Monday 15 August 2016

அடால்ப் ஐச்மன்-வழக்கு விசாரணை ஒரு பார்வை


eelam-fi

அடால்ப் ஐச்மன் (Adolf Eichmann) ஜெர்மனிய நாட்டினைச் சேர்ந்த  இராணுவ அதிகாரி  (lieutenant colonel).  இரண்டாம் உலகப் போரின்போது  பல்லாயிரக்கணக்கான யூத மக்களின் இன அழிப்பை நடத்தியவர். 6 மில்லியன் யூத மக்களைக் கொல்வதவற்கான வழிமுறைகளைக் கட்டளையிட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட நாஜி ஜெர்மனியர்களை தண்டிக்க நூரெம்பெர்க் நீதி விசாரணை நடந்தது (Nuremberg trial). அந்த விசாரணையில் இருந்து தப்புவதற்காக ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் அந்த நீதி விசாரணையில் தண்டிக்கப்படுகின்றனர். அதில் இருந்து தப்பித்துச் சென்றவர் அடால்ப் ஐச்மன். பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்து இறுதியில் தன் பெயரை ரிக்கார்டோ கிளெமென்ட் என (Ricardo Klement) மாற்றிக் கொண்டு அர்ஜென்டினாவில் மறைந்து வாழ்கின்றார்.


இரண்டாம் உலகப் போருக்குப் பின் இஸ்ரேல் என்ற நாடு யூத மக்களைக் கொண்டு உருவாகின்றது. தங்கள் மக்களின் இன அழிப்பிற்காக நீதிகோரி இஸ்ரேல் நாட்டின் அரசு யூத மக்களின் இன அழிப்பில் ஈடுபட்ட மறைந்து வாழும் நாஜி அதிகாரிகளைத் தேடும் வேட்டை நடத்துகின்றது. அந்தத் தேடுதல் வேட்டையில் அர்ஜென்டினாவில் மறைந்து வாழும் அடால்ப் ஐச்மனை கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கடத்திக் கொண்டு வருகின்றது. இதை அறிந்த அர்ஜென்டினா தன் நாட்டில் இருக்கும் நபரை கடத்திக் கொண்டு வந்தது பன்னாட்டு சட்டத்திற்கு எதிரானது என்று ஐ.நா பாதுகாப்பு சபையிடம் புகார் அளிக்கின்றது.  ஆனால் இஸ்ரேல் அர்ஜென்டினாவிடம் மன்னிப்பு கேட்டவுடன் அர்ஜென்டினா இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment