும் ‘ஆய்வு நிறுவனங்களை’ உருவாக்கவும் விவசாய நிலங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் வாங்கி ஏறத்தாழ இலவசமாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டுக்குழுமத்துறைக்கு வழங்கிவிட்டன.
கம்யூனிஸ்டுக் கட்சிகளும், தாராளமயத்திற்கு ஆதரவான பிற கட்சிகளுக்கு இந்த ‘நிலத்தைப் பிடுங்கும்’ செயலில் உடனாளிகளாக இருந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நானோ கார் உற்பத்திசெய்யும் தொழிலகத்தை உருவாக்க, டாட்டா குழுமத்திற்கு நடைமுறையில் 997 ஏக்கர் வளமான விவசாய நிலத்தை மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கம் பரிசாகவே தந்துவிட்டது. விவசாயிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்த தீவிர எதிர்ப்பினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு இடம்பெயர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 23 August 2016

திருப்பதியை கலக்கும் தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி!


திருப்பதியில் முகநூல் பக்கம் மூலம் பெண்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் ஒரு தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி!
 Siragu-IPS-lady1

திருப்பதி நகரக் காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், ஆந்திரா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திருப்பதி நகர முதல் பெண் எஸ்.பி. என்ற பெருமையையும் ஜெயலட்சுமி பெற்றுள்ளார். ஒருபெண் நிர்வகிக்கிற பகுதியில் முதலில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் ஜெயலட்சுமி. முகநூலில் Tirupati SHE TEAM என்றொரு பக்கத்தை பெண்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கி, புகார்கள் பெற்று அதனடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அசத்தி வருகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 22 August 2016

புதிய தேசிய கல்விக் கொள்கை – பள்ளிக் கல்வி

கல்விக் கொள்கைகள் கடைசியாக 1986-ம் வருடம் உருவாக்கப்பட்டு, 1992-ம் ஆண்டு அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன் பின் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்து விட்டன. புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் கால வெளியில் நிகழ்ந்திருக்கும் தேசிய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களை கணக்கில் கொண்டாக வேண்டும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்று தேசத்தின் கால, தூர இடைவெளிகளை பெருமளவு குறைத்திருக்கிறது. கிளர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள்தான் மிக வேகமாக சமூகத்தில் பரவுகின்றன. இது சமூக எண்ணங்களை எதிர்மறையாகவே வைத்திருக்கிறது. பொருளாதார மாற்றங்கள், மக்கள் சமூக ஒத்திசைவுடன், சேர்ந்து வாழ்வதற்கான தேவையை குறைத்திருக்கிறது – அதாவது, பொருளாதார சுதந்திரத்தையும் எனவே பொருளாதார தன்னிறைவையும் வழங்குகிறது. இதன் மறுவிசையாக சமூகத்தின் அற உணர்வு குறைகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள், சமூகத்தின் இயங்கு தளத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கிறது. சமூகம் அதன் மாறிய இயங்குதளத்தில் உராய்வின்றி செல்ல வேண்டுமானால், சமூகத்தின் எண்ணங்களைக் கட்டமைக்கும் கல்வி, அந்த இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். மனனம் செய்யும் திறனையே பிரதானமாக்கப்பட்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், சிந்தனைத் திறன் மழுங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, கிளர்ச்சியூட்டும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதும், மனிதனின் புற உலகத்துடனான நுண்ணிய உறவுகள் உணரப்படாமல் செல்வதும் நிகழ்கிறது.

vairam minnum fi


புதிய தேசிய கல்விக் கொள்கை, சமூகத்தின் இன்றைய இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு கல்வியை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். சமூகத்தின் எதிர்மறை இயக்கங்களை இல்லாமல் செய்யும் சமூக எண்ணங்களை உற்பத்தி செய்வதாக அந்தக் கல்வி அமைய வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரம் உராய்வின்றி செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் திறமைகளை கல்வி அளித்தாக வேண்டும். அதே நேரத்தில், மாணவர்களின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன்களையும் பண்படுத்த வேண்டும். அதாவது சமூகத்திற்கு அளிக்கப்படும் கல்வி ஒரே நேரத்தில் அக மற்றும் புற நோக்கு உடையதாக இருக்கு வேண்டும். அக நோக்கு சமூக உறவுகளை மேம்படுத்தும். புற நோக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்தும். அவை இரண்டும் ஒத்திசைவுடன் இருந்தால் வாழ்க்கை முழுமையாக அமையலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 21 August 2016

அழிந்த அணையும், பெருவெள்ளமும் தொன்மையான நாகரிகமும்


அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று உருவானதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன என்று விளக்கமளித்த அறிவியல் கட்டுரை ஒன்றும்; அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று அழிந்தது என்ற ஒரு கற்பனைக் கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஒன்றும் அடுத்தடுத்து வெளியாகி அண்மையில் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்தன.

Siragu Alindha anai1


அணை உடைந்து, பெருவெள்ளம் ஏற்பட்டு இறுதியில் நாகரிகம் ஒன்று உருவானது நிகழ்ந்தது சீனாவில். மாமன்னர் யூ உருவாக்கிய “ஷா குலப் பேரரசு” (Xia dynasty) குறித்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டு, மொஹஞ்சதாரோ நகரம் அழிந்ததால் அந்நகரம் கைவிடப்பட்டது என்பது சுதந்திர தினத்திற்காக பாலிவுட் திரையுலகம் வெளியிட்டுள்ள “மொஹஞ்சதாரோ” படம் கூறும் கதை. இவையிரண்டையும் அடுத்தடுத்துத் தருகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

காட்டுச்செடியின் அனுபவம்(சிறுவர் சிறுகதை)


Siragu-kaattuchchedi4

ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அது தினமும் அழகிய மலர்களைப் பூக்கச் செய்தது. இருந்தும் என்ன பயன்? யாரும் அந்தச்செடியின் பெரிய வண்ணப்பூக்களின் அழகை நின்று இரசித்ததில்லை. அதன் நறுமணத்தை நுகர்ந்து கிளர்ச்சி கொண்டதுமில்லை. தினமும் காலையில் பூக்க வேண்டியது, மாலையில் உதிர்ந்து சருகாக வேண்டியது. இப்படி வாழ்க்கை எந்தஒரு மாற்றமுமில்லாமல் சென்றுகொண்டிருந்தது. இத்தனைக்கும் இந்தக்காட்டில் ஏராளம் பறவைகள், மிருகங்கள் இருக்கத்தான் செய்தன. இருந்தும் ஒன்றிற்குக்கூடவா இரசிக்கும் மனோபாவம் இல்லாமல் போய்விட்டது?. பாராட்டுக்களுக்காக ஏங்கிக்கிடந்தது அந்தக் காட்டுச்செடி.

ஒருநாள் அந்தச்செடி இருக்கும் பாதைவழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது. உணவுக்காக இலைதழைகளைத் தேடி சிவிங்கி இப்படி வருவது வழக்கம்தான். ஆனால் இந்தமுறை அது தனது குட்டியடன் வந்திருந்தது. செடியின் அழகு குட்டியை ஈர்த்திருக்க வேண்டும். குட்டிகளுக்குத்தானே அழகான விஷயங்கள் பிடிக்கும். அதுசெடியின் அருகில் வந்து பார்த்தது.


“இந்தப்பூக்கள்ல்லாம் அழகா இருக்குலமா?”– என்று கேட்டது. பெரிய சிவிங்கி ஒருமலரைப் பறித்துக் குட்டியின்தலையில் வைத்துப் பார்த்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 18 August 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி -4

Illustration of a graph where the figures suddenly fall through the floor

கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்
(தொடர்ச்சி)

இப்படிப் பொருளாதாரத்துக்குச் சக்தியை அளித்தாலும், 1996 தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. பின்னர் குறுகிய கால அரசாங்கங்கள் சில அமைந்ததன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முதன்மைக் கட்சித்தலைவரான அடல் பிஹாரி வாஜ்பேயி, 1999 அக்டோபர் 13 அன்று பிரதமர் ஆனார்.

பி ஜே பி அரசு

சுதேசி, ஒருங்கிணைந்த மானிடம் என்ற மூன்றாவது வழி ஆகியவற்றின்மீது விசுவாசம் கொண்டதாகக் காட்டிக் கொண்டாலும், பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசாங்கம், 1991இல் காங்கிரஸ் அரசாங்கம் இயக்கிவிட்ட நவதாராளமயச் சீர்திருத்தங்களை மிகுந்த உற்சாகத்தோடு முன்னெடுத்துச் சென்றது.

அதிகாரத்தில் இல்லாத காலத்தில், பிஜேபி, உள்நாட்டு தாராளமயமாக்கல் (அதாவது, தனியார்மயமாக்கல்) என்பதைத் தான் ஆதரிப்பதாகவும், அயல்நாட்டுப் போட்டியிலிருந்து இந்தியப் பெருவணிகங்களைக் காப்பாற்றும் நோக்கில் அயல்நாட்டு தாராளமயமாக்கலை (அதாவது, உலகமயமாக்கலை) எதிர்ப்பதாகவும் விளக்கம் கூறியது.


ஆனால் அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில், தனது இந்தியத் தொழில் பாதுகாப்புக்கொள்கையை அது கைவிட்டது, பொருளாதாரத்தின் முக்கியப் பகுதிகளான நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், காப்பீட்டுத் தொழில்துறை ஆகியவற்றையும் அயல்நாடுகளுக்குத் திறந்துவிட்டது, அறிவுத்துறை உரிமைச் சட்டங்களையும் தாராளப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக, பிஜேபி அரசாங்கம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, கல்வித்துறைத் தனியார்மயமாக்கலை எல்லாத் தளங்களுக்கும் கொண்டுசென்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 17 August 2016

இணையத்திலும் தமிழால் இணைவோம்


Siragu-Tamilaal-inaivom4

மாதா, பிதா, கூகுள் என்று கூறுமளவுக்கு இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நாமும் இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப நம் திறனை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி. அம்மொழியை நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சமூக வலைதளத்திலும், மின் அஞ்சல்களை அனுப்பும் போதும் எவ்வாறு தட்டச்சு செய்து பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

இணைய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கூகுளின் ஒரு மென்பொருள் தான் கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ்.


கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை நமது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 16 August 2016

புதிய தேசிய கல்விக் கொள்கை: ஏன் இந்த எதிர்ப்பு?


Siragu India Education1

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், இந்தியாவின் கல்வித்துறையை மறு சீரமைப்பு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் வரைவு அறிக்கையை தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கும், மேலான கருத்துக்களுக்குமாக முன் வைத்திருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் போலவே மத்திய அரசு எது செய்தாலும், அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மாநிலங்களுக்கு எதிராகவே என்னும் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பின் முன்னணியில் இருப்பது அரசியல் கட்சிகள். பின்னர் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள். மிக விரைவில் ஆசிரியர்களும் இதில் சேர்ந்து விடுவதை எதிர்பார்க்கலாம்.

Siragu India Education3





புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் அறிக்கை கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUEPA) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம்தான் தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் செயலக அலுவலகமாக பணியாற்றியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை அதன் இணையதளத்தில் பார்வைக்கு உள்ளது. ஆகஸ்ட்-16 ஆலோசனைகள் அளிப்பதற்கான கடைசி தினம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 15 August 2016

அடால்ப் ஐச்மன்-வழக்கு விசாரணை ஒரு பார்வை


eelam-fi

அடால்ப் ஐச்மன் (Adolf Eichmann) ஜெர்மனிய நாட்டினைச் சேர்ந்த  இராணுவ அதிகாரி  (lieutenant colonel).  இரண்டாம் உலகப் போரின்போது  பல்லாயிரக்கணக்கான யூத மக்களின் இன அழிப்பை நடத்தியவர். 6 மில்லியன் யூத மக்களைக் கொல்வதவற்கான வழிமுறைகளைக் கட்டளையிட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட நாஜி ஜெர்மனியர்களை தண்டிக்க நூரெம்பெர்க் நீதி விசாரணை நடந்தது (Nuremberg trial). அந்த விசாரணையில் இருந்து தப்புவதற்காக ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் அந்த நீதி விசாரணையில் தண்டிக்கப்படுகின்றனர். அதில் இருந்து தப்பித்துச் சென்றவர் அடால்ப் ஐச்மன். பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்து இறுதியில் தன் பெயரை ரிக்கார்டோ கிளெமென்ட் என (Ricardo Klement) மாற்றிக் கொண்டு அர்ஜென்டினாவில் மறைந்து வாழ்கின்றார்.


இரண்டாம் உலகப் போருக்குப் பின் இஸ்ரேல் என்ற நாடு யூத மக்களைக் கொண்டு உருவாகின்றது. தங்கள் மக்களின் இன அழிப்பிற்காக நீதிகோரி இஸ்ரேல் நாட்டின் அரசு யூத மக்களின் இன அழிப்பில் ஈடுபட்ட மறைந்து வாழும் நாஜி அதிகாரிகளைத் தேடும் வேட்டை நடத்துகின்றது. அந்தத் தேடுதல் வேட்டையில் அர்ஜென்டினாவில் மறைந்து வாழும் அடால்ப் ஐச்மனை கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கடத்திக் கொண்டு வருகின்றது. இதை அறிந்த அர்ஜென்டினா தன் நாட்டில் இருக்கும் நபரை கடத்திக் கொண்டு வந்தது பன்னாட்டு சட்டத்திற்கு எதிரானது என்று ஐ.நா பாதுகாப்பு சபையிடம் புகார் அளிக்கின்றது.  ஆனால் இஸ்ரேல் அர்ஜென்டினாவிடம் மன்னிப்பு கேட்டவுடன் அர்ஜென்டினா இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 11 August 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 3


கட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991
Siragu Economy kattam1

இந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக் கட்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி 1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர், முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கடுமையான ஆனால் நன்னோக்குடைய திட்டங்களை இல்லாமல் செய்யும் பல சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.


எல்லா நோக்கிலும், இடையில் குறைந்த காலமே பதவியில் இருந்த ஜனதாக்கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விசயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது. ஜனதாக் கட்சி என்பது பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும் அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவை. கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர் இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 10 August 2016

நீங்கள் யார்?



Siragu Neengal yaar1

நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார்கள் என்பது மிகப்பெரும் இரகசியம். அதேபோல நம்மை நாமும் அறியத் துவங்கிவிட்டால், அறியத்துவங்கிய பின் வாழும் வாழ்க்கையின் நிலையே வேறு மாதிரியாக இருக்கும். அதை அனுபவித்துப் பார்க்கும் பொழுது தான் தெரியும் எனென்றால் அதன் பூரணத்துவத்தை நிரப்ப தமிழில் வார்த்தைகள் இல்லையென்றே நினைக்கிறேன்.


ஒரு ஓவிய நிகழ்ச்சி பார்த்ததும் ஓவியத்தின் மீது ஈர்ப்பு வருவது மிகவும் இயல்பு. நீங்கள் ஓவியம் கற்கலாம் என்று நினைத்து ஓவிய வகுப்பிற்குச் செல்ல முற்படுவீர்கள், அதுவும் ஒரு வித தற்காலிக ஈர்ப்பு தான். ஆனால் அவ்வாறு செல்லும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் பெற்றோரோ, நண்பர்களோ, உடன்பிறப்போ, தெரிந்தவரோ நம்மைப் பார்த்து, நீ ஓவியம் செல்ல வேண்டாம், இசை கற்றுக் கொள்ளச் செல்! என்பார்கள். இங்கு தான் உண்மையின் சூட்சமம் புதைந்து கிடக்கிறது. அங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று மறைந்தும் இருக்கிறது. அதாவது உங்கள் குரல் நன்றாக இருக்கிறது என்பதே இது நாள் வரையில் நீங்கள் அறியாத ஒன்றாக இருந்திருக்கிறது என்பது தான் அந்த இரகசியம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 9 August 2016

செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி …


Siragu senthaarp1

தனது காதல் துணையைத்தொடர்பு கொள்ள நினைத்தபொழுதே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியாகவோ, அல்லது உரையாடலாகவோ, அல்லது காணொளி மூலம் பேசும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. ஆனால் அக்காலத்துக் காதலர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்ததில்லை. தங்கள் காதலை மடல்கள் வழி தெரிவித்தனர். தமிழிலக்கியத்தில் தலைவன் தலைவியின் காதலை வளர்ப்பதில் தோழன் தோழியரது பங்கும் பெரும் பங்கு. தோழியும், தோழனும், விறலியும், பாணனும் காதலர்களின் காதல் கைகூட தூது சென்ற வண்ணம் இருந்தனர்.


Siragu-senthaarp12

மனிதர்களைத் தவிர்த்து கிளி, மேகம், அன்னம் என்று பலவற்றையும் காதலர்கள் தூதனுப்பியதாகவும் பாடல்கள் உள்ளன. உண்மையில் அவை செய்தியைக் கொண்டு சேர்த்தன என்று சொல்ல வழியில்லை. அது ஒருவகை உளவியல் அணுகுமுறை. தனது மனத்தில் உள்ள காதலை பெற்றோரிடமோ, தோழியிடமோ தெரிவித்து, தலைவன் அல்லது தலைவி மீது தான் கொண்ட அன்பை வெளிப்படையாக சொல்லத் தயங்கும் நேரத்தில் கிளி, அன்னம், மயில் போன்று பதில் ஒலி எழுப்பக்கூடிய பறவைகளிடமோ; அல்லது மேகம், தென்றல், அலை போன்று தன்போக்கில் கடந்து செல்வனவற்றிடம் தூது சொல்லி தங்கள் மனநினைவுகளை அசைபோடும் முறையின் வெளிப்பாடு அது. அன்னம், மயில், கிளி, முகில், நாரை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக அமைத்துப் பாடுவதற்குச் சிறந்தவை என்பது தமிழறிஞர்கள் கருதியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் கூட தூது செல்வதாக இலக்கியம் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 8 August 2016

எப்போது சீரமைக்கப்படும் திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலை?


திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள நெடுஞ்சாலையின் மோசமான நிலையினால் கடந்த ஆறு மாதங்களாக விபத்து அதிகரித்து வருகின்றது.

Siragu-thirunelveli-road1

விலை மதிக்க முடியாத மனித உயிரின் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மாறாந்தை என்னும் ஊரின் அருகில் ஏற்பட்ட விபத்தினால் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

மரணப் படுக்கையில் உள்ள குழியினைப் போன்று, போக்குவரத்து அதிகமுள்ள ஒரு நெடுஞ்சாலையின் மோசமான நிலையினைக் கண்டு தினந்தோறும் அலுவலகத்திற்கு பணிக்காக பேருந்தில் பயணம் செய்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் மனம் குமுறுகின்றனர், ஒரு அரசினை மக்களாகிய நாம் எதற்காக தேர்ந்து எடுக்கிறோம் என்ற அக்கறை ஆளும் அரசின் மனதிலும், அரசு அதிகாரிகளின் மனதிலும் உள்ளதா என்னும் கேள்வி ஒவ்வொரு மனிதரின் மனதிலும் எழாமல் இல்லை.


மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசு அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அதனை நிறைவேற்றித் தருவது அரசின் தலையாய கடமை என்பதை எப்போது உணரப் போகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 7 August 2016

நாகர்கோவிலில் ஒரு ஆச்சர்யம்: “சிட்டுக்குருவிகளை காக்கும் சந்தை வியாபாரிகள்!”


