Sunday 21 August 2016

காட்டுச்செடியின் அனுபவம்(சிறுவர் சிறுகதை)


Siragu-kaattuchchedi4

ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அது தினமும் அழகிய மலர்களைப் பூக்கச் செய்தது. இருந்தும் என்ன பயன்? யாரும் அந்தச்செடியின் பெரிய வண்ணப்பூக்களின் அழகை நின்று இரசித்ததில்லை. அதன் நறுமணத்தை நுகர்ந்து கிளர்ச்சி கொண்டதுமில்லை. தினமும் காலையில் பூக்க வேண்டியது, மாலையில் உதிர்ந்து சருகாக வேண்டியது. இப்படி வாழ்க்கை எந்தஒரு மாற்றமுமில்லாமல் சென்றுகொண்டிருந்தது. இத்தனைக்கும் இந்தக்காட்டில் ஏராளம் பறவைகள், மிருகங்கள் இருக்கத்தான் செய்தன. இருந்தும் ஒன்றிற்குக்கூடவா இரசிக்கும் மனோபாவம் இல்லாமல் போய்விட்டது?. பாராட்டுக்களுக்காக ஏங்கிக்கிடந்தது அந்தக் காட்டுச்செடி.

ஒருநாள் அந்தச்செடி இருக்கும் பாதைவழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது. உணவுக்காக இலைதழைகளைத் தேடி சிவிங்கி இப்படி வருவது வழக்கம்தான். ஆனால் இந்தமுறை அது தனது குட்டியடன் வந்திருந்தது. செடியின் அழகு குட்டியை ஈர்த்திருக்க வேண்டும். குட்டிகளுக்குத்தானே அழகான விஷயங்கள் பிடிக்கும். அதுசெடியின் அருகில் வந்து பார்த்தது.


“இந்தப்பூக்கள்ல்லாம் அழகா இருக்குலமா?”– என்று கேட்டது. பெரிய சிவிங்கி ஒருமலரைப் பறித்துக் குட்டியின்தலையில் வைத்துப் பார்த்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment