Wednesday 27 December 2017

முத்திரள் ஆத்திச்சூடி! (கவிதை)


Siragu aathichudi1

அன்பினால் ஆள்;
அச்சமின்றி இயங்கு;
அகிலத்தை உயர்த்து;
ஆளுமை கூட்டு;
ஆக்கமுடன் இணை;
ஆன்றோர் போற்று;
இன்முகம் காட்டு;
இயன்றவரை உதவு;
இயற்கையோடு இயை;
ஈவதில் மகிழ்;
ஈர நெஞ்சில் இழை;

ஈடுபாடு கொள்;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/

Monday 25 December 2017

நல்லாயிடுவீங்க… (சிறுகதை)


Siragu positive thinking3

நிவேதிதா பன்னாட்டு கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் மேலாளராக பணி செய்கிறாள். வயது முப்பத்திரண்டு. படிப்பு பி.காம், எம்.பி.ஏ, வசீகரிக்கும்  குரல். இசை ஞானம் உடையவள். தெய்வீக  விசயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். கவிதையின் நயமுள்ளவள். சராசரி பெண்ணாக இல்லாமல் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தையுடைய அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஐந்து  வயதில்  நரேன், இரண்டு வயதில் ஸ்வாதி.  கணவர் முகுந்தன் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறான். அவர்களுடைய குடும்ப படகு, வாழ்க்கை என்னும் நதியில் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது.
அவள் கருணை உள்ளம் கொண்டவள். இல்லாவிட்டால் வீட்டு வேலைகாரிக்கு மிக்சி வாங்கிக் கொடுக்க மனம் வருமா?.
ஒரு நாள்  அவளின் மார்பில் உண்டான சிறு கட்டி  வலியைக் கொடுத்தது. டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சில காலம் தள்ளிப் போட்டாள்.

நாட்கள் ஆக ஆக அவளால் நெஞ்சு வலியைத் தாங்க முடியவில்லை. மார்பில் இருந்த கட்டி கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து கொண்டே வந்தது.  மருத்துவரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் பணி செய்யும் அலுவலகத்தில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் அது முடிந்ததும் மருத்துவரிடம் கண்டிப்பாக போகலாம் என்று தள்ளிப் போட்டாள். அவள் எப்போதும் அப்படித்தான். வேலை, வேலை, வேலை …………….என்றிருப்பாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தனித்தமிழும் இனித்தமிழும்


tamil-mozhi-fi
தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள்நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 December 2017

அவர்கள் (கவிதை)


Siragu fisherman1

கடல் அலைகள்
ஓய்வதில்லை ஆர்ப்பரித்திடும்
அதன் ஆரவாரங்கள்
முடிவதில்லை
முகிலினங்கள் பொழிந்திடும்
துளிகளை ஏந்திடும்
கடலின்  மடி
இவர்களின் கண்ணீர்த்
துளிகளையும் ஏந்துகின்றது

காலங்காலமாய்…

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 20 December 2017

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை


நூல்: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்
ஆசிரியர்: சி. ஜெயபாரதன்
Siragu prapancham1
அறிவியல் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்துவரும் அணுவியல் விஞ்ஞானி திரு. சி. ஜெயபாரதன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 2000 ஆண்டுகளில் அறிமுகமாவதற்கும் ஒரு கால் நூற்றாண்டிற்கும் முன்னரே எழுதுவதை ஒரு தன்னார்வப் பணியாகத் தொடங்கியவர் அவர். கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியப் பங்களிப்புகளும், அறிவியல் கட்டுரைகள் வழங்குவதிலும் இவருக்கு ஈடு இணை கிடையாது. அவர் எழுத்துக்களில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய பகுதி அவரது அறிவியல் பங்களிப்புகளே. தமிழில் கதையும், கவிதையும், கட்டுரைகளும் எழுத எண்ணிறைந்தவர்கள் உள்ளனர். ஆனால் தமிழில் அறிவியல் குறித்து எழுதுபவர்கள் மிகவும் சொற்பமே. ஆகவே அவரது அளப்பரிய பங்களிப்பின் தேவையை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

நாம் எதிர் கொள்ளும் சம கால நிகழ்வுகளான புவியதிர்ச்சி, ஆழிப்பேரலைகள், சந்திர கிரகணங்கள், சூரிய கிரகணங்கள், எரிமலை வெடிப்பு, துருவப்பனி உருகுதல், சுற்றுச் சூழல் மாற்றங்கள், செயற்கை விண்கோள்கள், செவ்வாய் கோளுக்குப் பயணம் என அறிவியல் உலகத்தின் தற்காலச் செய்திகளை, கடந்த 15 ஆண்டுகளாக இணையம் வழியாக விரைவில் அவர் தமிழுக்கு மாற்றும் இடையறா முனைப்பின் காரணமாக நாம் அந்த நிகழ்வுகளின் அறிவியல் பின்னணிகளை விளக்கமாக அவரது கட்டுரைகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு அறிவியலாளர் ஆய்வு நோக்கில் செய்திகளைத் தொகுத்து, படங்களுடன் எளிமையாக விளக்கி, சான்றுகளுடன் இணைத்துத் தரும் முறை நம்பிக்கையுடன் அறிவியல் அறியும் வாய்ப்பாகவும் தமிழருக்கு அமைந்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 December 2017

மடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்


Siragu-aanavapadukolai1

இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அது நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு, என்னவெனில் ஆணவப்படுகொலைக்கு எதிராக முதல்முறையாக கடுமையான, அதிகபட்ச தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும்.!

உடுமலைப்பேட்டை சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பட்டப்பகலில், நாடு ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு செயலால் சாதிவெறியர்களால், அதுவும், தன்னுடைய மனைவியின் பெற்றோர்களாலேயே, கூலிப்படையினரைக்கொண்டு அரிவாளால் சரமாரி வெட்டப்பட்டு உயிரிழந்தார். இவையெல்லாம், கணநேரத்தில் தன் மனைவி கண்முன்னாலேயே நடந்து முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல… சங்கரின் மனைவி, கௌசல்யாவையும் தாக்கியிருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப்பிறகு உயிர்பிழைத்திருக்கிறார் கௌசல்யா.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 December 2017

கைத்தறி ஆடை! (கவிதை)


siragu kaiththari1

உழைக்கும் பாமரர் அவர்கைகள்
உழைத்து இழைத்த நூலே
நம்மானங் காக்கும் உடையாம்!
நூலிழை யோடவர் கைத்திறம்
நுணங்கிய வேலையே சித்திரமாம்!
அணிய அணியபே ரானந்தம்!

பாடுபட் டுழைக்கும் பாமரர்
வாழ்வினை மானத்தால் காக்கும்
உடையின் தேர்ந்த சிற்பி!
அவர்கை பட்டதாலே பட்டாடை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday 14 December 2017

நல்லதேசம் (சிறுகதை)


siragu-nalla-desam1


மரகததேசத்தின் மன்னர் விக்ரமன், சிறுவயதிலேயே பட்டத்திற்கு வந்தவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ஆனால் அரசகாரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர். வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான் பல சந்தர்ப்பங்களில் மன்னருக்கு வழிகாட்டிவந்தார். “ஒரு தேசம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், ஒரு தேசத்தின் குடிமக்கள் ஒரு மன்னனிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை எல்லாம் நிறைமதியார் மன்னருக்கு உணர்த்த விரும்பினார். மன்னருக்கு நேரிடையாக அறிவுரை கூறுவது ஏற்புடையதல்ல. வேறு எப்படிச் சொல்வது என்ற யோசனையில் இருந்த சமயம். ஒரு நாள் புலவர் மகேசன் நிறைமதியாரைக் காணவந்தார். 

புலவர் மகேசன் ஒரு வானம்பாடி. தேசம் தேசமாகச் சுற்றுபவர். பற்றுக்கள் இல்லாதவர். அனைத்து தேச மக்களும் வளமுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். அவரிடம் மந்திரியார் தனது எண்ணத்தைச் சொன்னார். நீண்ட தனது வெண்தாடியை வருடியபடி யோசித்த புலவர் “நான் இதற்கு ஒரு வழி செய்கிறேன்!” –என்றபடி மந்திரியாரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். மந்திரியாரும் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

மன்னர் விக்ரமன் ஒருநாள் அவையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது புலவர் மகேசன் அங்கு வந்தார். புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், எதையாவது இரந்து பெற கவிபாடுபவர்கள் என்ற எண்ணம் கொண்டவர் மன்னர். அவர் புலவர் மகேசனை ஏளனம் செய்யும் விதமாக, என்ன புலவரே, உமது வீட்டுப் அடுக்களையில் பூனை படுத்துறங்குகிறதோ? எம்மைக் கவிபாடி பரிசில் பெறவந்தீரோ?” – என்று கேட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 December 2017

தமிழால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Siragu tamil4

தமிழ் உயரிய மொழி செம்மொழி என்ற பெருமைகளை எல்லாவற்றைக் காட்டிலும் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உயிர்மொழி என்ற பெருமையே அதன் சிறப்பும் தேவையும் ஆகும். தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள், உலகெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் தமிழ்மொழி சற்றே ஒட்டிக் கிடக்கிறது. இதனை வலுப்படுத்தாவிட்டால் தமிழ் என்னும் தாய் மொழி தாயாகும் தன்மையை இழந்து வெறும் ஏட்டுமொழியாகிவிடலாம்.

இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா இன்னும் பற்பல இடங்களில் தமிழர்கள் இன்று தம் மொழியை முன்னிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சிக்கல்களை உற்றுக்கவனிக்க என்ன செய்ய இயலும்?


தமிழகத்திலும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் சாதி அவர்களைப் பிரிக்கிறது. சாதித் தொகுதிகள் பிரிக்கின்றன. தமிழர்களை ஒருங்கிணைக்க ஒரே வழி தமிழ்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 December 2017

கவிஞர்தாம் சமுதாயச் சிற்பி (கவிதை)


siragu bharathidasan1


பொன்னாகச்   செங்கோலின்  ஆட்சி  நாட்டில்
பொலியாமல்   கடுங்கோலில்   கனலும்  போது
மன்னர்க்கே   அறிவுரைகள்   எடுத்து  ரைத்து
மண்ணாளும்   வழிமுறைகள்   எடுத்துக்  காட்டித்
தன்னலமே   இல்லாமல்   மக்க  ளெல்லாம்
தமராக   வாழ்வதற்குப்   பாக்கள்  யாத்து
நன்கீந்த   சங்கத்துப்   புலவ  ரெல்லாம்



நலம்காத்த   சமுதாயச்  சிற்பி   யாவார் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/

சித்தூர் தீர்ப்பு


Sirgu siddur decison1

வேலூருக்கு அருகில் வேட்டவலம் ஊருக்கு அருகாமையில் சதுப்பேரி என்ற கிராமத்தில் விஸ்வகர்ம சாதியச் சார்ந்த மார்க்கசகாய வாத்தியார் என்பவர் வடமொழி வேத, சாத்திர, சம்பிரதாயங்களில் வல்லவர். இவர் தெலுங்கு ஆசாரி ஆவார். இவர் தன் இன குடும்பங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதராக செயல்பட்டுவந்தார். அப்படி அவர் ஒரு திருமணத்தை நடத்தியபோது, அந்த கிராமத்தைச் சார்ந்த பஞ்சாங்க குண்டையன் என்பவர் 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 December 2017

அயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்


Siragu america university1

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயில விரும்புவது உலகம் முழுவதுமுள்ள மாணவர் பலரின் விருப்பமாகப் பலகாலம் இருந்து வருகிறது. உலக அளவில் அதிக அளவு அயல்நாட்டு மாணவர்கள் கல்வி கற்பதும் அமெரிக்காவில்தான், அடுத்த இரு இடங்களில் இருப்பவை இங்கிலாந்தும் பிரான்சும். இவ்வாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் குறித்து வெளியாகியுள்ள ஆய்வுக்  கட்டுரைகள் மற்றும் செய்திகள் வழி கிடைக்கும் சுவையான புள்ளிவிவரங்கள் பல. பொதுவாக அயல்நாட்டு மாணவர்கள் என எதன் அடிப்படையில் வரையறை செய்யப்படுகிறது?, அவர்கள் எந்த நாடுகளில் இருந்து வருகிறார்கள்? எந்தப் பாடங்களைப் படிக்க விரும்புகிறார்கள்?,  அவர்களுக்கு எந்தெந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அதிக ஆதரவு தருகின்றன?,  நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் இவர்கள் அதிகம் சேருகிறார்கள்?, இவர்களைச் சேர்த்துக் கொள்ள விரும்பும் பல்கலைக்கழகங்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்களின் தொகுப்பு இக்கட்டுரை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 4 December 2017

“நீட்” ஏன் வேண்டும்?


Siragu indhiya porulaadhaaram8

“சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது, கல்வி முழுவதையும் பார்ப்பனர்களே கவர்ந்து வைத்துக்கொண்டு இருந்தார்கள்” என்று பொத்தாம் பொதுவாக நாம் அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இது உண்மை தான். ஆனால் முழுமை அல்ல.
பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரக் கல்வியை மட்டுமே மற்றவர்கள் பெற்று விடக் கூடாது என்று எச்சரிக்கையுடனும், பிடிவாதத்துடனும் இருந்தனர். இப்போதும் அதற்காகவே போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

சத்திரியர்களுக்குப் போர்க் கல்வியையும், சூத்திரர்களுக்குப் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் கல்வியையும், வைஷ்யர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தினர், அதாவது சூத்திரர்கள் உற்பத்தி செய்த பொருட்களை, உயர் சாதியினருடைய அதிகாரப்படி மக்களிடையே விநியோகம் செய்யத் தேவைப்படும் கல்வியையும் திணித்து இருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 29 November 2017

எது கவிதை? (கவிதை)


Siragu chettinadu poet1

புதுமைதான் கவிதை என்றால்
ஒவ்வொரு விடியலும் கவிதைதான்!
வேதனை தான் கவிதை என்றால்
ஒவ்வாரு பிரிவும் கவிதைதான்!

இயற்கைதான் கவிதை என்றால்
ஒவ்வாரு சீற்றமும் கவிதைதான்!

காதல் தான் கவிதை என்றால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்


siragu semmoli2

சங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண் சார்ந்த புனைவுகளாகப் பின் வருவனவற்றைக் கொள்ள இயலும். கொல்லிப்பாவை, பெண்கொலை புரிந்த நன்னன், திருமாவுண்ணி, அன்னிமிஞிலி ஆகிய புனைவுகளில் பெண் பாத்திரங்கள் மையமாக அமைகின்றன. இக்கதைகள் வாய்மொழிப் புனைவுகளாகும். இவற்றை உருவாக்கியவர்கள் யார் என்று அறியாத நிலையில் இவை எவரால் சொல்லப்பட்ட புனைவுகள் என்பதை அறிய இயலாத நிலை உள்ளது. இவை உவமைகளாக, எடுத்துரைப்புகளாக இருப்பதை எண்ணிப் பார்க்குங்கால் தமிழ்ச் சமுதாயத்தில் இவை வழிவழியாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன என்பதை மட்டும் உணரமுடிகின்றது.

தற்காலத்தில் தொன்மம் சார்ந்த புனைவுகளிலும் பெண்ணிய ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது. இதுகுறித்த பின்வரும் ஆய்வாளரின் கருத்து நோக்கத்தக்கது. ‘‘தற்போதைய காலக்கட்டத்தில் பெண்ணிய இயக்கம் சமுதாய அறிவியல், தொல்லியல், தொல்மானிடவியல், இறையியில் போன்ற பலதுறைகளைக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மக் கூறுகளை பெண்மையத்துடன் ஆராயத் தலைப்படுகிறது. அவற்றில் காணப்படும் ஆ;ண் மையமிட்ட  அரசியலை, ஆண்  பாத்திரங்களை அவை குறித்த சொல்லாடல்களை வெளிப்படுத்த பெண்ணிய நோக்கு முன்வருகிறது. இத்தொன்மங்களில் உள்ள பெண் மௌனம்,  பெண்ணுக்கான இடமில்லா நிலை போன்றனவும் நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன என்ற கருத்தின் வழியாக பெண்ணியம் தொன்மங்களிலும் தன் ஆய்வினைச் செலுத்திவருகிறது என்பது உணரப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 November 2017

இரு பாதைகளும் ஒரு பயணமும்


siragu iru paadhaigalum2

அமெரிக்கப் பண்பாட்டில் மிகவும் போற்றப்படுவது ஒருவர் தனித்தன்மையுடன் விளங்கும் பண்பு (empowered individualism). ஒருவரது தனித்தன்மை மிகவும் ஊக்கப்படுத்தப்படும், பாராட்டப்படும் (appreciation of / encouraging individualism, choice, and empowerment). குழந்தைகளை வளர்க்கும் பொழுதே நீ இவ்வாறு பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று போதிக்கப்படுவதில்லை. வளர்ந்த பிறகு நீ என்னவாக விளங்க வேண்டும் என்பது உனது விருப்பம் என்றுதான் அவர்களிடம் சிறு வயது முதல் கேள்விகள் வைக்கப்படும். புதுமைகளைப் படைப்பதும், அதற்காகத் துணிச்சலாக மாறுபட்ட வாழ்க்கை முறையையோ கல்வியையோ சோதனை செய்வதும் உற்சாகப்படுத்தப்படும்.


பலர் சென்ற வழி இது, இதில் வெற்றி நிச்சயம், தடைகளும் தடங்கல்களும் குறைவு, வாழ்க்கை சீராக இருக்கும் என்ற கோணத்தில் பிள்ளைகளை வளர்ப்பது இந்தியப் பண்பாடு. தங்கள் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், பொறியாளராகத் தொழில் செய்ய வேண்டும், சமூகத்தில் அதிகம் மதிக்கப்படும் புகழ் செல்வம் தரும் கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வளர்ப்பது அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பின்புலம் கொண்ட பெற்றோர்களின் அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு தாங்கள் வளர்க்கப்பட்டு, வழி நடத்தப்பட்டு வந்ததால்தான் அயல்மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக தங்களால் வாழ முடிகிறது என்பது அவர்கள் நடைமுறையில் அறிந்தது. தாங்கள் பெற்ற கல்வியும் வளர்ப்பும் தங்களை வாழ வைத்துள்ளது என்று அவர்கள் தங்கள் வாழ்வையே சான்றாக எடுத்துக் கொள்ளும் அவர்களது கோணத்தைக் குறை சொல்லவும் வழியில்லை. அவ்வாறு அவர்கள் வளர்க்கப்பட்ட முறை இந்தியப் பண்பாட்டுக் கூற்றின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் அவ்வாறு வழிநடத்தும் முறையைப் பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோரது கடமை எனப் பார்ப்பதும் இந்தியப் பண்பாட்டுக் கோணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 26 November 2017

தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)


tamil-mozhi-fi

தேனமிர்த மாம்தமி ழிசையை –நாம்
தீந்தமிழ் சொல்லா லன்றோ கேட்கிறோம்?
மேனாட்டு இசையால் தாய்மொழிச் சொற்கள்
மேன்புகழ் நலிந்து வாடக் காணவோ?
தமிழராம் நம்வீட்டில் நிகழும் -நல்ல
தமிழ்ப்பண் பாட்டை வளர்த்தெடுக்க நாளும்
தேனிசை சுரக்கும் பண்பாட்டு முறைபேணி
இசைத்தமிழ் காப்பதைக் கடமையாய்க் கொள்வோம்.

நாளும் வளர்தமிழ் முறைக்கு -நாம்
நல்ல தமிழ்த்தொண் டாகத் தமிழர்
அரங்குகள் எல்லாம் தமிழ்இசை முழக்கி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

Thursday 23 November 2017

குறிஞ்சிப்பாட்டில் பெண்ணின் ஆளுமைத்திறன்


Siragu-kurunjippattu2

ஆளுமைத்திறன் என்பது தான் சொல்ல வந்த செய்தியை உறுதியுடன் கூறுதல், நமக்கு என்ன தேவை என்பதை தயக்கமின்றி கூறுதல், தன் கோரிக்கை மறுக்கப்பட்டால் அதற்குரிய மாற்று முயற்சியைத் திட்டமிட்டு வைத்திருத்தல், மறுக்கப்படுகின்றபோது நிதானத்துடன் சமரசத்திற்கு தயாராதல். இவற்றைச் சரியாகக் கையாளுவதே ஆளுமைத்திறன் எனலாம். இங்கே கூறப்பட்ட இயல்புகளில் எதிலும் குறையாமல் செயல்பட்டவர்கள் குறிஞ்சிப்பாட்டுப் பெண்கள். குறிப்பாகத் தோழி. விளையாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பண்பாட்டுத் தளத்தின் ஆணிவேரை நன்கு அறிந்தவர்கள் தமிழ்ப் பெண்கள் என்று அறுதியிட்டுக் கூறும் கபிலரின் குரல்தான் தோழியின் வாயிலாக வெளிப்படுகிறது. பேசும் திறன், தான் சொல்ல வருகின்ற கருத்திற்குத் தக சூழல்களை உளப்படுத்தல், எதிர் நின்று கேட்பவர்களின் ஐயத்தை உணர்ந்து கொண்டு அதற்குரிய காரண காரியங்களை நிரல்பட மொழிதல், எதிர் உணர்வு அரும்பாமல் இதமாக எடுத்துரைத்தல் என்று எல்லா வகையிலும் தோழி பேசுகிறாள் என்றால் தோழியின் பேச்சு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களின் அறிவார்ந்த பேச்சாற்றலை அறிந்த கபிலர், பெண்மையின் பேச்சாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பே குறிஞ்சிப்பாட்டுத் தோழி.

குறிஞ்சிப்பாட்டிலே நடக்கின்ற அத்துணைச் சொல் நாடகமும் தோழியின் சொல்லாற்றலே. பாட்டின் தொடக்கத்திலேயே, தான் சொல்லப் போகும் செய்தி தாய்க்குக் கோபத்தை உண்டுபண்ணக் கூடியது என்பதை அறிந்திருந்தும், கோபத்திற்கு ஆளாவோம் என்பது தெரிந்திருந்தும் அவள் கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான செய்தியாக இருந்தும்கூட அதனை அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறத்துடன் மொழிகின்றாள் தோழி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 November 2017

நவம்பர் 26


Siragu nov 26-1
நவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள்!!. ஆம் அன்று தான் தந்தை பெரியார் அவர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அந்தப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டர்கள் 10000 பேர் பெருந்திரளாக அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர். தமிழக காவல்துறை செய்வதறியாது 3000 பேரை கைது செய்தனர். அதில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவர்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஒரு ஊரில் ஒரு இடத்தில் என்ற அளவில் நடைபெறவில்லை.

‘விடுதலை’ நாளேட்டில் வந்த தகவல்படி, சென்னையில் – 35 இடங்கள், வடார்க்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென்னார்க்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 15 November 2017

தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)


Siragu tamil4

அள்ளி யள்ளிக் கொடுத்தாய் தமிழை
அன்பால் தமிழ்மொழி வளர்த்தாய் புலவ!
எண்ணும் எழுத்தும் ஓதுவித்து பாமரர்
ஏழைகள் தமிழ்படிப் பறிவுபெற உழைத்தாய்
கண்ணும் கருத்தாய் இருந்து அன்புடனே
கருத்தும் செயலாய் உழைத்தாய் புலவ!

தமிழ்நூல் போற்றும் நல்லுரை தந்து
தீந்தமிழ்ப் புகழை வளர்த்தாய் புலவ!
அன்பும் அறச்சீற்றம் கொண்டு உழைத்தாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D/

Monday 13 November 2017

கொடுக்க மறந்தது!! (சிறுகதை)


Siragu kodukka marandhadhu1
ரம்யா கை ஒடிந்த மாதிரி இருந்தது. இருக்காதா பின்னே? வாட்ஸ் அப் பார்க்க முடியாம மொபைல் போனில் உள்ள சிம்மை தன்னுடன் கூட பணிப் புரியும் நந்தினிக்கு இரவல் கொடுத்து விட்டு இவள் அல்லவா திண்டாடுகிறாள். ”எல்லாம் பாஸ் வெங்கட்டால் வந்தது. அவர் ஆபிஸ் கணக்கில்  ஒரு சிம் கார்டை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே. அவர் நாசாமா போக” மனத்துக்குள் சபித்தாள்.
இரண்டு நாள் முன்னால் மாலை நாலு மணி இருக்கும். ஆடிட்டர்  வெங்கட் ரம்யாவைக் கூப்பிட்டுச் சொன்னார்.
”ரம்யா உங்கிட்டே இருக்கிற சிம்மை நந்தினிக்குக் கொடு. அவள் இரவு சென்னை போகிறாள், இண்டெர்நெட்டில் ஏதாவது பார்க்க வேண்டியிருக்கும்“.

”நான் ஃபேஸ் புக் பார்க்கணும், வாட்ஸ் அப் பார்க்கணும். எனக்கு வேண்டியிருக்குமே சார்.” மொபைல் சிம் கொடுப்பதைத் தவிர்க்கப் பார்த்தாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 12 November 2017

மக்கள் பாதையின் மக்கள் மருந்தகம்

“திரு. சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உன்னத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE (மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கி உள்ளோம், இதை தமிழக மக்கள் பயன் படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்துப் பெயருடன் வாட்ஸ்அப் (9788052839) அல்லது svgjanaushadhi@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.”

என்று தொடங்கி ஒரு நீண்ட செய்தி புலனத்திலும் (whatsapp), முகநூலிலும் (facebook) பலருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுப்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இச்செய்தியில், மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சூட்டி உள்ள பெயரை எழுதுவதாகவும், அப்படி இல்லாமல் மருந்துகளின் பெயரை எழுதிக் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பு உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Siragu makkal marundhagam3

மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் “மக்கள் பாதை” நண்பர்கள் குழுவினர் அவர்களுடைய உயர்ந்த எண்ணத்திற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதே சமயம் அவர்கள் கள்ளம் கபடம் சிறிதளவும் இல்லாமல், சூழ்ச்சியே உருவான உலக மகா அயோக்கியர்களுக்கு எதிராகப் போராட முனைந்து இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 10 November 2017

ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)


Mother with daughter in the park
ஒரு காட்டில் யானை ஒன்று இருந்தது, நீண்ட தந்தங்களுடன் கரியமேகம் ஒன்று தரைக்கு இறங்கி வந்தது போன்று கம்பீரமாக இருக்கும். அது காட்டின் ஒரு நீர்நிலைப் பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டு அதில் வசித்து வந்தது. அந்தப்பகுதியில் மான்கள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற தாவரஉண்ணிகளை மட்டுமே யானை அனுமதிக்கும், மற்ற விலங்குகளை அனுமதிக்காது. ஒவ்வொரு நாளும் தனது வழித்தடத்தில் யானை மகிழ்ச்சியாக உலாச் செல்லும். அவ்வாறு செல்லுமபோதுசமயங்களில் சிங்கம், சிறுத்தை புலி போன்ற மிருகங்கள் எதிர்படும். ஆனால் அவைகள் யானையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கிவிடும்.
அந்தக் காட்டில் நரிகள் கூட்டம் ஒன்று இருந்தது. அந்த நரிகளுக்கு யானையின் களிப்பும், மதர்ப்பும் பிடிக்கவில்லை. அது அவைகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அவைகள் யானையை வீழ்த்த எண்ணின் ஒரு நாள் கூட்டமாக அவைகள் யானையை எதிர்கொண்டன யானை சிறிதும் அஞ்சவில்லை. நரிகளைப் பந்தாடியது. நரிகள் ஓடி ஒளிந்தன, யானையை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பதை அவைகள் புரிந்து கொண்டன, யானையை வீழ்த்த அவைகள் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 9 November 2017

நகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்


Siragu nagulan1

தமிழ் நவீன இலக்கிய உலகில் கவிதையில் பெரிய நிகழ்வுகள் தொடங்கியிருந்த காலம் அது 1950முதல் 1970கள வரையிலான தொடக்க காலம். ந.பிச்சமூர்த்தி நிகழ்த்திக் கொண்டிருந்த சாதனைகள் பற்றி பேசத்தொடங்கிய காலம். சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழ் விமர்சனத்திற்காக தொடங்கப்பட்டாலும் தமிழில் நவீனத்தை முன்னெடுக்க ஒரு உத்தியை கையாண்டது. அது புதுக்கவிதையை வளர்தெடுப்பதென்று.

தமிழில் புதிய எழுத்தாளர்களை கவிஞர்களை ‘எழுத்து’இதழ் அறிமுகம் செய்தது. எழுத்து இதழ் 1960-61ம் ஆண்டுகளில் புதுக்கவிதைகளை வெளியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.. தருமு.சிவராமின் கவிதைகள் அவற்றில் குறிப்பிடத்தக்க கவனத்தை வாசர்களிடையே கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில் வல்லிக்கண்ணன், க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு மத்தியில் ஒரு புதிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அக்குரல் மற்ற கவிஞர்களின் குரலின் தன்மையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அக்குரல் புரியாத புதிர்கள் என ஒன்றையும் மறைக்கவும் இல்லை. அதே சமயத்தில் எதையும் தனக்குச் சுயமாக ஒன்று இருப்பதாக எண்ணவும் இல்லை. அப்படியான குரல் ‘நகுலன்’என்ற நவீன சித்தர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 8 November 2017

தாய் போற்றிய உடன்போக்கு


Siragu aganaanootru paadal1

அண்மைக்காலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்ற தமிழ்ச்சமூகம் படிக்க வேண்டியப் பாடல் அகநானூற்றுப் பாடல் 203, கபிலர் எழுதிய இந்தப் பாடல் பாலைத்திணையைச் சார்ந்தது. பாலைத்திணைப் பாடல்களின் சூழ்நிலைகள் இரண்டு. ஒன்று பணம் ஈட்டச் செல்லும் தலைவனின் பிரிவை தாங்கொணாது தலைவி வருந்தி இருத்தலைக் குறிக்கும் பாடல்கள், இரண்டாவது உடன்போக்கு (தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு வெளியேறுதல்) பற்றியச் செய்திகளைக் கூறும் பாடல்கள்.
இந்தப் பாடல் உடன்போக்கைப் பற்றியது. மகட்போகிய தாய் அல்லது செவிலித்தாய் கூறியது.
பாடல் :
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5
மகிழ்ச்சி அடைந்தாலும், ஆத்திரம் கொள்வாள் என்றாலும் அதனை தாய் அவளே அறிந்து தெரிந்துக்கொள்ளட்டும் என்று விடாது, தீ மொழிகளைக் கொண்டு புறம் கூறும் பெண்கள், உன் மகள் களவொழுக்கத்தில் உள்ளாள் எனப் பல நாட்கள் என்னிடம் கூறியபோதும் நான் அதனைப்பற்றி என் மக்களிடம் கேட்கவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 6 November 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி- 5)


V. ‘மறைந்தாலும்’ மறக்கப்படாத கைதிகள்:
Siragu alcatraz5-1ஃபிரான்க் மோரிஸ் மற்றும் ஜான் ஆங்க்லின், கிலாரென்ஸ் ஆங்க்லின் சகோதரர்கள் அதிக கண்காணிப்பு கொண்ட அல்கட்ராஸ் தீவின் சிறையில் இருந்து தப்பியதற்கு மறுநாள், ஜூன் 12, 1962 அன்று காலையில் ஆறரை மணிக்கு மணியடித்து அனைவரையும் எழுப்பி அவர்கள் சிறைக் கதவருகில் நிற்கும் பொழுது எண்ணிக்கை எடுக்கப்பட்ட நேரம், தப்பிய மூவரும் தூங்குவது போலிருக்க, காவலாளிகள் அவர்களை அசைக்க முற்பட, பொம்மைத் தலைகள் தரையில் விழுந்து உருண்டோட, சிறையின் எச்சரிக்கை மணிகள் அலறியது. அறைகளைச் சோதனை செய்ததில் அவர்களது பொய்ச்சுவர் குட்டு வெளியாகியது, மற்ற அறைகளையும் சோதனை செய்த பொழுது ஆலன் வெஸ்ட்டும் மாட்டிக் கொண்டார். அவர் கூறிய தகவல்களைக் கொண்டும், புகை போக்கி அருகே கரி படிந்த கால் தடயங்கள் கொண்டும், மிதவை, துடுப்பு, தப்பிய முறை யாவும் காவலாளிகளுக்குத் தெரிய வந்தது. 
வழக்கமாக அனைவரும் முயற்சிப்பது போல தெற்கு நோக்கி சான் பிரான்சிஸ்கோ செல்லாமல், வடக்கு நோக்கி ஏஞ்சல் தீவுக்கு மூவரும் தப்பிச் சென்று, அங்கிருந்து மேலும் பயணித்து வடகரையில் ஏறி, ஒரு துணிக்கடையில் கொள்ளையடித்து ஆடைகளை மாற்றிக் கொண்டு, கார் ஒன்றைத் திருடி தப்பிவிடத் திட்டம் என்று ஆலன் வெஸ்ட் கூறியிருந்தார். காவல்துறையினர் தீவையும் கடலையும் அங்குலம் விடாமல் சோதனை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் இல்லை என்று தெளிவானது. இரண்டு நாட்கள் கழித்து மிதக்க உதவும் மேலங்கிகள் மூன்றும், துடுப்புகளும் கடலில் ஆங்காங்கே கிடைத்தன. அவற்றுடன் ஆங்க்லின் சகோதரர்கள் குடும்பப் படங்கள் நீர்ப்புகமுடியாத உரையொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டது. இல்லை அவர்கள் மூழ்கி இறந்துவிட்டதாக மற்றவர்கள் கருத வேண்டும் என்று ஏமாற்றும் நோக்கில் அவை வேண்டுமென்றே விட்டுச் செல்லப்பட்டன என்றும் மற்றொரு பிரிவினர் கருதினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 1 November 2017

நேரமில்லை(கவிதை)


siragu neramillai1

கம்ப்யூட்டர் யுகத்தில்
காவிரி பூம்பட்டினமும்
கலிபோர்னியாவும்
நெருங்கி விட்டன
செல்போன்களும்
தொலைக்காட்சியும்
குடும்ப உறவுகளை
குலைத்துப்போட்டன
தாயிக்குப் பிள்ளையை
கொஞ்ச நேரமில்லை



பிள்ளைக்கு தாயோடு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday 31 October 2017

கடவுளை அவமதித்தவர்கள் (சிறுகதை)


Siragu kadavulai1

மலையின் விளிம்பில் ஒதுங்கிக் கிடந்தது அந்த காலனி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைத்துப் போட்ட தீப்பெட்டிகளைப்போல வீடுகள் இருந்தது. ஊரின் நடுவே கொஞ்சம் சமதளமான இடம் எஞ்சியிருந்தது. அங்கேதான் மாரியம்மன் கோயிலின் அடையாளமாக ஒரு நாவல் மரம் ஒன்று நின்றது. அதனைச் சுற்றி தரையில் குத்தப்பட்ட வேல்கள் நின்றன. சிலவற்றில் எலுமிச்சை பழங்கள் குத்தப்பட்டிருந்தன. அந்த இடத்தைச்சுற்றி கொஞ்சம் காலி இடமிருந்தது. குழந்தைகள் விளையாடும் இடமாகவும் மாறிப்போக, கோயில் குழந்தைகளுக்கு மைதானமாகவும் மாறிப்போனது. ‘வொலிபோல்’ பந்துகளோ, சிறுவர்களின் குட்டி பந்துகளோ சில நேரம் வேலில் படுவதுண்டு. வேலை விட்டு வரும் சனங்கள் அதைப் பார்க்க நேரிட்டால்,
“இந்த சனியன் புடுச்ச வெள்ள காட்ட பாருங்க கோயில்ன்னு பாக்குதா, சாமிண்ணு பாக்குதா ஒரே ஆட்டம்தான்”
ஏசிக்கொண்டே போவார்கள். அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. கேட்டாலும் அவர்களிடம் பதிலுமில்லை. விளையாட்டு… விளையாட்டு…

சில நேரங்களில் யார் மேலிலாவது பந்து பட்டுவிடும். அன்றைக்கு காலனியே ரெண்டுபடும். எந்தப் பயலின் பந்து யார்மேலில் பட்டதோ அந்த இரண்டு வீட்டின் எல்லா விசயங்களும் பொது வெளிக்கு வந்து விடும். யார் யோக்கியம், யார் யோக்கியம் இல்லை, புள்ள வளர்த்த லெட்சணம் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்துவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 30 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி-4)


IV. தி கிரேட் எஸ்கேப்:
எந்த ஒரு சிறைக்கைதியும் தப்பவே வழியில்லை என்ற பெயர் பெற்றிருந்த அமெரிக்காவின் அல்கட்ராஸ் தீவு சிறைச்சாலையின் பெருமையைக் குலைக்கும் வண்ணம் பலமுறை தப்பும் முயற்சிகள் நடந்தன. ஒருவரே இரண்டுமுறை தப்பிக்க முயன்றதும் உண்டு. ஆனால் தப்புவது என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதில்தான் உண்மையாகவே கைதிகள் தப்பினார்களா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.

Siragu alkatras4-1


சிறையில் இருந்து தப்பி தீவின் கரைவரை வந்து பிடிபட்டவர்களும் உண்டு, தப்பி கடலில் குதித்து நீந்தும்பொழுது சுடப்பட்டு இறந்தவர்களும் உண்டு, நீரின் குளிர் தாளாமல் விறைத்துப்போய் இறந்த உடலாக மிதந்து மீட்கப்பட்டவர்களும் உண்டு, தீவின் பாறைகளுக்கிடையில் மறைந்து கொண்டாலும் குளிர் தாங்காமல் தானே சிறைக்குத் திரும்ப வந்துவிட்டவர்களும் உண்டு, கரையேறித் தப்பினாலும் கைது செய்யப்பட்டு திரும்பியும் கொண்டுவரப்பட்டவர்களும் உண்டு, இல்லை ஹைப்போதெர்மியாவில் விறைத்துப்போய்க் கரையில் ஒதுங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரைக் காப்பாற்றி திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் உண்டு. எனவே, அல்கட்ராஸ் சிறை அதிகாரிகளும், எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் தப்பியவர்கள் யாவரும் உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைத்துவிட்டால் அவர்கள் தப்பிக்கவில்லை என்றும், அவ்வாறு உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைக்காவிட்டாலும் கூட அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற வரையறையை வகுத்துக் கொண்டு இதுவரை யாருமே அல்கட்ராஸ் சிறையில் இருந்து தப்பியதில்லை என்று சொல்லி வந்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 October 2017

கவிதைச்சோலை (நீதி இன்னும் சாகவில்லை!, மாற்றம் வருகுது)


நீதி இன்னும் சாகவில்லை!


Siragu needhi saagavillai1

இங்கு
நீதி இன்னும் சாகவில்லை
உயிர்த்துக்கொண்டது மீண்டும்
வித்தியாக்களின் ஆன்மா வடிவில்!

தர்மம் அழிந்துவிடும் என்று
இனியாவது யாரும் கனவு காணவேண்டாம்

அதர்மம் அழிந்துவிடாது என்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/

Wednesday 25 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-3)


Siragu alkatras1

III. உலகப்புகழ் பெற்ற அல்கட்ராஸ்:
லண்டன் நகரில் (செப்டம்பர் 28, 2017 அன்று) அமெரிக்காவின் அல்கட்ராஸ் சிறைச்சாலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட “Alcotraz” (speakeasy-style bar called Alcotraz) என்ற ஒரு மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. ஒரு சிறைச்சாலையின் மாதிரியில் துவக்கப்படும் மதுபான விடுதி என்பதுமக்களை எந்த அளவு அல்கட்ராஸ் சிறைச்சாலை ஈர்த்துள்ளது என்பதையே காட்டி நிற்கிறது.


உலகப் புகழ் பெற்றுள்ள அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலையின் நோக்கம் கைதிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும் நோக்கமல்ல. ஒருமுறை அல்கட்ராஸ் வந்தால் அதுவே அவர்களின் முடிவு என்ற நிலையே இருந்தது. அதைக் கைதிகளும் அறிந்திருந்தனர். எந்த நீதிமன்றமும் அல்கட்ராஸ் சிறையில் அடைக்கவும் எனக் கைதிகளுக்கு தண்டனைக் கொடுத்ததில்லை. பிற மத்திய சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்க முயல்பவர்கள், வன்முறையாளர்கள், அதிக அளவு கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பவர்கள் அல்கட்ராஸ் சிறைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது தண்டனை பெற்ற கைதிகள், குற்றம் செய்து அதிக அளவு தண்டனையாக அல்கட்ராஸ் சிறைக்குப் போவது (“the prison system’s prison”) வழக்கம். அல்கட்ராஸ் சிறைச்சாலைகளின் சிறை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 October 2017

தமிழ் எழுத்து கற்றல்! (கவிதை)


Siragu tamil4
உயிரெழுத்து பன்னிரண்டு அதை – உன்
உடலோடு ஒற்றிடு!
மெய்யெழுத்து பதினெட்டு அதை –உன்
உயிரோடு கலந்திடு!

உயிரும் மெய்யும் கலந்த –உன்
உயிர் தமிழைக் கற்றிடு!
உயிர் தமிழைக் காக்க போர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்


Siragu nadugal2
அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 October 2017

அதிதி (சிறுகதை)


Siragu adhithi1
பாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம்.
அப்போது தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின் அர்ச்சகர் தேங்காயை   சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும் இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய் சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை எடுக்க வெட்கப்பட மாட்டான்.

அவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான். கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான். அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான். அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-2)


II. சிறைச்சாலை சுற்றுலா:
Siragu alkatraas2-1
அல்கட்ராஸ் தீவிற்குச் சுற்றுலா செல்ல விரும்பினால் சில முன்னேற்பாடுகள் தேவை, கலிபோர்னியா மாநிலம் நல்ல தட்பவெப்பநிலை உள்ள இடம்தானே என நினைத்து சாதாரண உடைகளுடன் வர நினைத்தால் குளிரில் நடுங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். வானிலை எப்படி இருக்கக்கூடும் என்று நிர்ணயிக்க முடியாத ஒரு பகுதி சான் பிரான்சிஸ்கோ நகர். “நான் அறிந்த மிகவும் குளிரான ஒரு காலம் சான் பிரான்சிஸ்கோவில் நான் வசித்த கோடைக்காலம்” என மார்க் ட்வைன்   (“The coldest winter I ever saw was the summer I spent in San Francisco”― Mark Twain) கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே குளிராடை கைவசம் இருப்பதும், தேவையினால் நீண்ட நடைப் பயணம் செய்ய வசதியான காலணியும் இருப்பதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியம். வாடகை ஊர்திகளையும், நகரப் பேருந்துகளையும் கொண்டு தீவுக்கான ‘படகுத்துறை எண் 33′ இருக்கும் புகழ்பெற்ற ‘ஃபிஷெர் மேன்ஸ் வார்ஃப்’ (Fisherman’s Wharf) பகுதிக்கு வருவதே சிறந்த வழி. சொந்த ஊர்தியில் பயணித்து சான் பிரான்சிஸ்கோ வந்த பிறகு அதை நிறுத்த இடம் தேடுவதோ மிகப்பெரிய தலைவலி.

மேலும், அல்கட்ராஸ் தீவு சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டை இணையம் வழி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாலும், பார்வையாளர் கூட்டம் அதிகமிருப்பதாலும் முன்பதிவு செய்வது ஏமாற்றத்தைத் தவிர்க்கும். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் படகுத்துறையில் இருந்து படகுகள் தீவை நோக்கிச் செல்லும். மேலும் படகில் அனுமதிக்கும் முன்னர் அரசு வழங்கிய அடையாள அட்டையையும் காட்டத் தேவை. தீவின் கடைசிப் பார்வையாளர் நேரம் வரை அங்கு எவ்வளவு நேரமானாலும் தங்கலாம். தீவைச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது தேவை. அதனால் சுற்றிப் பார்த்து முடித்த பிறகு அவரவர் விருப்பம் போல கிடைக்கும் அடுத்த படகைப் பிடித்து சான் பிரான்சிஸ்கோ வரலாம். தீவில் மலர்களை இலைகளைப் பறிப்பது போன்ற செடி கொடி மரங்களுக்குத் தீங்கு செய்யும் நடவடிக்கைகளையும், பறவைகளுக்கு உணவளிப்பது போன்ற செய்கைகளையும் செய்ய அனுமதியில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 17 October 2017

நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் நாட்டுப்புற மருத்துவம்


Siragu naanjil naadan2
கதை மனித சமுதாயத்திற்கு மிகப்பழமையான சொத்து. காவியங்களில் நீண்ட பாட்டுக்களில் கதை அமைத்து வந்தனர். நாவல்களும் சிறுகதைகளுமாகிய இக்கால இலக்கிய வடிவங்கள் இல்லையாயினும் கதைகள் பல இருந்தன.
பாடுபொருளின் பரிணாம வளர்ச்சி, தட்டச்சின் கண்டுபிடிப்பு, போன்றவை சிறுகதை என்னும் இலக்கிய வகைமையை தனித்துறையாக வளர்த்தியது. வீரமாமுனிவர், வா.வே.சு ஐயர், புதுமைப்பித்தன் போன்றோர் இத்துறை வளர்ச்சிக்கு மூலாதாரமாக விளங்கினர்.
சமூகத்தின் அவலங்களை அப்படியே பிரதிபலித்துக் காட்டி தான்கூற வந்த கருத்துக்களை அழகாகவும், ஆழமாகவும்பதியவைக்கும் திறன் சிறுகதைக்குண்டு.

இன்றைய இலக்கியங்கள் சோலையில் தினம் தினம் வளரும்பூக்களாய், வண்ணத்துப் பூச்சிகளாய், புற்றீசல்களாய் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இக்கால இலக்கியங்களின் பாடுபொருள் மிக விரிவுடையதாக அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, மற்றும் நினைவுகளை, நடக்கின்ற நிகழ்ச்சிகளை செயல்களை நடக்கவிருக்கும் எண்ணங்களைக் கனவுகளை என அனைத்தையும் தனது கற்பனையின் மூலம் பாடுபொருளாகக் கொண்டு இலக்கியங்களைப் படைக்கின்றனர் தற்காலப் படைப்பாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 11 October 2017

புதிய பாதை நோக்கி! (கவிதை)


puratchi kavignar14

பரிதி எழுந்த நல்பொழுது
பாவை யவள்துயில் கலைந்தாள்
பாரின் மிசையொளி காணப்
பாவை யவள்முகம் பூத்தாள்
அஞ்ஞன விழிக்கதிர் காயும்
அருணண் முகம்நேர தொழுதாள்

தந்தை தாய்முகம் கண்டு
தாள்வணங்கி பள்ளி சென்றாள்
வாழ்வுக் கின்பந் தரும்நற்
பாடம் அதனைக் கற்றாள்
வாழைக் குலைபோல் பெண்வாழ்வு



வீணாதல் நன்றோ?யென விழித்தாள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday 10 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .


Siragu alkatras1
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி, கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வடக்கே, வளைகுடாவில் உள்ள பாறையிலான ஒரு சிறிய தீவான “அல்கட்ராஸ் தீவு” என்ற இடம் மிகவும் புகழ்பெறக் காரணமாக இருந்தது அங்கிருந்த அமெரிக்க மத்திய சிறைச்சாலை. மிகவும் கொடுமையான கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், கடத்தல்காரர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்ததுடன் அல்லாமல், யாரும் தப்பவே வழியில்லை என்றிருந்த நம்பிக்கையையும் முறியடித்து சிறைக்கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிவிட்டதும் சாதாரண ஒரு சிறைச்சாலைக்கு இந்தப் புகழ் வரக் காரணமாக இருந்தது. சிறை மூடப்பட்ட பின்னர், இன்று அல்கட்ராஸ் தீவு அமெரிக்க வனத்துறையின் (U.S. National Park Service) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உலகிலேயே கடுமையான சிறைச்சாலை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இத்தீவைப் பார்வையிட வருகிறார்கள். இத்தீவின் பாறைத் தன்மையால் இது ‘தி ராக்’ (“The Rock”) என்றும் அழைக்கப்படுகிறது.
I. பாறையின் வரலாறு:
அல்கட்ராஸ் தீவின் வரலாற்றைப் பொதுவாக பழங்குடியினர் குடியிருப்புக் காலம் (1769 ஆண்டுக்கு முன்னர்), ஸ்பானிஷ் ஆட்சியர் காலம் (1770-1848), அமெரிக்க இராணுவத்தின் காலம் (1849 – 1933), அமெரிக்க மத்திய சிறைச்சாலைக் காலம் (1934-1963), பழங்குடியினர் உரிமைப் போராட்டக் காலம் (1969-1971), அமெரிக்க வனத்துறையின் வரலாற்றுச் சுற்றுலாத்தலம் காலம் (1973 –) எனப் பல பிரிவுகளாக நிகழ்வுகளின் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்துக் கூறினாலும், இன்றென்னவோ அனைவரையும் கவரும் வண்ணம் நிலைத்து விட்டது அது சிறைச்சாலையாக இருந்த காலம் மட்டும்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 9 October 2017

இவரைத் தெரியுமா? சாக்கிலி இல்லமா


Siragu chakali ilamma1
தெலுங்கானா ஹைதராபாத் மாநிலத்திலுள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதி நிலப்பிரபுத்துவ மேட்டிமை வர்க்கத்தினரால் ஆளப்பட்டு வந்தது.
ஜாகிர்தார், நேர்முக மற்றும் குத்தகை அமைப்பும் அதன் காரணமாக நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நடப்பில் இருந்தன.
தெலுங்கானா மக்கள் அடிமைத்தனமான ஒரு வாழ்வையே நடத்தினர்.
நிலப்பிரபுக்களைக் காணும் போது “எஜமானனே இங்கே இருக்கிறேன் உங்கள் அடிமை உங்கள் கால்களை நான் தொடுவேனாக” என்று ஒவ்வொரு சாதாரண மனிதனும் வார்த்தைகளை வெளிப்படுத்துவது அவர்களின் பரிதாபமான நிலைமையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஒடுக்குமுறை தன்மையினையும் பிரதிபலிப்பதாய் இருந்தன.

தெலுங்கானாவின் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் நிஜாம் நவாப்புக்குச் சொந்தமாக இருந்தன, அதே நேரத்தில் எஞ்சிய 50% நிலம் பெரும் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 6 October 2017

கீழடித் தொல்லியல்! (கவிதை)


Siragu keezhadi1

எத்துணை எத்துணை ஆதாரங்கள் -பல
தலைமுறை தலைமுறை யாய்வாய் செவிவழிச்
செய்தியாய் சங்கநூற் குறிப்புகளாய்த் தொடாந்த
பழந்தமிழர் வாழ்விற் கொருபுது ஆதாரம்
“கீழடி”யெனும் பெருநகரம் ஆ!ஆ!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 5 October 2017

உடை தடையல்ல…(சிறுகதை)


Siragu IT staffs1
பட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த ஸ்னேகாவை அபிஷேக், வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அழகு நவீனமாக பொற்சிலை போலுள்ள ஸ்னேகாவைப் பார்த்து அவள் அலுவலகத்தில் ஜொள்ளு விடாத ஆண்களே இல்லை. வசீகர கண்களையுடைய கட்டழகி. தலையை வாராமல் படர்ந்திருந்த அவள் கருங்கூந்தல் தோகை போலிருக்க, கோவில் செப்பு சிலையை மிஞ்சும் அவளின் இளமை செழிப்பு பட்டுப் புடவையில் எடுப்பாக கண்ணுக்கு விருந்தளித்தது. அவளுடன் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் செய்யும் வேலையை மறந்து விட்டு அவளைக் குதூகலத்துடன் பார்த்தனர். அவள் அபிஷேக்கைப் பார்த்து கையை அசைத்தாள். தேர் ஆடுவது போலிருந்தது.
ஸ்நேகா, சாதனா, அபிஷேக் எல்லாம் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கேம்பஸ் இண்டெர்வியூவில் செலக்ட் ஆகி பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அந்தரப் பிழைப்பின் அவலம்


(இலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு – கோ .நடேசய்யர் நாடகத்தை முன்வைத்து)
Siragu andhara pizhai10
அரசாங்கத்தின் பேருந்து மட்டும் சென்று வரும். தனியார் வாகனங்கள் செல்ல இயலாது. அப்படி செல்ல வேண்டியிருந்தாலும் சோதனைச் சாவடியில் எல்லா விபரங்களையும் பதிவு செய்தபின்பே செல்லமுடியும். தொழிலாளர் வீடுகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் உறவினர் யாரேனும் வருவதாக இருப்பின் நிர்வாகத்திற்கு முன்னமே சொல்லி அவர்களின் விபரங்களையெல்லாம் கொடுத்து அனுமதி பெறவேண்டும். தொழிலாளிக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்படால்கூட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியில் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.