Wednesday 14 September 2016

நற்றிணையில் விளிம்புநிலை மாந்தர்


siragu-natrinai5

சமுதாய விலக்கல் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப்பெற வேண்டிய கல்வி, சுகாதாரம், இருப்பிடம், சமுதாய மதிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தடைகள் அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது குறிப்பிட்ட குழுவுக்குக் கிடைக்காமல் இருப்பது என்பதை முன்வைப்பதாகும். குறிப்பிட்ட இனத்தை, குறிப்பிட்ட குழுவை விலக்கும்  சமுதாய விலக்கலுக்குப்  பரந்துபட்ட காரணங்கள் பல இருக்கும். இனச்சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குற்றவாளிகளாக ஆனவர்கள், அகதிகள் போன்ற பலரை உள்ளடக்கியது இந்தச் சமுதாய விலக்கல் என்ற முறை. இந்த விலக்கல் என்பது பலதரப்பட்ட வழிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக சமுதாயத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது என்று சமுதாய விலக்கலுக்கு வரையறை தரப்படுகின்றது.

சங்க காலச் சமுதாயமும் ஒரு கூட்டமைப்புச் சமுதாயம். இக்கூட்டமைப்புச் சமுதாயத்தில் பல்வேறுபட்ட ஏற்ற இறக்கங்கள் அமைந்திருந்திருக்கின்றன. சமுதாய நிலையில், வருண அடிப்படையில், பொருளாதார அடிப்படையில், செய்யும் தொழில் அடிப்படையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. சங்ககாலச் சமுதாயத்தில் இவ்வேற்ற இறக்கங்கள் இருந்தது என்பதும் அவை பாடல்களாக பதியவைக்கப்பெற்றுள்ளன என்பதும் சங்க இலக்கியங்களின் உண்மைத்தன்மையை, அவற்றைப் படைத்த புலவர்களின் நேர்மையை  உணர்த்துவனவாக உள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21467

No comments:

Post a Comment