Monday 31 December 2018

அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களும்!


siragu govt hospital2

கடந்த நான்கு நாட்களாக, நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு செய்தி என்னவென்றால், விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரமாகத்தான் இருக்க முடியும். இந்த செய்தியை விட்டு வெளியே வரமுடியாத நிலையில், மேலும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை மாங்காடைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தற்போது, தனக்கும் இதுபோன்ற கொடுமை நிகழ்ந்ததாக தெரிவித்திருக்கிறார். அதுவும், தலைநகரத்திலேயே, மிகப்பெரிய, மிகசிறந்த அரசு மருத்துவமனையாகக் கருதப்படும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் இந்த மனித தவறு நடந்திருப்பதாகக் கூறுகிறார்.
எப்படி இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்றப்படும் ரத்தம் எவ்வித தொற்றுமில்லாமல் பரிசுத்தமானதா என்ற சோதனையைக் கூட எடுக்கவில்லை என்றால், இந்த துறையின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்.!

சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, ரத்தம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அந்த பகுதி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அந்த பெண்ணிற்கு உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு, வாந்தி என சில உடல் உபாதைகளால், மீண்டும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது ரத்தப்பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய பரிசோதனைகளின் போது இல்லாத தொற்று, தற்சமயம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தநிலையில், சிவகாசியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அளித்த ரத்தத்தில், இந்த தோற்று இருப்பது அறியப்பட்டது. இதில் மிகவும் கொடுமையான ஒரு விசயம் என்னவென்றால், ‘ரத்ததானம் செய்தபோது தனக்கு இந்த தொற்று இருப்பது தெரியாது. வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தபோது, பரிசோதித்த ரத்தத்தில் தொற்று இருப்பது தெரிந்தவுடனே, மருத்துவமனைக்கு தெரிவித்து விட்டேன்.’ என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். மேலும், அந்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்து, தற்சமயம் சிகிச்சையில் இருக்கிறார் என்பதுவுமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 27 December 2018

லாங்ஸ்டோன் ஹுக்ஸ்


siragu Langston_Hughes1
Donald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern Black Poets: A Collection of Critical Essays (Prentice Hall, 1973) என்ற நூலில் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் (Langston Hughes) பற்றிக் கூறும் போது ஹுக்ஸ் இன் கவிதைகள் மற்ற கறுப்பின கவிஞர்களிடம் இருந்து வேறுபட்டது. இவரின் கவிதைகள் முழுவதும் மக்களின், குறிப்பாக கறுப்பின மக்களுக்கானது என்று கூறுகின்றார். ஆம் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் அமெரிக்க கறுப்பின கவிஞர்களில் ஒரு விடிவெள்ளியாக மின்னியவர். 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஜோப்லினில் பிறந்தவர். (Joplin, Missouri.) ஹுக்ஸ் அவர்களின் இளமைக்காலம் அவரின் பெற்றோரின் மணவிலக்கினால் மிகுந்த போராட்டங்களுக்கிடையே கழிந்தது. இருப்பினும் இந்த போராட்டமே அவரை ஒரு தேர்ந்த கவிஞராவும் உருவாக்கியது எனின் மிகையல்ல.

ஒரு கவிஞராக தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்னர், ஒரு சலவைக்காரராக, சமையற்காரராக, பேருந்து நடத்துனராக என பல வேலைகளை தன் வாழ்க்கை ஓட்டத்திற்காக செய்தவர் ஹுக்ஸ். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு The Weary Blues(1926)வெளிவந்தது. பின் 1930 இல் அவரின் முதல் நெடுங்கதை Without Laughter, (1930) வெளிவந்து இலக்கியத்திற்கான ஹர்மோன் (Harmon) தங்கப் பதக்கத்தை பெற்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 26 December 2018

களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன?


Thamizhaga-Varalatril-Kalapirar-Kaalam-Book-Cover
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், பகதூர்கான் திப்பு சுல்தான், மாமன்னர் அக்பர் போன்ற வரலாற்று நூல்களை எழுதியுள்ள டி.கே.இரவீந்திரன், களப்பிரர் காலம் குறித்து எழுதியுள்ள நூல் விகடன் பிரசுரம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’ என்ற நூல். இதழியல் பின்புலம் கொண்டவராக வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட டி.கே.இரவீந்திரன் இந்த நூலில் பொதுவாக தமிழக வரலாறு குறித்த அறிமுகத்துடன் துவங்கி, களப்பிரர் வருகை, அவர்களது ஆட்சிக்காலம் என விவரித்து இறுதியில் களப்பிரர் வீழ்ச்சி வரை 30 அத்தியாயங்களில் 230 பக்கங்களில் எளிய நடையில் எழுதியுள்ளார்.
களப்பிரர்கள் காலம் இருண்டகாலம்:

ஆம், இவ்வாறுதான் நாம் பள்ளியில் படித்துள்ளோம். தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்தர்களை வீழ்த்தி அன்னியரான இவர்கள் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலம் பற்றிய தொல்லியல் தடயங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் போன்ற தரவுகள் இல்லாமையால் வரலாற்று ஆசிரியர்கள், சங்கம் மருவிய காலம் முதல் மீண்டும் பல்லவரும் பாண்டியரும் தமிழக ஆட்சியை மீட்டெடுக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டனர். கிபி 250 – 550 வரையில் களப்பிரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தது என்பதும், அவர்கள் இன்றைய மைசூர் பகுதிக்கு அண்மையில் இருக்கும் நந்தி மலைப்பகுதியில் இருந்த ஓர் இனத்தவர் என்பதால் வடுக கருநாடர் என்று இலக்கியக் குறிப்புகள் கூறுகிறது என்பதுவும் இன்று பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் கருத்தாக இருக்கிறது. ஆகவே, வரலாற்றாசிரியர்கள் கருத்தின்படி இவர்கள் ஆரியருமல்லர் தமிழருமல்லர் ஆனால் திராவிட இனத்தவர், குறிப்பாகக் கன்னட வடுகர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 25 December 2018

தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன்.


siragu tamiliyai2
தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்றனர்.

நாம் மேற்கண்டவை பற்றி தெரிந்து கொள்ள அல்லது இன்னும் சற்று அது தொடர்பாக தெளிந்து கொள்ள சமீபத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட முன்னேறிய நகர நாகரீகமான கீழடி தொடர்பான சம்பவங்களை நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது நம்மை மேற் கூறிவற்றோடு ஒன்றச் செய்யும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 20 December 2018

ரஜினி – தலைவரா 1.0? அல்லது வியாபாரியா 2.0?


Siragu Rajni arasiyal2
மகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஒரு நடிகர் மட்டும் தானா? அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவரா? –ஒருசிறு அலசல்.
என் வழி தனி வழி
‘என் வழி தனி வழி’ என்ற வசனம் போல் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனம் கவர்ந்த நடிகர். இவரின் படம் வெளியாகும்போதும், பிறந்த நாளின்போதும் காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கடவுள் போல் பாவிக்கும் ரசிகர்கள் கூட உண்டு.பக்தர்கள் ரஜினிக்கு கோவில் கூட கட்டலாம், தவறில்லை.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கூட படங்கள் வருவதுண்டு. ஏன், ஜப்பானில் கூட ஓரிரு படங்கள் மொழிமாற்றம் செய்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 19 December 2018

சட்டம் யார் கையில்?


