Tuesday 31 December 2019

இன்றும் சம்பூகன்களும் இராமன்களும்

சம்பூகன் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இளைஞன் தவம் செய்ததால் ஒரு பார்ப்பன இளைஞன் மரணம் அடைந்து விட்டதாகக்கூறி, சம்பூகனை இராமன் தலைகீழாகத் தொங்கப்போட்டு, கழுத்தை வெட்டிக்கொன்றார். இதே போன்ற நிகழ்வு ஒன்று ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்டகுடா கிராமத்தில் நடைபெற்று உள்ளது.
siragu samboogangalum1

யாகங்கள் செய்வதினாலும், மந்திரங்களை உச்சரிப்பதினாலும் ஒரு நரை மயிரைக் கருப்பாக்கக்கூட முடியாது. ஆனால் இவற்றினால் அரிய பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பும் ஒரு பெரும்மக்கள் திரள் நம்மிடையே இருக்கவே செய்கிறது. கூடவே இந்த யாகங்களையும் மந்திரங்களையும் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் “ஒப்புதல்” பெற்றவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதிலும் சாதிப்படி நிலையில் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியில் உள்ளவர்கள்தான் இவற்றைச் செய்யத் தகுதி பெற்றவர்கள் என்று மனமார நம்புகிறார்கள். அதுகூடப் பரவாயில்லை. தங்கள் சாதியைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்கள் இவற்றைச் செய்தால் கோபம் பொத்துக் கொண்டுவந்து விடுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 27 December 2019

குன்றக்குடி குறவஞ்சியில் காணலாகும் வழிபாட்டு மரபுகள்


siragu kundrakudi-kuravanji
1837 ஆம் ஆண்டளவில் வீரபத்திரக் கவிராயர் என்பவரால் குன்றக்குடி குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் பாடப்பெற்றுள்ளது. இது ‘குன்றாக்குடி குறவஞ்சி’ எனவும், ‘குன்றக்குடியில் எழுந்தருளியிருக்கும் சிவசுப்பிரமணியக் கடவுள் குறவஞ்சி’ என்றும் அழைக்கப்பெறுகின்றது. குன்றா வளமுடைய இக்குறவஞ்சி குன்றாக்குறவஞ்சி என்று அழைப்பது மிகவும் பொருத்தமுடையதாகும்.


இக்குறவஞ்சி சொல்நலம், பொருள் நலம், உவமை நலம் பெற்று விளங்குவதுடன் குன்றக்குடி கோயில், மடம் ஆகியன பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் குன்றக்குடியைச் சுற்றியுள்ள வயல்களின் பெயர்கள், அங்கு திரிந்த கொக்குகளின் வகைகள், குன்றக்குடி மட வரலாறு, குன்றக்குடி சந்நிதானப் பெருமை போன்ற பலவற்றையும் அழகுபட மொழிகின்றது. குறவஞ்சிக்கான இலக்கணக் கட்டமைப்பு மாறாமலும் அதேநேரத்தில் குன்றக்குடி பற்றிச் சொல்லவேண்டிய செய்திகளை சொல்லிய நிலையிலும் இக்குறவஞ்சி குறவஞ்சிவ கை வரலாற்றில் குறிக்கத்தக்கதாக விளங்குகிறது. இக்குறவஞ்சி தரும் வழிபாட்டு மரபுகள் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் தொகுத்து உரைக்கப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 December 2019

கைபர் காண்வாய் சிரிக்கின்றது… (கவிதை)


siragu kaibar1

உண்ணும் உணவின்
உறைப்பும் உப்பும்
சுவைக்காது,
கருநீலக் கண்கள்
வெளிறியிருக்கும்
தூங்குவது போன்றது
சாக்காடு பின் தூங்கி
விழிப்பது நம் பிறப்பு,
என்பதில் தூக்கம் கலையா
சாக்காடே மேலென விழித்திருக்கும்
கண்கள் உண்மை உரைக்கும்,
பிறந்த குழந்தை பெற்றவளுக்கு

சுமையாகும்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/

Monday 23 December 2019

செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி


Siragu sembiyan cover
பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும், வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர்.

தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் ‘செம்பியன் மாதேவி – வாழ்வும் பணியும்’ என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது. பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019 வெளியீடு கண்டது இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழக கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 December 2019

தொழில் நுட்பவியல்- பகுதி-2

நாவாய் (கப்பல்)
siragu tholil nutpaviyal4
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பண்டைத் தமிழகக் கடற் பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. கடலை நம்பி வாழ்ந்த மக்கள் கலம் செலுத்துவதிலும் வல்லவர்களாயிருந்தனர். காவிரிப் பூம்பட்டினமும், கொற்கையும், முசிறியும் தலைசிறந்த துறைமுக நகரங்களாக இருந்தன. பழங்காலத்தில் இந்திய நாட்டின் ஏனைய பகுதிகளை விடப் பழந்தமிழ் நாடே கடற்படை ஆற்றலில் சிறந்திருந்தது என்பதை நிலவியல் ஆசிரியர்கள் எடுத்தியம்பி உள்ளனர்.

புழந்தமிழ் தொழில்நுட்ப ஆற்றலைப் புலப்படுத்தும் வண்ணம், அம்பிகள், முகப்பில் விலங்கு, பறவை, மனிதனின் தலைவடிவங்கள் இடம் பெற்றன. கட்டுமரம், தோணி, ஓடம், பஃறி, பரிசல், படகு திமில் முதலியன சிறுசிறு தொழில்புரியப் பயன்பட்டன. கலங்கள் பெரும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நீர் விளையாடவும், பொழுது போக்கவும் சங்ககால மக்கள் புணை, தெப்பம் மிதவை முதலானவைகளையும், பறவைமுக அம்பிகளையும் பயன்படுத்தினர். பெரும் அகழிகளையும் ஆறு, கடல் முதலானவற்றையும் கடப்பதற்கு போர்க் காலங்களிலும் அரிமுக அம்பி, கரிமுக அம்பி, பரிமுக அம்பி, புலிமுக அம்பி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 December 2019

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள்


siragu melaanmai ponnusami3
கரிசல் மண் சார்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். மேலாண்மறைநாடு என்ற சிற்றூரில் பிறந்து, ஓரளவிற்குப் பள்ளிக் கல்வி பெற்று, தன் இலக்கிய வாசிப்புத் திறனால் எழுத்தாளராக உருவானவர். தன் சிறுகதைப் படைப்புகளுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற இவர் தன் கதைகளில் பல சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்தியுள்ளார். கூலித் தொழிலாளர் தம் நேர்மை, போராடுபவர்களின் வெற்றி, பெண்களின் மேன்மை, மக்களிடம் காணப்படும் மனிதத்தன்மை போன்றன இவரின் கதைகளில் விழுமியங்களாக வெளிப்பட்டு  நிற்கின்றன. இவரின் கதைகளில் கரிசல் மண் சார்ந்த மனிதர்களின் தன்மைகள், கரிசல் மண் சாரந்த புழங்கு பொருள்கள், கரிசல் வட்டார வழக்குகள் போன்றன இயல்பாக அமைந்துள்ளன. இவரின் கதைகள் வழியாக சமத்துவமாக, தேமற்ற சமுதாயத்தை காணும் இவரின் விருப்பத்தை அறிந்து கொள்ளமுடிகின்றது.

மானாவாரிப் பூ, பூக்காத மாலை, மின்சாரப்பூ போன்றன இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள் ஆகும். மின்சாரப்பூ என்பது இவரின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைத்தொகுப்பாகும். மின்சாரப்பூ தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் காணலாகும் சமுதாய விழுமியங்கள் குறித்த செய்திகளை இக்கட்டுரைத் தொகுத்து ஆராய்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 16 December 2019

எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?

தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ வாரப் பத்திரிக்கை 1823ஆம் ஆண்டில் தாமஸ் வேக்லி (Thomas Wakely) என்ற ஆங்கிலேய மருத்துவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. இன்று இது இலண்டன், நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் மருத்துவ அறிவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் (WHO), பல்கலைக் கழகக் கல்லூரி, இலண்டன், (University College, London), திசுங்குவா பல்கலைக் கழகம், பெய்ஜிங் (Tsinghua University, Beijing) உட்பட உலகின் மிக உயர்ந்த 33 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஒன்று இதில் வெளியாகி உள்ளது. இது புது தில்லியில் 13.11.2019 அன்று பத்திரிக்கையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
siragu edharkaaga1

இக்கட்டுரையில், புவி வெப்ப உயர்வு தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், இதன் காரணமாக, உணவு தானிய உற்பத்தி 2% குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புவி வெப்ப உயர்வு, ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தை மட்டும் அல்ல, பணக்கார நாடுகளின் குழந்தைகளின் உடல் நலத்தையும் ஏற்கனவே பாதித்து உள்ளது என்றும், இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் உலகில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மருத்துவ அறிவியல் – பகுதி – 2


siragu iyarkai maruththuvam
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து(950)
அதாவது மருத்துவர் நோயாளியின் உடல் நிலையை கண்டறியவேண்டும். நோயின் தன்மையை அறிந்து அதற்கேற்றார் போல் மருந்து கொடுக்கவேண்டும். மருத்துவன் நோயைப்பற்றிய நுண்ணறிவும், அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். கொடுக்கும் மருந்து நோயைக் குணமாக்காவிட்டாலும் சரி, பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. நோயாளியின் பிணிஅறிந்து  கவனித்துகொள்ளும் உதவியாளர் இருக்கவேண்டும் என்பன போன்றனவற்றை மருத்துவச் செயல்முறைகளாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் தரவில்லை. மேலாக உள, உடல்நோய்க்கு மருந்து கொடுப்பவர்களாகவே இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வாயுறை வாழ்த்து என்னும் அறிவுரை பற்றி  எடுத்தியம்பும், தொல்காப்பியர் கசப்பான மூலிகைகளான வேம்பும், கடுவும் முதலில் வெறுக்கப்பட்டாலும் முடிவில் நலம் பயப்பதால் பெரிதும் விரும்பப்படும் என்பர். இதனை வேம்பும் கடுவும் போல (தொல்காப்பியம், பொருள்-417) என்ற நூற்பாவின் மூலமாகத் தொல்காப்பியர் காலத்தில் வேம்பும் கடுகும் மருந்தாகப் பயன்பட்டிருந்தன என்பதையும் நோயும் அதற்கான மருந்தும் வகுக்கப்பட்டிருந்தன என்பதையும் அறிய முடிகிறது. இச்செய்தி தொல்காப்பியரின் மருத்துவ அறிவை விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

காலம் இப்படியே போகாது… (சிறுகதை)


siragu kuruttaattam1
“என்ன தாயி ஒரு மாதிரி இருக்க? ஒடம்பு ஏதும் சரியில்லையா?”
“அதெல்லாம் இல்லம்மா, நான் இஸ்கூலுக்கு போயிட்டு வரேன்”
“சரிம்மா”
மருதாயி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் தாய் அஞ்சுகம் வீட்டு வேலை செய்து தான் அவர்கள் பொழப்பு ஓடுகின்றது. அஞ்சுகத்தின் கணவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். ஏதோ கொஞ்சம் பணம் வரும். மருதாயி அவர்களுக்கு ஒரே மகள். எப்படியும் அவளை உசந்த படிப்பு படிக்க வச்சிரணும்னு இருவருமே வாயை கட்டி வயித்தை கட்டி உழைத்தார்கள்.
அஞ்சுகத்திற்கு ரெண்டு நாளாக காய்ச்சல், வீட்டில் ஒரு சமையலும் செய்ய முடியவில்லை. எப்படியும் இன்னைக்கு புள்ளைக்கு எதாவது செஞ்சு கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டே கடை வீதிக்கு தளர்வாக நடந்து வந்தாள். .

“இந்தா அஞ்சுகம், உம் பொண்ணு வந்தா ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டு போகச் சொல்லு”, என்று மீனாட்சி மாமி கூறினாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 13 December 2019

மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம்

தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.
siragu 13aam-ulagil-oru-kadhal-book-cover

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 December 2019

தொழில் நுட்பவியல்

பண்டைத் தமிழர் புவியியல், பயிரியல், உயிரியல், தொழில் நுட்பவியல் ஆகிய அறிவியல் துறைகளில் மேம்பட்டவர்களாக விளங்கியுள்ளனர். அவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன. அவற்றுள் தொழில் நுட்பவியல் குறித்த செய்திகள் மட்டும் ஈண்டு ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்ககாலத் தொழில் நுட்பவியலுக்கு அக்காலத்து எழுந்த கட்டிடங்கள், அரண்கள், நகரமைப்பு, கப்பல்கள், போர்கருவிகள் ஆகியன சான்றாக உள்ளன. அவைகள் குறித்த செய்திகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டிடக்கலை:
siragu tholil nutpaviyal1

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது அரண்மனை திட்டமிடப்பட்டுச் சிற்பநூல் வல்லாரால் கட்டடப்பெற்றது. மன்றங்கள், நாளோலக்க மண்டபம், படைவீடு, கருவூலம், வழிபடு தெய்வங்களுக்குரிய கோட்டங்கள், அட்டிற்சாலை, இளவேனில் மண்டபம், பள்ளியறை, அரசியின் கோயில்மாடம், மாளிகைக் கூடம், கோபுரம், யானைத்தறி, குதிரைக் கொட்டில், பயிற்சிக்கூடம் முதலான அமைப்புகளுடன் அரண்மனை அமைக்கப்பட்டிருந்தது. கட்டடக்கலை வல்ல பொறியாளர் நுண்ணிய நூலைப் பிடித்து மன்னர்கேற்ப அரண்மனை அமைத்துள்ளனர். அரண்மனையைச் சுற்றி மாடங்களும், அவற்றை வளைத்து மதிலும் கட்டப்பட்டன. வாயிலருகில் கொற்றவை கோயில் கட்டப்பட்டது. வாயிற்கதவுகளிரண்டிலும் உத்திரம் என்னும் மீனின் பெயர் கொண்ட உத்திரக் கற்கவியில் இரண்டு குவளை மலர்களைப் போலச் செய்யப்பட்ட கைப்பிடிகள் செருகப்பட்டன. அவை தாழ்ப்பாளுடன் அமைத்தவை. கைவன்மை மிகுந்த கருமான் பரித்த இரும்புசிட்டியால் பிணித்துச் செவ்வரக்கிட்டு முடுக்கிச் செய்யப்பட்டதால் கதவுகள் குற்ற மற்றவையாக இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 December 2019

மண்ணியல்


siragu manniyal2
மண்ணியல் என்பது மண்ணின் வகைபற்றிப் பழக்கும் அறிவியல் மட்டும் அன்று. மண்ணியல் என்பதை ஆங்கிலத்தில் என்பர். புவி பற்றிய அறிவியல். அறிவியல் என்னும் மரத்தின் கிளை மண்ணியல். எல்லா அறிவியல் துறையும் நிரூபித்தல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கும். ஆனால் மண்ணியல் மட்டும்தான் ‘இப்படி இருக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும். மண், கல், பாறை, அதன் வகைகள், நீரியல் வானம், விண்மீன், சூரியக்குடும்பம், கோள்கள், கற்படி உருவங்கள், படிகங்கள் பற்றிப்படிப்பதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், கடல்கோள் பற்றிப்டிப்பதும் மண்ணியல் ஆகும். இயற்பியல், வேதியியல் துறைகள் அறிவு, புவி அமைப்பியல் பற்றிய கருத்துகளும் இடம்பெறும் இது குறித்து ‘செம்மொழி இலக்கியங்களில்’ சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை ஆய்வு நோக்கில் சுருங்கக் காணலாம்.
தொல்காப்பியர் விண்வெளி விஞ்ஞானி

தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல் இலக்கண, இலக்கிய நூலை யாத்த தொல்காப்பியர் கி.மு 711 இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 2 December 2019

மருத்துவ அறிவியல்

siragu medical2
ஒவ்வொரு மனித சமுதாயமும் நலவாழ்வைக் கொண்டியங்குவதில் ஒரு மேம்பட்ட அறிவியல் பூர்வமான செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன என அறிகிறோம். மனித சமூகத்தில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ முறைகளைப் பார்க்கும்பொழுது நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாது.
ஐரோப்பியர்கள் வந்த பிறகு அலோபதி மருத்துவமுறைகள் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துள்ளது என்றாலும், தமிழர்கள் காலங்காலமாகத் தனித்துவமான மருத்துவ முறைகளைக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், வாய்மொழி வழக்காறுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், போன்றவற்றில் காணமுடிகிறது. இத்தகைய மருத்துவத்தை தமிழர் மருத்துவம் அல்லது தமிழ்மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

கிராமப்புற மக்கள் குறித்த வாழ்வியல் வழக்காறுகளை ஆய்வுசெய்யும் அறிஞர்கள், தமிழ் மருத்துவத்தை நாட்டுப்புற மக்களே பெரும்பான்மையாக கையாளுவதால் இதனை நாட்டுப்புற மருத்துவம் என்பர். தமிழகக் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம், கைமருத்துவம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம் என்றும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Thursday 28 November 2019

உயிர்த்தோற்றம்


siragu uyiriyal5
செந்தமிழ் மொழியின் பண்டை இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். தனித்தனிப் பாக்களால் இருந்தவற்றை அகப்பாடல்கள் என்றும், புறப்பாடல்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை நானூறு என்ற எண்ணிக்கையிலும் பத்து என்ற எண்ணிக்கையிலும், நானூறு என்ற எண்ணிக்கையிலும், ஐந்நூறு என்ற எண்ணிக்கையிலும் தொகுத்துப் பண்டைத் தமிழ் அறிஞர்கள் வகைப்படுத்தித் தந்துள்ளனர்.
அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியங்களில் கடவுள் நம்பிக்கை பற்றிய செய்தியும், கடவுளால் படைக்கப் பெற்ற உடல் வகைகளைப் பற்றிய செய்தியும், அவ்வுடலை இயக்குகின்ற உயிர்களின் தன்மை பற்றிய செய்தியும், அவ்வுயிர்கள் தத்தம் பண்டை ஊழ்வினைக்கு ஏற்றவாறு உடம்பினைப் பெறுகின்றன என்ற செய்தியும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற பொதுத் தலைப்பில், சங்க இலக்கியங்களில் காணப்படும் உயிர் பற்றிய கொள்கைகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்டு தொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்த கடவுள் கொள்கை முப்பொருளை உணர்த்தும். அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவனாக விளங்கும் இறைவன் முதற்பொருள். இறைவனைப் பதி என்ற குறியீட்டுச் சொல்லால் குறிப்பிடுவர். அந்த இறைவனின் கருணைப் பெரு வெள்ளத்தால், தனு, கரண, புவன போகங்கள் என்று கூறப்படும் உடம்பு, கருவிகள், உலகம், போகப் பொருள்கள் என்பவை படைக்கப் பெறுகின்றன. படைக்கப் பெற்ற பொருளைப் பயனுடையதாகக் கொள்வதற்குக் கடவுள் தோன்றிய பொழுதே, அவன் இயங்குவதற்குரிய நிலைக்களமாக உயிர்கள் தானே தோன்றின. அந்த உயிர்களின் இயக்கம் வினையின் அடிப்படையில் அமைகிறது என்ற வினைக்கொள்கையும் பண்டு தொண்டு வழங்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் கடவுள் கொள்கை பதி என்றும், உயிராகிய பசு என்றும், வினையாகிய பாசம் என்றும் முப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்கி வருகின்றது. பதி, பசு, பாசம் என்ற கடவுள் கொள்கையின் முப்பொருளைச் சங்க இலக்கியங்கள் பலவாறு பதிவு செய்துள்ளன. அதில் உயிரின் தோற்றம் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தொகுத்துத்தர முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 November 2019

கடல் பயணம்


siragu kadal payanam1
மக்கள் பழங்காலம் முதலே பயணம் மேற்கொண்டுள்ளனர். நாடோடிகளாக, கால்நடை வளர்ப்பவர்களாக பழங்கால மக்கள் பயணப்பட்ட பயணங்கள் அதிகமாகும். நாகரீகம் வளர வளர நிலப்பயணம் தாண்டி நீரைக் கடக்கும் கடல் பயணத்திற்கும் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் நடைமுறை வாய்த்தது.
கடல் பயணம் ஏன் அவசியம் என்று ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கு இன்றைய நிலையில் கிடைக்கும் பதில் பின்வருமாறு.
கடல் பயணத்தின் அவசியம் இரண்டு மட்டுமே
1.    பொருளீட்ட கடல் செல்லுதல்
2.    சுற்றுலா நிமித்தமாக
இவ்வுலகில் 90% வணிக பொருள் கடல் மார்கமாக தான் எடுத்துச் செல்கின்றது, என் என்றால்.. கடற்பயணம்
•    மிகவும் பாதுகாப்பானது
•    அதிக பொருள்கள் கொண்டு செல்ல முடியும்
•    சூழல் நட்பு உடையது
•    மிக மலிவானது

இக்காலத்திலேயே கடற்பயணம் இவ்வளவில் ஏற்புடையது என்றால் காற்றுவழி விமான சேவை வருவதற்கு முன்னதான காலத்தில் கப்பல் பயணம் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினை அளித்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 25 November 2019

ஆய்வு வழியில் வள்ளுவர்


siragu thiruvalluvar1
ஆராய்ந்து அறியும் மனப்பான்மையைக் கொண்டோர் பண்புகள் எத்தகையனவாக இருக்கும்?
          அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
          பெரும்பயன் இல்லாத சொல். (பயனில சொல்லாமை: குறள் – 198)
அருமையான பயனளிக்கக் கூடியவை எவை என ஆராய்ந்து அதனை அடைய முயலுவோர், பெரும் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள். அதாவது, அவர்கள் வெற்றுப் பேச்சைத் தவிர்ப்பவர்கள்.
வள்ளுவரும் அத்தகையவர் என்பதை அவர் தமது அறநூல் கருத்துக்களைக் குறட்பாக்களாக ஈரடியில் எழுதியது உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பண்பு கொண்ட வள்ளுவர் எப்பொழுதெல்லாம் ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ (அறிவுடைமை: குறள் – 423) என்று கூறுமிடத்து, உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிவதுதான் அறிவுடைமை என்கிறார் வள்ளுவர். அவர் எந்தெந்த சூழ்நிலையில் ஆராய்வதைக் குறித்துத் தமது திருக்குறளில் கூறியுள்ளார் என்ற ஒரு மீள்பார்வை, வள்ளுவர் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு அறியத் தரும். அதை கடைபிடிப்பது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உதவும் என்பதும் திண்ணம்.