Siragu-Chittukkuruvi3

முன்பெல்லாம் சாதாரணமாக வீடுகள், வீதியோர மரங்கள், ஆலய சுவர்கள் என பார்க்க முடிந்த சிட்டுக் குருவிகள் இப்போது அரிதினும், அரிதாகி விட்டது. இதற்குக் காரணம் செல்லிடைப் பேசியின் கதிர் வீச்சு, விவசாய நிலங்கள் குறைந்தது, சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டது என ஆயிரம், ஆயிரம் காரணங்களை முன்வைக்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
Siragu-Chittukkuruvi1
இதன் விளைவு இப்போது சிட்டுக்குருவிகளை அதிகம் காண்பதற்கே இல்லாமல் போய் விட்டது. இதற்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சர்வ சாதாரணமாக சிட்டுக்குருவிகளைக் காணமுடிகிறது. அதற்குக் காரணம் நாகர்கோவில் அப்டா சந்தையில் உள்ள வியாபாரிகள் என்பது தான் ஆச்சர்யமே! அதற்கு பாதை போட்டு கொடுத்துள்ளது குமரி மாவட்ட இயற்கையின் நண்பர்கள் என்னும் அமைப்பு. தமிழக அளவில் விவசாயிகளும், வியாபாரிகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் உருவாக்கிய சந்தை இந்த அப்டா தான்! அதில் தான் இப்போது சிட்டுக் குருவிகள் அட போட வைக்கின்றது.

இது எப்படி சாத்தியமானது?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 4 August 2016

போட்டிபோடு(சிறுகதை)


Siragu competition story2

தலைமை ஆசிரியரிடமிருந்து சுற்றறிக்கை வந்திருந்தது. இந்த ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பெறுகிறது; ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம், வெற்றி பெறுவோர்க்குப் பரிசுகள் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்; பெயர்தர நாளை கடைசிநாள். இதுதான் சுற்றறிக்கையின் சாராம்சம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. வகுப்பாசிரியர் அறிக்கையை ஒரு முறை உரக்க வாசித்துவிட்டு நிமிர்ந்தார். சில மாணவர்கள் எழுந்து போட்டித்தலைப்புகளின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் பெயர்தர முத்து எழுந்தான்.

“டேய் முத்து! எப்படியும் உனக்குப் பரிசுகிடைக்கப் போறதில்ல! பிறகு எதுக்குடா பேர் கொடுக்குற?”- பின்னாலிருந்து அவன் நண்பர்கள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தனர்.


அவர்கள் சொல்வது உண்மைதான், முத்துவிற்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி இரண்டிலும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு முறை போட்டி அறிவிக்கப்படும்போதும் அவன் அதில் தவறாமல் கலந்துகொள்வான். இருந்தும் என்ன பயன்? ஒவ்வொரு முறையும் அவனது வகுப்புத்தோழர்களான கார்த்திக், விக்னேஷ் இருவரும் பரிசைத் தட்டிச் சென்றுவிடுவார்கள். இப்படி பரிசு கிடைக்காமல் தோற்று ஏமாந்து போவதைக்காட்டிலும் பேசாமல் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிடலாம் என்று அவன் எண்ணியதுண்டு. இப்போது நண்பர்களின் கேலியும் அவனைச் சீண்டவே, பெயர் கொடுக்க எழுந்தவன் பெயர் கொடுக்காமல் உட்கார்ந்துவிட்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 3 August 2016

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2


இரண்டாவது பகுதி-சுதந்திராக் கட்சி

நேருவின் அரசு வலிமை கொண்ட சமதர்மத்திற்கு சுதேசி என்பது மட்டுமே ஒரே எதிர்ப்பாக முன்வைக்கப்படவில்லை. 1950களின் பிற்பகுதி முதல் 1960கள் முழுவதும், நேருவின் பொருளாதாரத்திற்கு சுதந்திராக் கட்சியும் சவாலாக இருந்தது. அக்கட்சி குறைந்தபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்குச் சார்பான பழைய தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டதாகும். (நாராயணமூர்த்தி, குர்ச்சரண் தாஸ் போன்ற பிரபலங்கள் பின்னர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்பதால், அதன் வரலாற்றைச் சற்றே கவனிப்பது பயனுடையதாக இருக்கும்.)

Siragu Economy2


தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் ஒரு காலக் கூட்டாளியுமான (இராஜாஜி எனப்பட்ட) சி. இராஜகோபாலாச்சாரி (இவருடைய மகள் காந்தியின் மகனை மணந்தார்) 1959இல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். மிக உறுதியான சமூகப் பிற்போக்குவாதி அவர். இந்துமத மற்றும் கலாச்சார விசயங்களில் ஊக்கத்தோடு இயங்கியவரும், பாரதிய வித்யா பவனை ஏற்படுத்தியவருமான கே. எம். முன்ஷி, சமதர்ம எதிர்ப்புவாதியாக மாறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமதர்மக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான மீனு மசானி என்னும் பொருளாதார வல்லுநர், ஆங்கிலவாதியான பார்சிப், பெருந்தொழிலதிபர் சர் ஹோமி மோடி, பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்நிலையில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலர், சுதந்திராக் கட்சியின் மையக் குழுவில் இருந்தனர். (அண்மையில் மறைந்தவரும், இந்தியாவின் முன்னணி வலதுசாரி நூல் வெளியீட்டகமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பதை நிறுவியவரும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்மீது தீவிர எதிர்ப்புக் காட்டியவருமான சீதாராம் கோயல் என்பவரும் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 2 August 2016

இங்கேயே இருக்கிறது


Siragu positive thinking3

நீங்கள் தேடும் ஒவ்வொன்றும் உங்கள் அருகில் தான் இருக்கிறது, ஆனால் என்ன, நீங்கள் அதை உணர மறுத்திடும் பொழுது அவற்றை விட்டு நீங்கள் விலகி வந்துவிட்டு, அவை விலகிப் போய்விட்டதென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். எது வேண்டும் என்பதில் உள்ள தெளிவின்மையே இதற்குக் காரணம் என்று சொல்வதும் உண்டு. நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு அதிகமாக உங்களுக்குள் இருக்கிறதோ அவ்வளவு அதிகமான நல்ல செயல்கள் உங்கள் வாழ்வைச் சுற்றி நடக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதைத்தான் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் மேதை கூறுகிறார். ஆகவே இது எங்கிருக்கிறதோ? எப்பொழுது கிடைக்குமோ? என்றில்லாமல், இங்கேதான் இருக்கிறது இப்பொழுதிருந்தே அது எனக்கு வந்துவிட்டது என்பதை நீங்கள் நினைக்கும் பொழுது அதை  நிச்சயம் நீங்கள் அடைந்து அனுபவிப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.


காசு பணம் எல்லாமும் இருந்தாலும் நீங்கள் எதை அடைய வேண்டுமோ அவற்றின் மீதான ஆவலே உங்களை அதைப் பெற வைக்கிறது. காசு பணம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் எதையும் வாங்கிவிடுவதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. அந்த ஆவலை நேர்மறையான எண்ணங்கள் மூலமாக வரவழைத்துக்கொண்டு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 August 2016

36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாடு பூட்டி கல் செக்கு!


Siragu-ka-lchekku2

செக்கு மேட்டின் கிர்ர்.. கிர்ர்.. சத்தத்தை ரசித்தபடி பலகையில் அமர்ந்து மாடுகளை ஓட்டுகிறார் ஒரு பெரியவர். கல் செக்கில் பொறுமையாக வித்துகளை கிளறி எண்ணெய் ஆட்டுகிறார் சீனிவாசன். செக்கில் வழியும் எண்ணெயின் வாசனை காற்றில் பரவி அந்தப் பகுதி முழுவதையும் மணக்கச் செய்கிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய வழக்கொழிந்து போன மாடுகள் மூலம் கல் செக்கு இயக்கப்பட்ட பாரம்பரிய எண்ணெய் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பாரதியார் நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் ஒரு நேர்க்காணல்.

மாடு பூட்டி செக்கு இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பதன் நோக்கம்?


சீனிவாசன்: என்னுடைய தாத்தா, பெரியப்பா எல்லோரும் மாடுகள் ஓட்டி கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்று தொழில் நடத்தி வந்தவர்கள். காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள், பாக்கெட் எண்ணெய் வரத்தால் கல் செக்கு எண்ணெய்க்கு மவுசு குறைந்துபோனது. 1980க்குப் பின்னர் கல் செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழிந்து எடுப்பது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. இப்போது சில இடங்களில் டிராக்டர், மின்சார இயந்திரங்களை கொண்டு கல் செக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.