Sirgu siddur decison1
ஒரு மக்கள் நாயகச் சமூகத்தை இயக்கும் சட்டங்களை இயற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.  சமூகமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என்றாலும், புதியசட்டங்களை இயற்றவேண்டும் என்றாலும், பழைய சட்டங்களை நீக்க வேண்டும் என்றாலும், அது மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகு, மக்களின் கருத்துப்படிதான், மக்களின் பிரதிநிதிகள் அதைச் செய்யவேண்டும். இந்தியாவில் இவ்வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் பரிதாபத்திற்கு உரிய செய்திகள் நிறையவே உள்ளன.
முதலாவதாக மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு, சட்டம் இயற்றுதல், சட்டத்திருத்தம் செய்தல், சட்டத்தை நீக்குதல் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது இல்லை. அதிகாரத்தில் இருக்க ஆசைப்படும் அரசியல் கட்சிகள் அவ்வகையான புரிதல் குறைவானவர்களையே தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைக்கின்றன. தவிர்க்கமுடியாதபடி விவரம் புரிந்த மக்கள் நலன் விரும்பிகள் இம்மையத்தில் நுழைய நேரிட்டால், அவர்களைத் தங்கள் அதிகார வலிமையால் அடக்கிவிடுகின்றன. இதன்மூலம் ஒரு சிறு குழுவினர் தங்கள் விருப்பப்படி எல்லாம் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் செய்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 18 December 2018

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்!


Siragu election result1
தற்சமயம் நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தியென்னவென்றால், மோடி அலை என்ற ஒரு மாயபிம்பத்தை தோற்றுவித்து, அதன் மூலம் மக்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்த பா.ச.க அரசை, ஒரு மதவாத அரசை, சனநாயகத்திற்கு கேடு விளைவிக்க எத்தனிக்கும், ஒரு சர்வாதிகார அரசை, மக்கள் நலனில் சிறிதும் அக்கறைகொள்ளாத ஒரு அரசை, கொதித்தெழுந்து மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மதசார்பற்ற சமூகநீதிக்கு போராடும் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக, மதவாத பா.ச.க-வை எதிர்த்தது தான். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், சனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் ஒன்றிணைந்து போராடுகின்றன என்பதை மக்கள் உணர்ந்ததால் தான், பாசிச பா.ச.க-விற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், அங்கு சாதி அடிப்படையிலான ரெட்டிகளுக்கும், கம்மாக்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி வந்ததின் விளைவு, அரசின் மீது அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதனை, மிகவும் துணிச்சலாக அணுகுகினார் சந்திரசேகர ராவ். ஆட்சியை களைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயுத்தமானார். மீண்டும் தன்னுடைய ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிசோராமில், காங்கிரசு தன்னுடைய நீண்டகால ஆட்சியை இழந்திருக்கிறது. அம்மாநில கட்சியான தேசிய முன்னணி அரிதி பெரும்பான்மை பெற்று, தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 5 தேர்தல்களில், இரண்டு மாநிலக் கட்சிகள் வென்றிருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 17 December 2018

நானாகிய நான் (கவிதை)


siragu mounam2

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடையில் கழியும் நிகழ்காலத்தில் நான்!
எனக்கு இன்னமும் எதுவும் அகப்படவில்லை.
மறையாத முகமொன்றின் காட்சிகள்
என் விழித்திரையில் நிலைகொள்ள
சலனமற்று கண்மூடி நடக்கிறேன்.
இனி எவ்வளவு காலம்தான்  தொடரும்
என் பயணம் என்ற விடைதெரியா வினா
என்னில் நீளத்தான் செய்கிறது
என்ன செய்ய ?
வினாவை அழிக்கும் அழிப்பானைக்
கடையில் வாங்கிவிடவேண்டியதுதான்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday 14 December 2018

அண்ணல் அம்பேத்கர்!


siragu ambedkar1
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது நினைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் வாழ்வியலாகவே கொண்டு பார்ப்பனியத்தை, அது ஏற்படுத்திய நான்கு வர்ணங்களை அதன் புரட்டை, பௌத்தம் என்ற பகுத்தறிவு பண்பாட்டை பார்ப்பனர்கள் எப்படி அழித்து ஒழித்தனர் என்பதை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
அண்ணல் ஏற்படுத்திய அமைப்பைப் பற்றி அண்ணல் அவர்களே கூறும்போது,

“நம்முடைய அமைப்பு நமது குறைபாடுகளை மட்டுமே போக்குவதற்கான அமைப்பு அல்ல. மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாகும் நோக்கம் உடையது. அந்த சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும். அதோடு, வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம், சாதி உருவாக்கியுள்ள செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது அமைப்பானது ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்குமான அமைப்பே ஆகும். நாம் நமது அமைப்பை அந்த அளவிற்கு அமைதியாகவே கொண்டு செல்ல விழைகிறோம். இருப்பினும் வன்முறையின்றி இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியானது எங்கள் எதிரிகளின் மனப்போக்கைப் பொறுத்தே உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

Wednesday 12 December 2018

புற்றுநோயைக் கண்டறியும் விலை குறைந்த, எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு

Siragu cancer1
புற்றுநோய் செல்லின் டி.என்.ஏ. தங்கத்துடன் பிணைகிறது. இப்பண்பினால் புற்றுநோயைக் கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை ஒன்று உருவாக்கப்படமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. இந்த வார “நேச்சர் கம்யூனிகேஷன்” (Nature Communications) இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை அறிமுகப்படுத்தும் இந்த புதிய சோதனை முறை, புற்றுநோய் மருத்துவத்துறையில் நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
இந்த மிக எளிய சோதனையைச் செய்ய ஆகும் செலவும் குறைவு, முடிவுகளும் 90% வரை உறுதியான முறையில் அமையும். விரைவில் பத்து நிமிடங்களுக்குள் சோதனையை செய்து முடித்துவிட முடியும். பயாப்சி போன்று நோயாளியின் உடலை ஊடுருவும் முறையும் இதில் கிடையாது. இரத்தப்பரிசோதனை (ஒரு சொட்டு அளவு இரத்தம்) மூலம் சிறிய அளவில் டி.என்.ஏ. மட்டுமே தேவைப்படுகிறது என்பது இந்தச் சோதனை முறையின் சிறப்பு. இந்தச் சோதனையால் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் கண்டறியமுடியும், ஆனால் எந்த வகைப் புற்றுநோய் என்பதை அறியக் கூடிய திறன் இச்சோதனைக்கு இல்லை.

இச்சோதனை டி.என்.ஏ. மெத்திலேஷன் (methylation) பண்பை அடிப்படையாகக் கொண்டது. டி.என்.ஏ மெத்திலேஷன் என்பது மெத்தில் குரூப் (methyl group) ஒன்று சைட்டோசைன் நியூக்ளியோட்டைடு (cytosine nucleotide) ஒன்றுடன் இணையும் மரபணு அளவில் நிகழும் ஒரு மாற்றம் என்பது சுருக்கமான அறிவியல் விளக்கம். இந்த மரபணு மாற்றங்களே உயிர்கள் எவ்வாறு இயங்கும், அந்த இயக்கத்தை மரபணுக்கள் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதன் அடிப்படையும் ஆகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குமாருக்கு மட்டும் தெரிந்த அவளுடைய கண்ணீர் (சிறுகதை)


siragu small story2
வழக்கமாக நான்கு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் பழக்கமுடைய குமார் அன்று பொழுது விடிந்ததுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். இரவு படுக்கப்போகும் போதே சொல்லி இருந்ததால் அவனை எழுப்பாமல் தன்னுடைய வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் விமலா.
வீட்டிற்கு வெளியில் ஏதோ வண்டியின் ஆரன் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன் கதவைத் திறந்தபோது அவனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்தவன் ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் வந்திருந்தான். அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டாலும், எனக்கு நேரமில்லை, பஸ் வந்திடுச்சி. ஏழு ஏழரைக்கெல்லாம் புறப்படும், கிளம்பி வந்து விடுங்க! என்று இருசக்கர வண்டியில் இருந்து இறங்ககூட நேரமில்லாத அவனது நண்பனான சங்கர் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அப்போது அவனது மனைவி விமலா, ‘போகாமல் இருந்துவிடலாம் என்று தானே! இருந்தீங்க, அதனால்தானே என்னை காலையில் எழுப்ப வேண்டாமென்று சொன்னீங்க!’ என்றாள்.

“போம்மா! ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்தான் விடுமுறை கிடைக்குது. அன்னைக்குன்னுப் பார்த்து இந்தமாதிரி ஏதாவது நிகழ்ச்சி வந்திடுது” என்று அவன் சலிப்போடு சொன்னாலும் அவனது சலிப்பிற்கான காரணம் சோம்பேறித்தனம் அல்ல என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 6 December 2018

துறவி


Siragu Kasturba-Gandhi2
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய பங்கு அன்னை கஸ்தூரி பாய் அவர்களுக்கு உண்டு. காந்தியடிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இளம் வயது முதலே கஸ்தூரி பாய் அவர்களுடன் கலந்து பழகிய காரணத்தினால் காந்தியடிகளுக்கு மிகச் சிறந்த துணைவியாக அன்னை கஸ்தூரிபாய் விளங்கினார்.

அன்னை கஸ்தூரிபாய் அவர்களும் காந்தியடிகளுக்கு பல வழிகளில் வழிகாட்டியாக, காந்தியக் கொள்கைகளை ஏற்பவராக சிறந்த சத்யாகிரகியாக விளங்கியனார். இளம் வயதிலேயே திருமணம் ஆன காரணத்தினால் காந்தியடிகள் கஸ்தூரிபாயை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார். கஸ்தூரிபாயை ஆலயத்திற்கு அடிக்கடி போகக் கூடாது, தோழிகளுடன் உரையாடக் கூடாது என்றெல்லாம் காந்தியடிகள் கட்டுப்படுத்தியதுண்டு. இதற்குக் கட்டுப்பட்டும் கட்டுப்பாடாமலும் கஸ்தூரிபாய் நடந்து வந்தார். கட்டுப்பட்டபோது மகிழ்ந்த காந்தியடிகளில் கட்டுப்படாதபோது வருத்தப்படமால் இருக்க இயலவில்லை. தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை மீறும்போது கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ள இந்த அனுபவங்கள் காந்தியடிகளுக்குக் கைகொடுத்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 5 December 2018

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் புகார்கள் (#MeToo)


siragu Metoo4
கடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் (Twitter) சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட #MeToo இயக்கம் இன்று உலகம் முழுதும் பாணி(Trend) ஆகிவிட்டது. #MeToo என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒலிக்கும் சமூகக் குரல்.
திரைத்துறை

ஹாலிவுட்டில் ஆரம்பித்த இக்குரல் இன்று இந்தி மற்றும் தமிழ் திரைத்துறை வரை ஒலித்துக்கொண்டிருந்தது. திரைத்துறையில் இதுபோன்ற அத்துமீறல்கள் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடப்பதாக நம்பப்படுகிறது. புகழ் மற்றும் பணம் புரளும் துறை என்பதால் வாய்ப்பு தேடி வரும் பெண்களும் சில ஆண்களும் தெரிந்தே இதில் விழுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில், எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்பதில் யாருக்கும் நிச்சயம் மாற்று கருத்து இருக்காது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 29 November 2018

ஞானக் கூத்தனின் அறைகூவல்


iragu gnanakooththan1
1930களில் தொடங்கிய புதுக்கவிதையின் தோற்றம் மெல்ல மெல்ல படிநிலையான வளர்ச்சியைப் பெற்ற புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைத் தொடர்ந்து 1950களில் இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் அளித்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு மணிக்கொடி முன்வந்து ஏற்றுக் கொண்டிருந்தது.

மணிக்கொடி இதழுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட தீபம், சங்கு, எழுத்து, கசடதபற, ழ போன்ற இதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தோன்றி புதுக்கவிதையை சீரிய நோக்கோடு வளர்த்தெடுக்கத் தவறவில்லை. எனினும் 1960களில் அவ்வப்போது தேக்கம் அடைவது போன்று தென்பட்டு மீண்டும் அந்நிலை ஏற்படாதவாறு அப்போதைய எழுத்து இதழ் தீவிரமான புதுக்கவிதை எது என்பதில் விவாதம் செய்து அதன் விளைவாக ஏற்பட்ட கருத்துரைகள், அது தொடர்பான விமர்சனங்கள் புதிய வளம் சேர்க்க எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்தன. அதன் விளைவாய் சில சீர்கேடுகள் புதுக்கவிதையில் ஓரளவு தவிர்க்கப்பட்டது. தடுக்கப்பட்டது என்று கூறலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 27 November 2018

“விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை


siragu vizhithezhuka en desam1
‘விழித்தெழுக என் தேசம்’ என்ற உணர்ச்சிகரமான முழக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதைகளையும், தனது எண்ணத்தில் தோன்றிய கருத்துகளின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதைகளையும் ஒரு கவிதைத் தொகுப்பாக அளித்துள்ளார் கவிஞர் சி. ஜெயபாரதன் அவர்கள். இவர் அணுமின்சக்தித் துறையில் பணியாற்றிய பொறியியல் வல்லுநர் என்பதும், வானவியல், அண்டவெளிப் பயணக்கட்டுரைகள், அறிவியல் அறிஞர்கள் குறித்து அதிகம் எழுதும் அறிவியலாளர் என்பதுடன் அவர் கவிதைகள், நாடகங்கள், கதைகள் எனப் பிற படைப்புகளையும் வழங்கியவர் என்பதை இந்நாளில் பலர் அறிவர். மேலும் இவர் அறிவியல் கருத்துக்களை கவிதை வழி காட்டப்படுவதில் முன்னணியில் இருக்கும் அறிவியல் கவிஞரும் ஆவார். ஏன்! சொல்லப்போனால், திரு. ஜெயபாரதன் அவரது அறிவியல் கட்டுரைகளையே கவிதைகளுடன்தான் தொடக்குவார்.

இக்கவிதை நூலில் படிக்கும் முன்னரே இதில் இடம் பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றை அவை இணைய இதழ்களில் வெளியானபொழுதே நான் படித்த நினைவும் உண்டு. அவரது பிற அறிவியல் நூல்களில் அறிவியல் கவிதைகளை படித்த என் எதிர்பார்ப்பில், நான் எதிர்பார்த்த அளவில் அறிவியல் குறித்த கவிதைகள் இந்நூலில் இடம் பெறவில்லை என்பதில் எனக்குச் சற்று ஏமாற்றமே. திரு. ஜெயபாரதனின் படைப்புகளைக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து படித்து வந்திருக்கும் நான் அவரது கருத்துகளும் சிந்தனையின் வெளிப்பாடும் பெரும்பாலும் அறிவியல், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் அக்கறை, சமூக அக்கறை, பெண்ணியம், சமகால நிகழ்வுகள் குறித்த உணர்வுகளின் வெளிப்பாடு, வாழ்வு குறித்த தத்துவக் கருத்துகள், வாழுமிடம், தாய்நாடு, தாய்மொழி மீது கொண்ட பற்று ஆகியவற்றைச் சுற்றிச் சுழன்று வருவதையே கவனித்து வந்துள்ளேன். இந்நூலில் உள்ள கவிதைகளின் தொகுப்பும் அச்சிந்தனைகளின் பல பரிமாணங்களைத்தான் தொகுத்து வழங்கியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மீண்டும் ஆணவக்கொலை?!


siragu meendum aanavakolai1
நத்திஷ் – சுவாதி மீண்டும் தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் இணையர்கள். சுவாதி வயிற்றில் மூன்று மாதம் கருவை சுமந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அவரைக் கொன்று, முகத்தை சிதைத்து அவர் அடிவயிற்றைக் கிழித்து கருவை சிதைத்துள்ளனர். இப்படி கொடூரமான கொலையைச் செய்தவர் அந்தப் பெண்ணின் தந்தையும், பெரியப்பாவும்.
சாதி எவ்வளவு மூர்க்கமான மனிதர்களை உருவாக்குகின்றது என்பதற்கு இந்த கொலையே சாட்சி.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 81 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று எண்ணிப்பார்த்தால் இங்கு மனித மனங்களில் உள்ள உளவியல் சிக்கல்கள் புரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 22 November 2018

காணாமல் போன தலைவன் (சிறுகதை)


siragu kaanaamal pona1
அன்று அந்த ஊரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது.  பொதுவாக மழைக்கு முன்பு லேசாக விழும் ஐஸ் கட்டிகள் அன்று அதிகமாக விழ ஆரம்பித்தன. அப்போது சூரியன் பல்லிளித்துக் கொண்டிருந்தான். பகல் வேளையில் சூரியக் கதிர்கள் பிரகாசமாக இருக்கும் நேரத்தில் பெய்த அதிசயமான மழையை அவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் பெயர் பாலசுப்பிரமணியன். அவனை எல்லோரும் பாலு என்றுதான் அழைப்பார்கள். அவனுக்கும் அப்பெயர்தான் பிடித்திருந்தது. விசித்திரமாகப் பெய்யும் அப்படிப்பட்ட மழையை அவன் அதற்கு முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறான். அப்போது அவனுக்கு வயது ஐந்து. சிறுவனாக இருந்ததால், அப்போது பார்த்த காட்சிகள் அவன் நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தன.
அப்போது,“காட்டில் குள்ளநரிக்குக் கல்யாணம் நடக்கும் அதான் இப்படி மழை பெய்கிறது” என்ற செய்தி அவ்வூரில் இருந்த சிறுவர்கள் மத்தியில் பிரபலமாகப் பரவியிருந்தது.

“வானில் தேவர்களுக்குக் கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கல்யாணத்தில் கலந்துகொண்ட தேவர்கள் மணமக்களின் மேல் அர்ச்சனை தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தூவும்  மலர்கள்தான் இவ்வாறு வந்து விழுகின்றன” என்றும் சிலர் கூறினார்கள். அதையெல்லாம் உண்மை என்று நம்பினான் அவன். அவனுக்கு அப்போது அறியாத வயசு அதனால். ஆனால் இப்போது அப்படி இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 21 November 2018

உலகத்திலேயே உயரமான சிலை


siragu ulagaththile1
மக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப்பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசவைப்பதன்மூலம், தங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச் சரியாக வழிநடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசைதிருப்பும் கலையில் மிகுந்த திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்திய பிரதமர் மோடியும், அவரது கூட்டாளிகளும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத் திகழ்கிறார்கள்.

கருப்புப்பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ரூ.500, ரூ1,000பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்கள். ஆனால் கருப்புப்பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ்வங்கி அறிவித்துவிட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். வரிவிதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக்கொண்டு, பொருள் மற்றும் சேவைவரியை (ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்துபோயின.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 20 November 2018

தொடரும் பாலியல் வன்புணர்வு கொலைகளும், அரசின் அலட்சியமும்!


Siragu thodarum paaliyal vanpunarvu1
நம் மாநிலத்தில் தற்போது நடந்துவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க, வேதனைப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வற்புறுத்தலுக்கு, கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றால், (எத்தனை சாதனைகளை நாம் சாதித்தாலும்) இந்த சமூகம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது நம் முன் வைக்கப்படும் மிகப் பெரிய கேள்விக்குறி. உலகளவில் இது, நம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான மிகப்பெரிய இழிவாகப் பார்க்கப்படும். பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி வாழ்ந்தால் தான் அது ஒரு சுதந்திரமான வளர்ச்சியை நோக்கிய சமுதாயமாக இருக்க முடியும்.
பெண்களுக்கு இது மாதிரி கொடுமைகள் நடக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கிறதென்றால், இந்த அரசாங்கம் இதனை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது இன்றியமையாதது அல்லவா.!

ஆனால், தண்டிக்க வேண்டிய அரசாங்கமே, இம்மாதிரி கொலைகளை செய்யும் குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது, காலம் தாழ்த்துகிறது என்றால், குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிடும் என்ற அபாயம் அவர்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 14 November 2018

கோண்டு ஓவியம்


Siragu Gond Art1
கோண்டு ஓவியம் என்பது இந்தியப் பழங்குடியினரான கோண்டு மக்கள் (Gondi or Gond) வரையும் ஓர் ஓவிய முறை. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது மொழி தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கோண்டு பழங்குடியினர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் வாழ்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தின் அண்டை மாநிலங்களிலும் பரவியுள்ளார்கள். கோண்டு என்பது பச்சைமலை என்ற பொருள் தரும். இவர்கள் மூதாதையர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பவர்கள், இராவணனை தங்கள் முன்னோர் என்று கருதுபவர்கள். ஆதலால் இராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வுகள் இவர்களுக்கு ஏற்புடையதன்று.

இவர்கள் இயற்கையை மிகவும் போற்றுபவர் என்பதால் இவர்கள் ஓவியங்களின் கருத்துகள் இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். சுவர் ஓவியங்களாகச் செம்மைப்படுத்தப்பட்ட மண்சுவர்களில் பெரும்பான்மையாகவும், சில சமயங்களில் நன்கு மெழுகிய மண் தரைகளிலும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைவர். அடர்த்தியான தன்மை கொண்ட வண்ணங்களில், குறிப்பாக காவி, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் ஓவியங்களில் இடம் பெறும். படங்களில் காவி சிவப்பு மஞ்சள் பழுப்பு வண்ணங்களின் தாக்கம் அதிகமாகவும், நீலம், பச்சை தேவைக்கேற்பவும், கருப்பு வெள்ளை குறைவாகவும் இருக்கும். ஓவியத்திற்கான நிறத் தேர்வு இயற்கையில் காணப்படும் நிலையைக் காட்டும் வகையிலேயே பெரும்பான்மையாக அமையும். பழங்குடியின் ஓவியக்கலையாக இருந்ததை உலகஅரங்கில் வெளிக்கொணர்ந்தவர் ஜங்கர் சிங் ஷியாம் (Jangarh Singh Shyam, 1962-2001) என்பவர். இவரால் கோண்டு ஓவியங்கள் மண்சுவர்களில் இருந்து சட்டமிடப்பட்ட கேன்வாஸ் துணிகளுக்கு இடம்பெயர்ந்து, புதிய பாணியை ஏற்றுக்கொண்டு உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 13 November 2018

ராஜலட்சுமி


siragu rajalakshmi1
ராஜலட்சுமி முதலும் அல்ல இறுதியும் அல்ல என்பதே இந்தச் சமூக அமைப்பின்  குற்றம். 12 வயது சிறுமியை கழுத்தறுத்து கொல்லத் துணியும் மனம், கவ்வியிருக்கும் சாதி இருளுக்கு சாட்சி; பெற்றத் தாய் முன் அவர் மகளை கழுத்தறுக்கும் இந்த சாதிய ஆணாதிக்க மரபில் என்ன நியாயத்தை இந்தச் சட்டமும் நீதியும் வழங்கிட முடியும்? சட்டங்கள் கடுமையானதாகவே உள்ளன. ஆனால் தண்டனை பல நேரங்களில் ஆதிக்க சாதியினருக்கு வலிக்காமல் இருக்கின்ற காரணத்தால் சட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே நியாயங்களை செப்புகின்றன. இந்த மண்ணில் தேடினாலும் சமூக நீதி கானல் நீர் என்பதை தொடர்ந்து கொண்டிருக்கும் இது போன்ற பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
சிறுமியிடம் பாலியல் வன்முறை, அதை வீட்டில் அந்தக் குழந்தை சொன்னக் காரணத்தால் கழுத்தறுத்து கொலை. வேடிக்கையான சமூக அமைப்பு அல்லவா? ராஜலட்சுமியின் தாய் தன் மகளின் முண்டம் தனியே துடிப்பதை கண்டு விம்மி விம்மி அழுவதைத் தவிர வேறு வழியில்லா நிலை, ஒடுக்கப்படும் மக்களின் நிலையே அது தானே? சாதியை தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு கண்டங்கள் தாண்டும் தண்டங்களுக்கு இவர்களின் பகட்டு சாதி கொலை செய்யத் தூண்டுகிறது என்ற உண்மை உரைக்கப்போவது இல்லை.  இதை சாதிக் கோணத்தில் பார்க்க முடியாது வெறும் சிறுமியை பாலியல் தொல்லை தந்ததாக மட்டுமே பார்க்க இயலும், என அரிதான முத்துகள் உதிர்க்கும் கனவான்கள், அந்த கொலைகாரன் பறத் தேவடியா என ராஜலட்சுமியின் தாயை தள்ளிவிட்டு, மகள் கழுத்தை அறுத்ததை வசதியாக மறந்துவிடுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் தான் தமிழ்நாடு இருக்கின்றதா? பழம் பெறுமை பேசுவது, அதில் சாதியை நிலை நிறுத்துவது, என சாதியம் மீண்டும் தலைதூக்குவது, நாம் 10 நூற்றாண்டுகள் பின்னோக்கி நகர்கிறோம் என்றே பறைசாற்றுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-2/

Sunday 11 November 2018

படேல் சிலையின் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள்!


siragu patel1
கடந்தவாரம் குஜராத் மாநிலத்தில், உலகிலேயே மிக உயரமான சிலை, அதாவது 183 மீட்டர் உயரமுள்ள சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தது, நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கான செலவு 3000 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டது. மேலும் இந்த சிலை சீனாவில் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது என்ற செய்தியும் நாம் அறிந்ததே. இப்போது நாடு இருக்கும் நிலையில், எதற்கு இவ்வளவு செலவில் ஒரு சிலை என்று மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் மத்திய அரசின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை…. வரப்போவதுமில்லை.!
தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், இந்த சிலைக்கான நிதி என்பது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய தகவல். அது பின் வருமாறு,
1, இந்தியன் எண்ணெய்க் கழகம் – ரூ.900 கோடி
2. ஓஎன்ஜிசி – ரூ. 500 கோடி
3, பாரத் பெட்ரோலியம் – ரூ. 250 கோடி
4. கெயில் நிறுவனம் – ரூ. 250 கோடி
5, பவர் கிரிட் – ரூ. 125 கோடி
6. குஜராத் மினிரல்ஸ்
வளர்ச்சிக்கு கழகம் – ரூ. 100 கோடி
7. என்ஜினியர்ஸ் இந்தியா – ரூ. 50 கோடி
8. பெட்ரோனெட் இந்தியா – ரூ. 50 கோடி
9. பால்மேர் லாரே – ரூ. 50 கோடி

இந்த நிதிக்கு, சமூக பொறுப்புக்கான நிதி என்று பெயரிட்டு நிதி பெற்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இனியாவது சொல் !! (கவிதை)


siragu iniyaavadhu sol1

சின்னச் சின்ன
சண்டையிட்டு
வாழ்ந்தார், நம்மவர்.
கொடுங்கோலர்
சிலரே,
மண் மழை, தட்பம்
வெப்பம்
ஒத்தியைந்த வளமை
இங்குண்டு.

கனவுத் தேசமிதைக்
காண
வந்தார் அயலவர்.
பூக்குவியலில்
நாகங்கள் புகுந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday 9 November 2018

சத்தியம்


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு வேறு யாரின் துணையோ அல்லது வேறு நூல்களின் துணையோ தேவையில்லை. அவரே எழுதிய சத்திய சோதனை போதும். சத்திய சோதனை ஒரு மகத்தான மனிதர் தானே எழுதிய தன் வரலாற்று நூல் மட்டும் அல்ல. இந்தியாவின் வரலாற்றை, சத்தியத்தின் வரலாற்றை, இந்திய மக்களின் எழுச்சியை, இந்தியாவின் ஆன்ம பலத்தை விளக்கும் மிகப்பெரிய ஆவணம். சத்திய உணர்ச்சி பொங்கித் ததும்பும் உன்னத காவியம். அந்தக் காவியத்தின் ஒவ்வொரு எழுத்திலும் சத்தியம் நூறுக்கு நூறு விழுக்காடு சத்தியமாக விளங்குகிறது.
சத்திய சோதனை நூல் இந்திய மக்கள் இல்லம் தோறும் இருக்கவேண்டிய புத்தகம். இந்திய மக்களின் மனங்கள் தோறும் இருக்க வேண்டிய புத்தகம்.

சத்திய சோதனை நூல் முழுவதும் சொல்லப்பட்டிருப்பது சத்தியம் என்ற ஒன்று மட்டுமே. சத்தியம் ஒன்றே அதன் 623 பக்கங்களிலும் நிரம்பிக்கிடக்கிறது. சத்திய சோதனை நூலினை ஆரம்பம் முதல் இறுதி வரை படிக்கலாம். அல்லது இறுதியில் இருந்துத் தொடங்கி ஆரம்பம் வரை படிக்கலாம். ஒரு நாளை ஒரு பக்கம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வரியேனும் படிக்கலாம். எப்படிப் படித்தாலும் சத்தியம் என்ற அடிநாதத்தின் வெற்றி குறைவில்லாமல் சத்திய சோதனை நூலுக்குள் வெளிப்பட்டு நிற்பதை உணரமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 8 November 2018

497 – சட்டப்பிரிவு நீக்கமும் அதன் சமுதாய தாக்கமும்


siragu-section-497
சுமார் 150 ஆண்டுகள் பழமையான 497 சட்டப்பிரிவை நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது இந்திய உச்ச நீதிமன்றம். இந்த சட்டத்தின் பயன்பாடு மற்றும் இதன் நீக்கத்தின் விளைப்பாடு பற்றி ஓர் அலசல்..
497 – சட்டப்பிரிவு
இந்த பிரிவின்படி திருமணமான ஒரு ஆண் வேறொருவர் மனைவியுடன் உறவில் ஈடுபட்டால் குற்றம். இதில் ஆண் மட்டுமே குற்றவாளி. அந்தப் பெண்ணின் கணவர் சம்மதத்துடன் நடந்தால் அது குற்றம் இல்லை. இந்த சூழலில் பெண் ஒரு போக பொருளாக பாவிக்கப்படுகிறாள். அதேபோல் திருமணமாகாத பெண்ணுடன் நடந்தால் அதுவும் குற்றம் இல்லை. எந்த சூழலிலும் பெண் குற்றவாளியாக கருத்தப்படமாட்டாள்,  அவளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. அதேநேரத்தில் அவள் கணவனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் முடியாது. இந்த காலகட்டத்தில் இது நிச்சயம் குறைபாடுள்ள ஒரு சட்டப்பிரிவு என்பதில் சந்தேகம் இல்லை.