நாம் ஆய்வைப் பயன்படுத்த வேண்டிய சூழல் எது? என்ற கோணத்துடன் குறட்பாக்களை ஆய்வு செய்யும்பொழுது (1) உறவுமுறை கொள்ளுதல், (2) செயலாக்கத் திட்டங்கள், (3) வாழ்வியல் அறிதல், (4) ஆட்சிமுறை அறங்கள் ஆகியவற்றில் ஆய்வுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கூற்றின் மூலம் தெளிவாகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 20 November 2019

சங்க இலக்கியத்தில் உளவியல்


siragu enkunaththaan2
‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்பார் மகாகவிபாரதி. அத்தகைய வளம் நிரம்பியது தமிழ்மொழி. ஆனாலும் உலக அளவில் செவ்வியல் மொழி-அதாவது செம்மொழி என்று தமிழ்மொழி அறிவிக்கப்படவில்லை. கிரேக்கம், இலத்தீனம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகியன செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ‘செம்மொழி’ என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உலக அளவில் 11-தகுதிப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தகைய 11-தகுதிப்பாடுகளும் தமிழ்மொழிக்கு உண்டு.
1.    தொன்மை, 2. தனித்தன்மை, 3. பொதுமைப்பண்பு, 4. நடுநிலைமை, 5. தாய்மைத்தன்மை, 6. பண்பாடுகலை பட்டறிவு இவற்றின் வெளிப்பாடு 7. பிறமொழித் தாக்க மிலாத் தனித்தன்மை 8. இலக்கியவளம் 9. உயர்சிந்தனை 10. கலை, இலக்கியத்தனித்தன்மை வெளிப்பாடு, பங்களிப்பு 11. மொழி, மொழி இயல்கோட்பாடு- என்ற 11 தகுதிப்பாடுகளில் ‘இலக்கியவளம்’ என்னும் கோட்பாடு குறித்தும், அது எவ்வாறு தமிழில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது என்றும் இச்சிறு கட்டுரையில் காண்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழரின் உணவுமுறை


siragu unaviyal1
உயிரினங்கள் கூடிவாழும் உயிர்த்தொகுதி சமுதாயம் என்ற பெயரால் சுட்டப்பெறுகின்றது. சமுதாயத்தில் வாழும் எவ்வுயிராயினும் அவ்வுயிர், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் உரிமையை இயற்கை வழங்கி இருக்கிறது. உயிரினங்களுக்கான நிலைநிறுத்தக்காரணிகள் பலவாறுயிருப்பினும் அவற்றுள் நிலம், உணவு என்ற இருகாரணிகளே மானுட வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றது. உணவு உற்பத்திக்கு நிலம் உதவுகின்றது. உயிர் வாழ உணவு தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் நிலத்துடன் இயைந்த தமிழரின் உணவுமுறையின் கூறுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உணவும் வாழ்வும்

ஆரம்ப காலத்தில் இனக்குழுச்சமூகமாக இருந்த மனித சமூகம் இயற்கையாகக் கிடைத்தவற்றை உண்டு வாழ்த்தல், அடுத்த நிலையில் தன் வயிற்றுப்பிழைப்பிற்காக வேட்டையாடுதல் என்றிரு வேறு நிலைகளில் உணவு சேகரிப்பு நடந்தது. உணவு சேகரிப்பு என்ற செயல்பாட்டிலிருந்து தான் மனித சமூக வரலாறு எழுதப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/

Monday 18 November 2019

பண்பாட்டு படையெடுப்பும் – திருக்குறளும்


siragu thirukkural1
திருக்குறளைச் சுற்றி எப்போதும் வட்டமிடும் சனாதனம் விரும்பிகளிடம் இருந்து திருக்குறளை மீட்க வேண்டிய பொறுப்பு திராவிடர் இயக்கங்களுக்கு உண்டு. பரண் மீது தூங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மீட்டெடுத்து மக்களிடம் உலவ விட்ட பெறுமை திராவிடர் இயக்கத்தையே சாரும். திருக்குறள் ஏன் பரண் மீது தூங்கிக் கொண்டு இருந்தது? என்ற கேள்விக்குப் பின் இருக்கும் பதில் அது சனாதன எதிர்ப்பு பேசியது, வர்ணபேதங்களை எதிர்த்தது என்பது தான். இன்று எவை எல்லாம் திராவிடர் இயக்கத்தால் மீட்கப்பட்டு தமிழர்களின் அடையாளமாக மாற்றப்பட்டதோ அதை எல்லாம் தொடர்ந்து காவிகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றனர். ஒரு பக்கம் திருக்குறளை உவமையாக பேச்சில் எடுத்துக்காட்டுவது மறுபுறம் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது, பட்டையும் கொட்டையும் மாட்டி விடுவது, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பேருந்துகளில் திருக்குறள் என்பதை மாற்றி இந்து மத வாசகங்களை எழுதி வைப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை மதசார்பற்ற நிலையில் இருந்து மாற்ற – கலவரத்தைத் தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது. அதற்கு இன்றைய துருப்புச் சீட்டு திருக்குறள்.

திருக்குறள் ஏன் ஒரு மத நூலாக இருக்க வாய்ப்பில்லை என்பதை திருக்குறளும் மனுதர்மமும் என்ற நூலில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பல எடுத்துக்காட்டுகளோடு எழுதி உள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
அந்த நூலின் சில பகுதிகளைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 November 2019

இயற்பியல்

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையை எதிரொலிக்கின்றன. இயல்பு வாழ்க்கையா அல்லது கற்பனை வாழ்க்கையா என்பதை முடிவு செய்வதில் சில நேரம் தடுமாற்றம் நிகழும் ஏன் நம் சிலப்பதிகாரத்தையே கற்பனைக் கதை என்றும் உரைப்பர்.
அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்ததோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் படியான செய்திகள் உள்ளன. இந்த நூற்றாண்டில் உள்ள சில கருவிகள் அக்காலத்திலேயே பயன்பாட்டில் இருந்தன.
Dec-23-2017-newsletter1

இன்றைய தினம் எத்தனையோ இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் மொழியின் பிறப்பிடம் குமரிக் கண்டமே குமரிக்கண்டம் பெரியது. ஆஸ்திரேலியா முதல் தென்ஆப்பிரிக்கா வரை இந்தியாவையும், இமாசல பிரதேசத்தையும் இணைந்தது உலகின் முதலில் பேசிய மொழி தமிழ்மொழிதான். ஆனால் குமரிக்கண்டம் மூழ்கியதை சிலப்பதிகாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகின் 6 துவக்க மொழிகளில் தமிழ் மொழி முதல் மொழி ஜப்பான் நாடு அனைத்து பல்கலைக்கழகங்களிளும் யாதும் ஊரே யாவரும் தேநீர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் வாயிலில் தமிழ் மொழியிலும், ஜப்பான் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதைநாம் அறியும் போது நம் உள்ளம் மிகவும் பூரிப்படைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 November 2019

சங்க இலக்கியங்களில் கட்டிடக்கலை


siragu kattidaviyal3
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அச்சமூகத்தின் மக்கள் வாழ்வியல், அரசு, நிர்வாகம் முதலியவற்றோடு அச்சமூகத்தின் தொழில் மற்றும் கலை சார்ந்த வரலாறாகவும் அமைகின்றது எனலாம். இத்தகைய தொழில் மற்றும் கலைகளின் வளர்ச்சியும் மலர்ச்சியும் திடீரென எழுவதில்லை, மாறாகக் காலங்காலமாக எழுந்த அனுபவத்தின் படிவுகளால் விளைகின்றன. அந்தவகையில் பழந்தமிழ்ச் சமூக வரலாறு என்பது பழந்தமிழரின் தொழில் அறிவையும் கலைநுட்பத்தையும் அறிவது ஆகிறது. அம்முயற்சியின் விளைவாகச் சங்க இலக்கியத்தில் அறிவியல் என்ற இக்கருத்தரங்கு நடைபெறுவது பாராட்டிற்குரியது. அறிவியல் சார்ந்த தொழில் அறிவும் கலை பயில் நுட்பமும் இணைந்த கட்டிடக்கலை பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முற்படுவது ஆய்வின் செல்நெறி ஆகும்.
கட்டிடவியல் :

கட்டிடக்கலை என்பது இன்றைய தொழில்நுட்ப இயலில் பொறியியலின் பிரிவுக்குள் அடக்கிச் சுட்டப்படும் ஒரு துறையாகும். ஈராயிரம் ஆண்டு வரலாற்றை உடைய தமிழ்ச்சமூகத்தில் பொறியியலும் அதன் பிரிவாகிய கட்டிடக்கலை பற்றிய அறிவும், திறனும் நுட்பமும் இருந்தன. இதனைச் சிந்துசமவெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் மெய்ப்பிக்கின்றன. இந்த இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட சர்-ஜான் மார்ஷலும் ஈராஸ் பாதிரியாரும் அங்குள்ள கட்டிடடங்கள், மாளிகைகள், மண்டபங்கள், குளங்கள் முதலியன திராவிடக் கலைப் பாணியில் உருவானவை எனச் சுட்டுகின்றனர். தற்போது இந்தக்கருத்து அறிஞர்கள் பலரால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அறிஞர் உலகம், ‘தமிழரின் கட்டிடக்கலை தமிழரின் மரபுக்கே உரியது தொல்பழங்காலம் முதற்கொண்டே தமிழர் கட்டிடக்கலையைப் பேணி,தனிமுத்திரை பதித்து வளர்ந்து வந்துள்ளனர்’ மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், ப.242 என உரைக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 November 2019

சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது?


siragu kalvettu4
பண்டைய தமிழக மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற அவை வணிகம், போர், வழிபாடு, உறவின் நிமித்தம் என எதுவாக இருப்பினும் அவை எளிதாக நடை பெற பல வகை சாலைகள் தமிழகத்தின் ஊர்களிலும், சிற்றூர்களுக்கு இடையிலும், பெருநகரங்களுக்கு இடையிலும் இருந்தன. ஊர்களுக்குள் இருக்கும் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன(1). அக்காலத்தில் தேரோடும் வீதிகளான பெருந்தெருக்களைக் கொண்டவை பல ஊர்கள். இரு சிற்றூர்களை ஊர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன(2). ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன(3).

இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன(4). வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின. ஆற்றங்கரையோரம் மக்கள் குடியேறிய ஊர்களையும் அவை இணைத்ததால் பெருவழிகள் உருவானதைத் தேவைக்கேற்ற உருவாக்கம் என்றே கொள்ளலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 November 2019

செம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள்

அறிவியல் பயன்பாடும், பகுத்தறிவுச் சிந்தனைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்விலும் நெடிய பண்பாட்டுப் பயணத்திலும் நீங்காத இடம் பிடித்திருந்தன. இந்தப் பண்பாட்டுப் பயணம் எப்போது தடுமாறியது? எப்படித் திசைமாறியது? இந்தத் திசை மாற்றத்தின் விளைவுகள் என்ன? அண்மைக்காலங்களில் தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுக்க நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன? இன்னும் நாம் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் இந்த விவாதத்தின் வேதியியல் துறையில் செம்மொழி இலக்கியக்காலங்களில் ஏற்பட்ட வரலாற்றுப் பின்புலங்களை நாம் நிறைவுப்பகுதியில் ஒரு எடுத்துக்காட்டாக ஆராயலாம்.
இது ஆய்வுரை அன்று, இளம் தமிழ்நெஞ்சங்களை உற்சாகப்படுத்திச் சிந்திக்க வைக்கும் ஒரு பயிலரங்க முயற்சி. எனவே இங்கே விடைகளைவிடச் சிந்திக்கத் தூண்டும் இளைய சமூகத்தை விடைதேடும் முயற்சிகளைத் தொடங்கத் தூண்டுவதே நம் நோக்கம்.
செம்மொழிச் சமுதாயக் காலம்
Dec-23-2017-newsletter1
பழமையும் தனித்துவமும் வாய்ந்த மொழிகள் மிகச்சில. 2000 வருடங்களுக்குமேல் பழமை வாய்ந்த மொழிகள் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவை. அவற்றில் தமிழும் ஒன்று. ஆனால் நம் தமிழ்ச்செம்மொழியைப் பற்றியும் தமிழ்ச்சமூகம் பற்றியும் பொதிய கள ஆய்வுகள் நடந்திருக்கிறதா? இல்லை என்றால் ஏன்?

ஒவ்வொரு செம்மொழிக்கும் உற்சாகமாகக் குரல் கொடுக்கவும் ஆய்வுகளை முன்னெடுக்கவும் அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்னால் நிற்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 November 2019

தாயென தமிழ்நாடு பிறந்த நாள் ! (கவிதை)


siragu tamilnadu


கலைகளின் நாடு தீரத்தின் வீடு
கன்னல் சாற்றின் மொழியது பாடு
காலம் கனியும் தென்றல் வீசும்
கீழ்வானம் சிவந்து மாரி பொழியும்

எழில் ஓவியமாய் காலமகள் வரைந்த
ஏட்டின் பக்கங்கள் வரலாறு படைக்க
ஏற்றமிகு மிடுக்கோடு பாரில் ஒளியேற்றி
எவ்வம் துடைத்திட்ட சில்லெனும் தூறலாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/

Monday 4 November 2019

ஆரேகாடு (Aarey forest)


siragu aarey forest4
ஆரேகாடு என்பது மும்பை மாநகரில் உள்ள ஒரு பெரும் திறந்த வெளிப்பகுதி. இது மும்பை நகரின் நுரையீரல் போல் அமைந்து மக்கள் சுவாசிக்க காற்றை அளிக்கிறது. மும்பை பெரு நகர இருப்புப் பாதைக்கழகம் (MMRCL – Mumbai Metro Rail Corporation Limited) இப்பகுதியில் தன் தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்திவைக்கத் (to park trains) திட்டமிட்டது. இதை செயல்படுத்துவதற்காக அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி முனைந்தது. இதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
உடனே மாநகராட்சியினர் தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்பை முறியடிக்க “நாங்கள் மரங்களை வெட்டவில்லை, அவற்றை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் நடப்போகிறோம்” என்று கூறி, சுமார் 1800 மரங்களைப் பிடுங்கி விட்டனர். அவற்றில் சுமார் 800 மரங்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு போகும் முன்பே செத்துவிட்டன.
இதைக் கண்ட தொண்டு நிறுவனங்கள் மரங்களை வேருடன் பெயர்த்து எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் 4.10.2019  வெள்ளிக்கிழமை அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் ஆரே பகுதி ஒரு காடு என்று “சட்டப்படி” அறிவிக்கப்படவில்லை என்றும், ஆகவே அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு வெளிவந்து ஒரு நாள் கழித்து, அதாவது 6.10.2019 ஞாயிறு அன்று மாநகராட்சியினர் முழுவீச்சில் மரங்களை வெட்டத் தொடங்கினர். மும்பை மாநகராட்சியின் இச்செயலுக்கு உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 31 October 2019

எண்ணியல்


siragu enniyal1
முன்னுரை:
மாந்தர் குல வளர்ச்சிக்கு மொழி என்பது இன்றியமையாததாகும் என்பதை அனைவரும் அறிவோம். மொழி என்பது உடல் அசைவுகளில் செய்கையாகத் தொடங்கி, நாவில் ஒலியாக மாற்றுப்பெற்று பேச்சாகி இன்று நமது கைகளில் எழுத்து வடிவமாகி உலக அறிவியல் வளர்ச்சியை தன்னகத்தே கொண்டு, கணினியில் நுழைந்து எண்களாகவும், எழுத்துக்களாகவும், குறியீடுகளாகவும், மாறி இப்பேரண்டத்தையே இயக்கும் மாபெரும் ஆற்றலாகித் திகழ்ந்து வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் எண்ணியல் அறிவின் அடிப்படை கூறால் கணித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எண்கள் மற்றும் எண்ணியில் சார்ந்த கருத்துக்கள், கூட்டல், கழித்தல், வகுத்தல் முதலான கணிதத்தின் அடிப்படகளையும் பதிணென்கீழ்கணக்கு நூல்களில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் வருகங் கோவை பழமொழி மாமூலம்
கைந்நிலை காஞ்சியோ மேலாதியென்பவே
மெய்நிலைய வாங்கீட் கணக்கு “(பழம்பாடல்)
என்ற இப்பாடலில் கீழ்க்கணக்கு பதினெட்டு நூல்கள் எவை எவை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 30 October 2019

உழவுத் தொழிலே தலையாயது


siragu ulavu2
பல்வேறு முயற்சிக்குப் பின்னும் இவ்வுலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது.  உழவுத் தொழில் செய்வோரே மற்றைத் தொழில் செய்வோருக்கும் உணவு அளித்தலால் அச்சாணி போன்றவர். உழுதுண்பவர் வாழ்நிலை சுதந்திரமானது. மற்றைத் தொழில் செய்வோர் உணவுக்கு உழவரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆதலால் உழுதுண்பவர்களுக்கு இரந்து வாழும் வாழ்க்கை நிலை இல்லை. மாறாக ஈர்ந்து வாழும் வாழ்க்கை நிலை உடையவர். உழவர், கொடையின் கீழ் அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும், ஆண்டிகளின் தவக் குடைகளும் குடைபிடிக்கும் என வள்ளுவர் உழவு என்ற அதிகாரத்தில் கூறுவர். உழவுத் தொழிலையும், உழவரின் மேன்மையையும் கூறும் வள்ளுவர் வேளாண்மை என்னும் அதிகாரம் படைத்துக் குறள் பாடாதது ஏன்? என்ற வினா எழுகிறது. அத்துடன் வேளாண் வேளாண்மை ஆகிய சொற்களுக்கான பொருள் யாது? ஆகியவற்றிற்கான விடை தேடுவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியத்தில் வேளாண் எனும் சொல்:

தொல்காப்பியர் வேளாண் என்னும் சொல்லை மூன்று இடங்களில் கையாள்வர். ஒன்று தலைவன் கூற்றை மொழிகின்ற இடத்தில்,
“வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்”; (தொல். களவு:16:8)
என்றும், மற்றொன்று தோழி கூற்றில்,
“வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்”; (தொல். களவு:23:23)
என்னும் இருவிடங்களை நோக்குமிடத்து வேளாண் என்னும் சொல் கொடை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர் உபகாரம் என்றும் நச்சினார்க்கினியர் கொடுத்தல் என்றும் உரை கூறுவர். தொல்காப்பியர் மரபியலில் வேளாளருக்குரிய தொழிலைக் குறிக்கின்ற பொழுது,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 29 October 2019

சோழர்காலத்தின் மருத்துவம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள்


siragu kalvettu2
பேரரசர் அசோகரால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் கல்வெட்டின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதை அறிகிறோம். அவ்வாறே சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும் (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பக்கம் 41). மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், மருத்துவர்களுக்கு ‘மருத்துவப்பேறு’ என்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது (தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர். அ. தட்சிணாமூர்த்தி, பக்கம் 366).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 October 2019

தொகுப்பு கவிதை(தவறிழைக்கக் கூடாதவை, இசை மேதைமை)

தவறிழைக்கக் கூடாதவை

siragu thavarilaikkakoodaadhavai1

நீங்கள் ஒருநாள் கொலைக் குற்றவாளியின் நிழலில் நடந்து செல்கிறீர்கள்.
அவன் இரக்கமற்றவன், கொடூரமானவன், கோபமுடையவன்,
எவர் மீதும் அன்பு என்ற ஒன்றைக் காட்டாதவன் என்ற எண்ணம்
உங்களுக்குத் தோன்றலாம் அல்லது தோன்றாமல் கூட போகலாம்.
அவன் ஒரு குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பிற்கு பின்பு,
அவனை நீங்கள் சாதாரனமான பார்வையுடன் பார்க்க வேண்டிய
கட்டாயம் அல்லது சூழல் உங்களுக்கு ஏற்படலாம்.

அதுநாள் வரை, இடையில்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்ற காரணத்திற்காக
செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக
கூனிக் குறுகி ஒரு புழுவைப் போல

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 22 October 2019

செம்மொழி இலக்கியங்களில் உடற்கூறு அறிவியல்


siragu udarkooru ariviyal1
கல்தோன்றி மண்தோன்றா காலத்து- வாளொடு
முன்தோன்றிய மூத்தகுடி”
என்று தமிழ்க் குடியின் தொன்மையை புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே என்று தமிழ் மொழியின் செம்மைத் தன்மையினைப் பாடியுள்ளார் மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை.
செம்மையும், தொன்மையும் நிறைந்த செம்மொழி இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் சார்ந்த கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதனை மருத்துவ அறிவியல். வானியல், மின்னணுவியல், ஒலியியல், கணிப்பொறி அறிவியல், உடல்கூறு அறிவியல் எனப் பல்வகைப்படுத்தலாம். இவற்றில் உடற்கூறுஅறிவியல் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தந்து நிற்கின்றது.
உடற்கூறுஅறிவியல்

மனிதன், விலங்குகள், தாவரங்கள் ஆகியனவற்றின் உடலமைப்புகள் பற்றிய அறிவியல் ஆய்வு “உடல்கூறுஅறிவியல்” ஆகும்.
தொல்காப்பியத்தில் உடல்கூறு அறிவியல்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 October 2019

திருக்கேதீச்சுவரமும், சைவ பண்பாட்டுத் தாக்கமும்


siragu thiruketheechcharam
ஆசிய கண்டம் மற்ற கண்டங்களை ஒப்பிட்டு நோக்கும் நிலையில் மற்ற கண்டங்களைவிட மிகப் பெரும் நிலப்பரப்பினையும், மக்கள் பெருக்கத்தையும் உடையது. மேலும் இக்கண்டத்தில் பல்வகை சமயங்கள், பல்வகை பண்பாடுகள், பல்வகை உணவுப் பழக்க வழக்கங்கள், பல்வேறு ஆடை அணிகலன்கள், பல்வேறு கலைகள், பல்வேறு நாகரிகங்கள் தோன்றின. தோன்றி வருகின்றன.
ஆசியாவில் உள்ள நாடுகள் மொத்தம் ஐம்பத்தொன்பது ஆகும். இவை தற்போது விளையாட்டு, கலை, பண்பாடு போன்ற பொதுமை நிகழ்வுகளால் ஒன்றுபட்டு வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய கலாச்சார மாநாடுகள் போன்றன இந்நாடுகளை ஒன்றுபடுத்துவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆசிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் ஆங்கிலேயப் பிடியில் இருந்தவை என்பது கருதியும் இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைவு கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உண்டு. இந்நிலையில் ஆசியாவுக்கென ஒரு தனித்த பண்பாடு ஒருமை அமைந்து நிற்பதையும் காணமுடிகின்றது. இப்பண்பாட்டினை வலுப்படுத்தவும், தனித்துவமாக்கவும் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றிருக்கின்றன. பெற்று வரப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 16 October 2019

தொல்லியல்


siragu tholliyal3
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் சொல்லப்படும் முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி, மருதம் ஆகிய ஐவகை நிலங்களில் குறிஞ்சி தவிர்த்த நால்வகை நிலங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. கடலாடி, பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள் முல்லை நிலமாகவும், திருவாடானை வட்டம் மருதநிலமாகவும், சுந்தரபாண்டியன் பட்டினம் முதல் கன்னிராஜபுரம் வரையிலான கடற்கரைப்பகுதி நெய்தல் நிலமாகவும்கமுதி, முதுகுளத்தூர், கடலாடியின் சில பகுதிகள் முல்லை திரிந்த பாலை நிலமாகவும் உள்ளன. இதற்கு ஆதாரமாக ஊர்ப் பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், நிலஅமைப்பு ஆகியவற்றைக் கொள்ளலாம்.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இம்மாவட்டம் கீழ்ச்செம்பில் நாடு, வடதலை செம்பில் நாடு, செவ்விருக்கை நாடு, முத்தூற்றுக் கூற்றம், வரகுணவளநாடு, அரும்பூர்க் கூற்றம், துகவூர்க் கூற்றம், களாத்திருக்கை நாடு, இடைக்குளநாடு, ஏழூர் செம்பில் நாடு, அளற்றுநாடு, சுந்தரபாண்டியவளநாடு, உலகு சிந்தாமணி வளநாடு, கானப்பேர்க்கூற்றம், கோடிநாடு ஆகிய நாட்டுப் பிரிவுகளில் இருந்துள்ளது. பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியான இம்மாவட்டம், பாண்டியர், சோழர், டில்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள், ஆங்கிலேயர் ஆகியோர்களால் ஆளப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 15 October 2019

தமிழர் மருத்துவமுறை குறித்து அறிய உதவும் தொன்ம நூல்களும் ஓலைச்சுவடிகளும்


siragu uyiriyal5
தஞ்சை சரஸ்வதி மகால் நூலக ஓலைச்சுவடிகள் யாவும் தமிழர் கலை, இலக்கியம், வாழ்வு, பண்பாடு, மரபு, மருத்துவம் குறித்த தகவல் நிரம்பிய அரிய கருவூலங்கள். அவை சொல்லும் செய்திகள் பலவற்றை இன்றும் வெளியுலகம் அறிந்திருக்கவில்லை என்பது நமது முயற்சியில் உள்ள குறைபாட்டினைத் தெளிவாகவே காட்டுகிறது.  1980 ஆம் ஆண்டில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போதே ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் இன்றுவரை இப்பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. நாற்பது ஆண்டு இடைவெளி விழுந்துவிட்டது என்றால், அது ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது என்ற ஓர் அவல நிலை. பண்டைய தகவல்களைப் பொருள் அறிந்து புரிந்து கொள்ளக்கூடிய முதிய அறிஞர் பலர் மறைந்திருப்பர். இளைய தலைமுறைகளுக்கு ஓலைகளைப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் நம்மால் அறியக்கூடவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 10 October 2019

அம்மூவனார்


siragu ammoovanaar1
சங்க காலப் புலவர்கள் அகம், புறம் ஆகியவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டு கவிதைகள் புனைந்தனர். அகம் என்ற காதல் பொருளை மட்டும் பாடிய புலவர்கள் சிலர் உள்ளனர். அவ்வழியில் குறிக்கத்தக்கவர் அம்மூவனார் ஆவார். இவர் நெய்தல் திணைப் பாடல்கள் பாடுவதில் சிறப்பிடம் பெற்றவர் ஆவார். ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல் பாடுவதற்குச் சிறந்தவர் அம்மூவன் என்ற அடிப்படையில் இவருக்கு நெய்தல் திணை ஒதுக்கப்பெற்று அதற்குரிய பாடல்களை இயற்றினார். இவர் சேரநாட்டுத் தொண்டியையும், பாண்டிய நாட்டுக் கொற்கையையும் பாடியவர் என்பதால் நாடுகள் தோறும் அறியப்பட்டவராக விளங்குகிறார். திருக்கோவலூர் பற்றிய குறிப்பும் இவர் பாடல்களில் காணப்படுகிறது. எனவே நாடுகள் தோறும் பயணித்து நல்ல கவிதைகளை வழங்கிய பெருமைக்கு உரியவராக இவர் விளங்குகின்றார்.
அம்மூவனார் என்ற  பெயரில் உள்ள “அம்” என்பது அடைமொழியாகவும், “மூவன்” என்பது உதவிகள் செய்யும் ஒருவரின் பெயராகவும் கொள்ளமுடிகின்றது.
பாட்டும் தொகையும்
siragu uyiriyal5

இவர் பாடிய பாடல்களாக கிடைப்பன மொத்தம் நூற்று இருபத்தேழு பாடல்கள் ஆகும்.  அகநானூற்றுத் தொகுப்பில் ஆறு பாடல்களும் (10, 35, 140, 280, 370, 390) ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல் திணை சார்ந்து நூறு பாடல்களும் (101-200), குறுந்தொகைத் தொகுப்பில் பதினோரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), நற்றிணைத் தொகுப்பில் பத்துப் பாடல்களும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) அமைந்துள்ளன. இவை தொகுப்பு வகைப்பட்டு அமைந்த வகைப்பாடு ஆகும். இன்னும் இவர் பாடல்களைப் பல்வகைப்படுத்த இயலும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 8 October 2019

தந்தையும்- தளபதியும்

Siragu ayyaavum-annaavum1
செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா இருபெரும் தலைவர்களின் பிறந்த நாட்கள். திராவிடர் இயக்கங்களின் தொடர் வெற்றிகளுக்கு சமூகத்திலும் – அரசியலிலும் வித்திட்டவர்கள். எவ்வாறு பிப்ரவரி மாதம் முழுவதும் அமெரிக்காவில் கறுப்பின வரலாற்று மாதமாக கொண்டாடுகின்றார்களோ, அதே போன்று செப்டம்பர் மாதம் முழுவதும் திராவிடர் வரலாற்று மாதமாக கொண்டாட வேண்டும் என்று தொடர் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கான வரலாற்று தேவை இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கின்றது.
தந்தை பெரியார் அவர்களை பொறுத்தவரை சுயமரியாதை இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் எதிர்ப்புகளில் வளர்த்து – எதிர்ப்புகளையே உரமாக்கிக் கொண்டு தமிழ் மண்ணில் வேர் கொண்ட இயக்கம். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் இயல்பாக இருந்த அச்சமற்ற – கொள்கையில் சமரசமற்ற தன்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 7 October 2019

சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள்

சோசலிசத் தத்துவங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் விளக்க வந்த தோழர் ப.ஜீவானந்தம், ஒரு சிறிய ஊரின் இருண்ட சந்து பொந்துகளில் இருந்து ஏழைக் குடும்பங்கள் வெளியேறுவதில் மக்களின் வாழ்வுப் போராட்டத்தின் பிரச்சினை பொதிந்து கிடக்கிறது என்று தொடங்கி, மக்களுக்கான சோசலிசத் தத்துவங்களை விளக்கி இருப்பார்.
ஆம். ஒரு ஏழைக்குடும்பம், தான் வாழும் ஊரில் வாழ முடியாமல் வெளியேறுகிறது என்றால், அச்சமூகம் மக்களின் நல்வாழ்வுக்கு எதிரான சமூக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் பொருள். இதுபோன்ற நோய்கள் பல நம் கண் முன்னே தெளிவாகத் தெரிந்தும் அவை நோய் என்று உணராமலேயே காலம் கடத்திக்கொண்டு இருக்கிறோம்.
siragu plastic1
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை (single use plastic)  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அரசு தடைசெய்தது. காரணம் அது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. சரி! சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அனைத்து ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளும் தடை செய்யப்பட்டு விட்டனவா?

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைத் தடைசெய்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பட்டியலில் தண்ணீர்ப்புட்டி (bottle) சேர்க்கப்படவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதில் இதற்கு பெரும்பங்கு உண்டு. இதை சில சூழலியலாளர்கள் எடுத்துக்காட்டினார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூழலியலாளர்களின் அழுத்தத்திற்கு அரசு செவிசாய்த்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாகத் தண்ணீர்ப் புட்டிக்குத் தடைவிதிக்கக்கூடாது என்று அதன் உற்பத்தியாளர்கள் 17.9.2019 அன்று அரசிடம் முறையிட்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 3 October 2019

தொகுப்பு கவிதை (பெண்ணின் பெருந்தக்க யாவுள, கடவுச்சீட்டு)

பெண்ணின் பெருந்தக்க யாவுள.


siragu pennin1
அவளுடைய கைப்பைகளில்
திருட்டுத்தனமாய்
சில்லறைக் காசுகளைத் துளாவிய போது
எதிர்பாராது
கையில் கிடைத்தன நாப்கின்கள் மூன்று.

அவளுடைய இந்த நாளை வெட்கமில்லாமல்
முகத்தில் அறைந்தார் போல்
முத்தமிட்டு எனது வேதனையை புரிந்து கொள்
என்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 1 October 2019

செம்மொழி இலக்கியங்களில் உயிரியல்

siragu uyiriyal2
செம்மொழி இலக்கியங்களில் சூழ்நிலைஇயல், உயிரியல், விலங்கியல், தாவரஇயல், மருத்துவஇயல், வானிலை இயல், உணவியல் எனப் பல்வேறு அறிவியல் சிந்தனைகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் “உயிரியல்” பற்றிய செய்திகள் பெருவாரியாக உள்ளன. இவற்றில் திருக்குறள், குறுந்தொகை மற்றும் தொல்காப்பியத்தில் காணப்படும். “உயிரியல்” தொடர்பான கருத்துக்களை இக்கட்டுரையிலிடம் பெறச் செய்துள்ளேன். உலகப்பொதுமறை என அழைக்கப்படும் “திருக்குறள்” ஏறக்குறைய அறிவியல் அறிஞர்கள் குறைவாகவே இருந்திருப்பர். அறிவியல் எண்ணங்கள் என்பது அரிதாகவே இருந்திருக்கும். அக்காலட்டத்தில் விலங்குகள், தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களின் பல்லுயிர்ப் பரவல் விலங்குகளின் நடத்தை இயல், பண்பு நலன்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைகள், வாழும்இடம், இவற்றின் சந்ததிகள் உணவு பழக்கவழக்கங்கள் பலவற்றை திருக்குறளில் பல குறட்பாக்களில் எடுத்துக் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் 46 குறட்பாக்களில் உயிரினம் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார். அனிச்சம், குவளை எனும் இருமலர்கள் மட்டும் கூறப்பட்டுள்ளது. இதில் அனிச்சமலர் 4 முறை கூறப்பட்டுள்ளது. நெருஞ்சிப்பழம் எனும் ஒரே பழவகையும் குன்றி மணி எனும் ஒரே விதையும் பனை, மூங்கில் எனும் இரு மரங்களும் யானை 8 முறையும், பாம்பு 3 முறையும், ஆமை, கொக்கு, முதலை, காகம், மீன், நரி, கவரிமான், பசு, காளை, சிங்கம், புலி, ஆடு, குதிரை, முயல், அன்னம், மயில், ஒட்டகம், வாத்து, எருமை ஆகிய உயிரினங்கள் குறட்பாக்களில் கூறப்பட்டுள்ளன. புல், பயிர், கொம்பு, கொடி, மரம், மலர், காய், கனி, வித்து, மொட்டு எனத் தாவரங்களின் வகைகள் மற்றும் வளர்ச்சிப்பருவங்கள் கூறப்பட்டுள்ளன. அன்புடைமை அதிகாரத்தில் 77வது குறள் “என்பிலாதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” எனும் குறளில் எலும்பு இல்லாத உயிர்களான புழு போன்றவை வெயிலில் காய்ந்து அழிந்துவிடும். இதுபோல் அன்பு இல்லாத உயிர் அறத்தினை செய்ய இயலாமல் துன்புறும் எனக் கூறியுள்ளார். இக்குறளின் மூலம் விலங்குகளில் எலும்பு உள்ளவையும் எலும்பு அற்றவையும் உள்ளன என்பதைக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 30 September 2019

பள்ளிகளின் ஊடே ஒரு பயணம்


siragu NIRMALA BOOK COVER
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலேய பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண் எதிர்கொண்ட சூழல் எத்தகையதாக இருந்திருக்கும் என அறிய விரும்பினால் படிக்க வேண்டிய நூல் இது. அதை விளக்கும் வகையில், 50 சிறு சிறு நிகழ்வுகளின் தொகுப்பாக அக்கால வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது இந்த புதினம். மலேய பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் அகிலா என்ற பெண்மணி. அவர் தனது ஏறத்தாழ ஒரு 30 ஆண்டுக்கால பணி குறித்த நிகழ்ச்சிகளின் நினைவுக்கடலில் மூழ்கி அவற்றை அவ்வப்பொழுது தனது கணவரிடமும் பகிர்ந்து கொள்ளுவதாக நூலின் போக்கு அமைந்துள்ளது. தான் தமிழில் எழுதியதை ஆங்கில மொழி பெயர்ப்பாக “எ ஜர்னி துரு ஸ்கூல்ஸ்” (A Journey through Schools,  Nirmala Raghavan, 2019) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன்.

நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று திருமணத்திற்குப் பிறகு மலேசியாவில் குடியேறிய தமிழர். மலேய கல்வித்துறையிலும் பள்ளிகளிலும் பணியாற்றியவர். பெண்ணியச் சிந்தனை கொண்ட சமூக ஆர்வலரான நிர்மலா வானொலி நாடகங்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டவர். இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உளவியல் கோணத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மனவளக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் பல்கலைக்கழக ஆய்விற்கான பொருண்மையாகத் தேர்வு செய்யப்பட்டதும், இவரது சிறுகதை நூல்களுள் ஒன்று கல்லூரி பாடநூலாக எடுத்துக்கொள்ளப்பட்டதும் இவர் பெற்ற சிறப்பு.  இவரது வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பு பாராட்டப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 25 September 2019

கார் பருவம்


siragu kaarparuvam1
இயற்கை கூறுகளின் சங்கமமாக அமைந்திருப்பதே உலகம். உலகின் முதல்பொருளாக நிலமும் பொழுதும் அமைந்துள்ளன. பொழுதுகள் பற்றியதான சங்கப் புலவர்களின் திறனை நற்றிணைவழி அறிவதே இக்கட்டுரையாகும்.
பொழுதுகள்
வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப பாகுபடுத்தப்பட்டதே பொழுதுகள் ஆகும். பொழுதுகள் பற்றி வானிலை அறிவியல் பருவமழைக்காலம், பருவ மழைக்கு பிந்தைய காலம், குளிர்காலம், கோடைகாலம் என நான்காக வகைப்படுத்துகின்றது. இவ்வகைப்பாடானது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. பொழுதுகளை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பிரித்து, ஒரு ஆண்டின் கூறுகளாக அமைவது பெரும்பொழுது எனவும் ஒரு நாளின் கூறுகளாக அமைவது சிறுபொழுது எனவும் கூறி, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும்பொழுதுகளையும் மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என சிறுபொழுதுகளையும் வகைப்படுத்தியிருப்பது சங்கப்புலவர்களின் பொழுதியியல் அறிவைக் காட்டுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 September 2019

சங்க இலக்கியங்களில் மனையியல் செய்திகள்


siragu-manayiyal1
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, நீர்மை என்று நிகண்டு பொருள் உரைக்கின்றது. ‘‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” (பிங்கலநிகண்டு), “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்கிறார் பாவேந்தர். இப்பண்புகளே தமிழ் மொழியைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கன்னித் தமிழாக முன்னைப் பழமைக்கும் பழையதாகவும், பின்னைப் புதுமைக்கும் புதியதாகவும் வளமையும் செழுமையும மிக்கதாக அழியாத் தன்மையுடன் நிலை நிறுத்தி வருகின்றன. இவ்வாறாகத் திகழும் தமிழ் மொழியில் இன்று பல துறைகளை நிறுவி சாதனைப் படைக்கின்றனர் சான்றோர்கள். அந்த வகையில் செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் “மனையியல்” துறையினை அடித்தளமாகக் கொண்டு “அகநானூற்றுப் பாடல்களில் மனையியல் செய்திகள்” என்ற தலைப்பில் இக்கட்டுரை வரையறுக்கப்பட்டுள்ளது.
மனையியல் – அறிமுகம்


மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு. குடும்பம் வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு கல்வித்துறை ஆகும். மனையியல் என்ற சொல்லுக்கு அகராதியில் ‘‘வீட்டைநிர்வகித்தல், குடும்பத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத் தரும் படிப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.