திருமண உறவைக் காத்ததா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 1 November 2018

மங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும்


நூலும் நூலாசிரியரும்:
siragu mangala samugaththaar1

இன்று பெரும்பாலோர் தங்கள் குலப்பெருமையைப் பேசுவதையும், அனைவருமே தாங்கள் “ஆண்ட குலத்தின் வாரிசுகள்” எனத் தயக்கமின்றிச் சொல்வதையும், அவர்கள் தங்கள் பெருமையை வீதியோர சுவரொட்டி, மேடைப்பேச்சு முழக்கங்கள் முதற்கொண்டு இணையத்தின் வலைப்பூக்கள், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் வரை விட்டு வைக்காமல் பரப்புரை செய்வதையும் எதிர்கொள்வது நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வாகிவிட்டது. தங்கள் சமூக நிலையை உயர்த்த உருவாக்கப்பட்ட நூல்கள் சிலவற்றை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் ஆய்வு செய்து “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் வெளியிட்டுள்ளதைக் குறித்து நாமும் முன்பொரு நூலறிமுகக் கட்டுரையில் பார்த்த நினைவிருக்கலாம். (தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள் – http://siragu.com/தமிழகத்துச்-சாதி-சமத்துவ/). அவ்வாறாக, நா. வானமாமலை அவர்கள் குறிப்பிடும் நூல்களின் வரிசையில் தோன்றிய மற்றொரு நூலாக, திரு. தங்கம் விசுவநாதன் அவர்கள் எழுதி நந்தினி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு” என்ற நூலையும் நாம் கருதலாம். நந்தர் என்ற புனைபெயரில் தங்கம் விசுவநாதன் அவர்கள் மங்கல சமூகத்தார் குறித்து ஆய்வு செய்து வெளியிட்ட நூல்கள் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன (எனக்குப் படிக்கக் கிடைத்த நூல், “ஆய்வுநூல்-2″ தொகுதி மட்டுமே என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 31 October 2018

வாக்குப் பதிவு எந்திரம்

Siragu vaakku endhiram1
வாக்குப் பதிவு எந்திரம் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று மிக மிக… மிகப் பெரும்பான்மையான மக்கள் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர். தங்கள் எண்ணத்தை அவர்கள் சமூக வலைத் தளங்களில் பதியவும் செய்கின்றனர். அதை எதிர்த்து வாதிட முடியாத காவிகள் / பார்ப்பனர்கள் ஒரேயடியாக அடித்துப் பேசுகின்றனரே ஒழிய, முறையான கருத்துகளை முன் வைப்பது இல்லை. “வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்றால் இந்த இடத்தில் காவிகளுக்கு வாக்கு குறைந்தது ஏன்? அந்த இடத்தில் வேறு கட்சிகள் வென்றது எப்படி?” என்று பல் முளைக்காத குழந்தை கூட கைகொட்டி நகைக்கும் படியான சொத்தை வாதங்களை முன்வைக்கின்றனர். இவை போன்ற வினாக்கள் எழுந்தால் அவற்றிற்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காகவே எந்திரத்தை விட்டுப் பிடித்து இருக்கலாம், அல்லது இந்த மாதிரி முடிவுகள் தான் இப்போது தேவை என்று நினைத்து எந்திரங்களை அதற்கு ஏற்ப வடிவமைத்தும் இருக்கலாம் என்பதைப் பல் முளைக்காத பச்சைக் குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு புறம் கிடக்கட்டும்.
மக்கள் முழு மனதுடன் எதிர்க்கும் இந்த வாக்குப் பதிவு எந்திரத்தை அதே வேகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை அல்லது எதிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சிகளே பெரும்பாலும் உள்ளன. அக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள் (வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும்) காவிகளின் இன்றைய வளர்ச்சியைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அவாளுடைய ஒரே அச்சம் காவிகளின் கண் மண் தெரியாத வேகம் மக்களைப் புரட்சியின் பக்கம் துரத்தி விட்டு விடக் கூடாது என்பது தான். ஆகவே தேர் ஓடும் போது அது குறித்த திசையில் செல்வதற்காக முட்டுக் கட்டைகளைப் போடுவது போல் மிகவும் கவனமாக “எதிர்க்கிறார்கள்”.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 30 October 2018

சிபிஐ -ல், மத்திய பா.ச.க ஆட்சியின் தலையீடும், உச்சநீதிமன்ற உத்தரவும்.!


Siragu avasara kaala2
பா.ச.க கட்சியின், திரு மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஆட்சி, கடந்த நான்கரை ஆண்டுகளாகவே, பலவித ஊழல் பிரச்சனைகளில் சிக்கி, விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.  பணமதிப்பிழப்பில் கறுப்புப்பணம் திரும்பி வராததை மத்திய ரிசர்வ் வங்கியே தெரிவித்துவிட்டது. இதன்மூலம் பலகோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டிருக்கின்றன. மேலும், வியாபம் ஊழலில், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், சம்பந்தப்பட்டவர்கள் மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறார்கள் என்பதுவும் நமக்கு  தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் தான், பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக,  ரபேல் பற்றிய ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்திருக்கிறது. இந்த ரபேல் விமான ஊழல் ஒப்பந்தத்தின் மூலம், ஒரு லட்சத்து, 71 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிலைன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அவர்களே, நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை, முன்னாள், பிரான்ஸ் அதிபர் காய்ஸ் ஹாலண்டே, டஸ்ஸால்ட் முத்த அதிகாரி, லொயிக் சிகலான் ஆகியோரின் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. எதிர்க்கட்சித்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் இதனை வெளிகொண்டுவந்து, அதற்கான போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 26 October 2018

அடுத்தது என்ன? (சிறுகதை)


Siragu aduththadhu enna1
காலை மணி ஐந்து. வெளியில் எங்கும் அந்தகாரமாயிருந்தது. சம்பந்தம் நடைப்பயிற்சி யோகா செய்ய வீட்டை விட்டு கிளம்பி விட்டார். மழையாக இருந்தாலும், புயலாய் இருந்தாலும், மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றாலும் அவருக்கே உடம்பு சரியில்லையென்றாலும் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

சம்பந்தம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. டில்லி, மும்பாய், பூனே, போபால் நாட்டின் பல பாகங்களில் பணி செய்தாலும் பணி இறுதியில் மூன்று வருடங்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணி செய்து ஒய்வு பெற்றார். மிகவும் ஜாக்கிரதையானவர். அஞ்சல் பெட்டியில் கடிதத்தைப் போட்டுவிட்டு அதன் பின் பக்கம் போய் பத்திரமாய் உள்ளே போய்விட்டதா அல்லது பின் பக்கம் ஏதாவது ஓட்டை வழியாக விழுந்தது விட்டதா? என்று பார்த்துவிட்டுத்தான் வருவார். எப்போதும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதைப் போல் பேசி அசத்துவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 25 October 2018

கும்பமுனி அல்ல! நாஞ்சில் நாடன்


siragu-naanjil naadan1
நாஞ்சில் நாடன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரின் சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதி சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளது. இவரின் எழுத்துக்களில் தன் அனுபவக்கூறு மிகுந்து காணப்படுகிறது. இவரின் எழுத்துப் பழக்கம், இவரின் நடவடிக்கைகள் ஆகியவை கும்பமுனி என்ற பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. பல கதைகளில் கும்பமுனி என்ற கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இப்பாத்திரத்திற்குத் துணைப் பாத்திரமாக கண்ணுப்பிள்ளை என்ற பாத்திரமும் அமைகின்றது.

மனைவியின்றித் தனிக்கட்டையாக வாழ்ந்து வரும் கும்பமுனிக்கு, கண்ணுப்பிள்ளைதான், தேநீர், உணவு போன்றவற்றைத் தயாரித்துத் தரும் பணியாளர் ஆவார். இவர் காலை முதல் இரவு வரை கும்பமுனியுடன் வாழ்ந்துவிட்டுப் பின் தன் இல்லம் திரும்பி, அதன் பிறகு நாளைக் காலை வருவது என்று பணி செய்பவர். இவர் அடிக்கடி ஊர் நடப்புகள் பற்றியும், கும்பமுனியின் நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப்படுத்தும் விமர்சனகர்த்தாவாகக் கதைகளில் காட்டப்பெறுகிறார். இவரின் விமர்சனங்களுக்குப் பதில் தருபவராக கும்பமுனி படைக்கப்பெற்றுள்ளார். இவர் இருவரது உரையாடலில் எள்ளலும், நகைச்சுவையும், எரிச்சலும், இயலாமையும் தொனிக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 23 October 2018

முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை

Siragu muththollaayiram2
உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது.

இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந்தர்களை எண்ணி அவர்கள். உலா வரும் போது அவர்களைக் கண்டு காதல் கொள்ளும் பெண்களின் மொழியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இந்த அடிப்படையைத்தான் பின்னாளில் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார் நாயன்மார் கையாண்டு உள்ளனர், கடவுளை தலைவனாக நினைத்து உள்ளம் உருகி பாடல்கள் எழுதினர் என்பது அறிஞர்களின் கருத்து.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 19 October 2018

தொகுப்பு கவிதை (அர்ச்சனைகள், தம்பிக்கு)

அர்ச்சனைகள்

                                         
sirau maanudam1

அந்தநாள் கனிந்து வந்து கொண்டிருக்கிறது
ஆமாம், அது வெகுதொலைவில் இல்லை.

எந்தநாளில் எவரெழுதி வைத்த சாத்திரமோ
எந்தநாளில் எவருக்காக எவரெவரோ எழுதி வைத்த நீதியோ
எந்தநாளில் எவரெவர் ஒடுக்கப்பட வேண்டுமென
எவனெவனோ கடைபிடித்த சடங்குகளோ.

அந்தநாளில் அவரெழுதி வைத்த
சாத்திரத்தை, நீதியை, சடங்குகளை
குருதிக் குளியலால் இனியும் நாங்கள்

ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/

Thursday 18 October 2018

பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல்

 Siragu Andy_Warhol_1975

மனிதர்களையும், நிகழ்வுகளையும், இயற்கையையும் காண்பதைக் கண்டவாரோ; அல்லது மக்களறிந்த தொன்மக் கற்பனைக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தங்களது கற்பனையில் உருவாக்கி இருபரிமாண ஓவியங்களாகவும் முப்பரிமாண சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் முறை மனித வரலாற்றில் கலை என விவரிக்கப்பட்டது. கலையின் அடிப்படை என்பது ஒலியற்ற எழுத்துவடிவற்ற முறையில் மொழி எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து ஒரு செய்தியை வாழும்காலத்தின் மக்களுக்கும் எதிர்காலத்தின் மக்களுக்கும் சொல்லிச் செல்வது. குகை மனிதர்கள் சுவரில் தீட்டிய வெள்ளை சிவப்புவண்ணக் கீறல்களோ அல்லது கோயில்களில் காணும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் அடிப்படை நோக்கம் காட்சித் தொடர்பு (Visual communication). கலைஞர் ஒருவரின் தனித்தன்மை அவரது படைப்பில் மிளிர்ந்து அவரது கருத்து மக்களைக் கவர்ந்தால் அவர் புகழ் பெற்ற கலைஞர் என்ற பெயர் எடுக்கிறார். எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோரும் எழுதினாலும் ஒருசிலரே அழகு நயத்தின் அடிப்படையில் கலைஞர் என்றும் பாவலர் என்றும் இலக்கிய உலகில் புகழ் பெறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
காலந்தோறும் ஊடகங்கள் மாறி வந்துள்ளன. சிற்பங்களும் ஓவியங்களும் கால எல்லை, மொழி எல்லை கடந்து அவை சொல்லும் செய்தி என்னவென்று உலகின் பல மூலைகளில் உள்ள மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தது; அதாவது படத்துடன் ஒரு சுருக்கமான பொருள் விளக்கக் கையேடு கொடுக்கத் தேவையற்ற நிலையில், இயல்பை விவரிக்கும் படைப்புகள் (representational visual communication) அவை. அதுவரை கலையின் கருத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் 19 நூற்றாண்டில் வேறு கோணத்தில் திரும்பியது. ஒரு கலைஞர் தனது கருத்தை எவ்வாறு தனது பார்வையில் விவரிக்கிறார் என்ற கோணத்தில் கலை திரும்பிய பொழுது; அந்தக் கருத்தாக்கத்தை கலைஞர் தனது படைப்பில் வெளிப்படுத்தும் உணர்வுக்கு (abstract expressionism) முக்கியத்துவம் ஏற்பட்டு, கலை மரபு என்ற எல்லை கைவிடப்பட்டு நவீனக்கலை (Modern art) என்பதன் காலம் துவங்கியது. ஐரோப்பா நவீனக்கலையின் தாயகம், 19 நூற்றாண்டின் மத்தியில் இருந்து சற்றொப்ப 1970 வரை, ஒரு நூற்றாண்டின் கால அளவிற்கு, பல கலைஞர்களாலும் பல ஊடகங்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டது. ஒரு படைப்பென்பது பார்வையாளரின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற நிலையை கலைப்படைப்புகள் அடைந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 17 October 2018

ஆளுநரும், முன்னுக்குப் பின் முரணான செய்திகளும்!


Siragu Banwarilal purohit1
கடந்தவாரம் 6-ந்தேதி, நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில், மாண்புமிகு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், உரையாற்றியபோது, “அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிதான் துணை வேந்தர்களுக்கான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த உரைக்குப்பிறகு, தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்கள் தங்கள் சந்தேகங்களை எழுப்பினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும், இதனை தெளிவாக வெளிக்கொண்டுவர வேண்டும். ஆளும் அதிமுக அரசு இவ்விசயத்தில், பெருமளவில் ஊழல் புரிந்திருக்கிறது. ஆளுநரே குற்றம் சாட்டுமளவிற்கு உள்ள இந்த ஊழலை மக்கள் மத்தியில் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 16 October 2018

இலஞ்சம் (கவிதை)


Siragu corporate5

எங்கு பிறக்கிறது
இந்த இலஞ்சம்
பிறந்த குழந்தைக்கு
கையில் பணம்
“நல்ல புடிமானம்
பெற்றோருக்கு சொத்து சேர்ப்பான்”
கோயில் உண்டியலில்
கடவுளுக்கு காணிக்கை
“நினைத்த காரியம் நிறைவேறும்”

திருமண விழாவில்
மொய் என்ற அன்பளிப்பு
“உறவினர்கள் மதிக்க வேண்டாமா?”

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி


siragu keezhadi1
புதுப்புது நூல்கள் பல நாள்தோறும் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துடன் நூலாசிரியர்கள் படைக்கின்றனர். அந்த நோக்கத்தைக் கொண்டும், அதை அந்நூலாசிரியர் வெளிப்படுத்தும் திறமையைக் கொண்டும் அந்நூலின் சிறப்பு அமைகிறது. அவ்வகையில் “கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி” எனும் இந்நூல் நோக்கத்திலும் அதை வெளிப்படுத்தும் திறமையிலும் மிக உயர்வானது.

இந்நூல் தமிழ் இனத்தின் தொன்மையை மிகத் தெளிவாகவும், அழகாகவும் அதே சமயம் எளிமையாகவும் பறை சாற்றுகிறது. ஆகவே தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் இந்நூலை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். அது மட்டுமா? மறைந்து கிடக்கும் உண்மை வெளி வருகின்றது என்றால் அதை வரவேற்க உலக மக்கள் அனைவருமே கடமைப்பட்டவர்கள் ஆவர். இந்நூல் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர முயலும் கீழடி அகழாய்வு பற்றி முழுவதுமாக விளக்குவதால் உலக மக்கள் அனைவருமே வரவேற்க வேண்டிய ஒரு நூலாகும். ஆகவே வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவது மனித குலததிற்குச் செய்யும் உண்மையான வரலாற்றுத் தொண்டாக அமையும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 15 October 2018

மொழியாக்கம் எனும் கலை!


siragu translate 2
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்! மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை என்கிறார் The Art of Translation நூலின் ஆசிரியர் தியோடோர் சேவொரி. தமிழ் மொழியை பொறுத்தவரையில் அது இன்றளவும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டு வரும் செம்மொழி, சில நூற்றாண்டுகளுக்கு முன் வெறும் பக்தி மொழி என்ற நிலையில் மட்டுமே சுருங்கிவிட்ட அவல நிலையில் இருந்து, மீட்டெடுத்து அறிவியல் கருத்துகள் ஒரு மொழியில் உருவாக்கப்படும்போது தான் மக்களின் மொழியாக மக்களுக்கு தேவையான கருத்துகளை கூறும் மொழியாக நிலைக்கும் என்பதை வலியுறுத்திய இயக்கம் திராவிடர் இயக்கம். மேட்டிமை தமிழறிஞர்களின் வீட்டுப் பரனில் உறங்கிக்கிடந்த திருக்குறளைப் பொதுமறையாக மக்களிடம் தவழ விட்ட தலைவர் தந்தை பெரியார்! அன்று மக்களின் மொழியாக தமிழை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மொழிபெயர்ப்பினை நாம் பார்க்க வேண்டும். நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் மட்டுமல்ல பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுசேர்க்கின்றபோது, பல மொழி பேசும் மக்களின் அனுபவங்களை நம் மொழியில் படித்து உணர முடிகின்றது. குறிப்பாக மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அவர்களின் அரசியல் சூழல், அந்த மக்களின் வாழ்வியல் என பலவற்றை படித்தறிந்து ஒப்புநோக்கி அறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பா.ச.க ஆட்சியின் தோல்வியும், தற்போதைய ரபேல் ஊழலும்!


Siragu avasara kaala2
மத்தியில் பா.ச.க-வின், மோடி ஆட்சி வந்ததிலிருந்தே, நாட்டின் வளர்ச்சி படிப்படியாக குறைந்துகொண்டே வந்து, இன்று முழுவதும் தோல்வியை கண்டிருக்கிறது என்பது அனைவராலும்  ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை.  ஊழலை ஒழிக்கப்போகிறோம், கள்ளப்பணத்தை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மிகப்பெரிய ஊழலை செய்து முடித்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில்.! இறுதியில், அதன்முலம் அவர்களால் மீட்கமுடிந்தது சொற்ப அளவே.!
இதனையடுத்து, அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, ரூ. 73/- என  மிகவும் சரிந்துள்ளது.  மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அன்றாடம், சாமானிய மக்கள் கழுத்தை நெறிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு எடுத்துக்கொண்டோமானால், தேர்தலின்போது சொன்னபடி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டமாதிரி, பாதியளவு கூட வழங்க முடியவில்லை. படித்த பட்டதாரிகளை, பகோடா வியாபாரம் செய்யுமாறு மோடி அவர்களே ஆலோசனை கூறினார். மேலும், மத்தியப்பிரதேசத்தில்,  பா.ச.க ஆட்சியில் ஏற்பட்ட வியாபம் ஊழல், அதி பயங்கரமானது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில் மிகப்பெரிய ஊழல். இதில் தொடர்புடையவர்கள், விசாரிக்கப்படுபவர்கள், விசாரிக்க வருபவர்கள் என பலரை மரணமடைய வைத்திருக்கிறது. பலரின் மர்மமான மரணத்திற்கு, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்து,  பா.ச.க-வின் இந்த 4 ஆண்டு ஆட்சியில், வாராக்கடன் தள்ளுபடி மட்டும் 7 மடங்கு அதிகரித்திருப்பதாக  ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/

Thursday 4 October 2018

‘பாரதி’ கவிதை (கவிதை)


siragu bharadhiyar1

பூத்திருக்கும் பூவிற்கும்
உனக்கும்
எத்தனை ஒற்றுமை?
பூவின் வாழ்நாளும்
புவியில் நீ
வாழ்ந்த நாளும்
சிலவே.
தென்றலும் நீயும்
ஒன்றுதான்,
வாடியோர் வாட்டம்
தீர்ப்பதில்,
தீயும் நீயானாய்
சாத்திரம் பேசுவோர்
மூடத்தனம் சாடி,

நதியாய் ஓடி
நாட்டினர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 3 October 2018

பாச பேதம் (சிறுகதை)


father daughter dispute conflict
மனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் பேதம் இருக்கிறதே” என்று சங்கரி சிந்தித்துக் கொண்டே மருத்துவமனையில் அவள் கணவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். ”நித்யா அப்பாவுக்கு இப்போ எப்படிமா இருக்கு?”
”அப்படியேதான் இருக்குமா. இன்னும் கண்ணைத்திறக்கல”.
அப்போது, “சிற்றம்பலம், சிற்றம்பலம்” என்று உரத்தக்குரலில் கூப்பிட்டுக் கொண்டே மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்..
”அவர் தூங்குகிறார் போலிருக்கு” என்றாள் சங்கரி.

மருத்துவர் சிற்றம்பலத்தின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு நகரும்போது, ”இப்போது அவருக்கு எப்படியிருக்கு மருத்துவர். எப்போ குணமாகும்” என்று கேட்டாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 2 October 2018

தமிழாக வாழ்ந்த அண்ணலுக்கு அகவை தொண்ணூறு


siragu thamizhannal 2
சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர் நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய பல இலக்கியவாணர்களைக் கொண்ட பேரூர் இவ்வூராகும். செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூலினை எழுதிய சோம.லெ, தினமணியின் ஆசிரியராக விளங்கிய சம்பந்தம் (இராம.திருஞானசம்பந்தம்), முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இயங்கு சக்தியாக விளங்கிய லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் போன்ற பலர் பிறந்த மண் நெற்குப்பையாகும்.
அங்குப் பிறந்த இராம.பெரியகருப்பன் என்ற தமிழண்ணல் தமிழ் ஆய்வுலகிலும், ஒப்பிலக்கியத்துறையிலும், சங்க இலக்கியத் தனித்திறன் ஆய்விலும் சிறந்து விளங்கியவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை அவர் வாழ்ந்த ஆண்டுகளைப் போலவே எண்பத்தெட்டினைத் தொடும்.

தமிழண்ணல் செட்டிநாட்டு வழக்கப்படி இராமசாமிச் செட்டியார் கல்யாணி ஆச்சி ஆகியோருக்குப் பிள்ளையாக வந்தவர். தமிழ் பண்டிதர் பட்டம் பெற்று அதன் பின் பொருளாதாரப் பட்டம் பெற்று அதன்பின் தமிழ் உயர்கல்வி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர். அடிப்படையில் இருந்து உயர்ந்தவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரேசர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி அதன் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, பின்னாளில் தேசியப் பேராசிரியராக முன்நின்றவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 October 2018

புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து


siragu u.v.swaminatha iyer2
எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை உடையது. பண்டைய காலத்தில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை நூலாக இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாரென்று அறிய இயலவில்லை.
உ.வே.சாமிநாத ஐயர்:
siragu u.v.swaminatha iyer1

புறநானூற்றுப் பாடல்களின் முதற்பதிப்பு 1894 இல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1923, 1935, 1950, 1956, 1962- ஆண்டுகளிலும் மறுபதிப்புக்களாக மொத்தம் ஆறு பதிப்புகள் அவராலும் அவரது குடும்பத்தாராலும் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பின்னர் பல பதிப்புகளும் இன்றுவரை வந்துள்ளன. பற்பல ஓலைச் சுவடிகளைப் படித்து, அவற்றைக் கையெழுத்துப் படியாக உருவாக்கி, பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பல பிரதிகளுடனும் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்துச் செப்பனிட்டு, சரியான வரிகளைக் கண்டறிந்து அச்சுப் பதிப்பாக வெளியிட்ட உ.வே.சா அவர்களின் பணியைப் போற்றாத தமிழர் இருக்க வழியில்லை. முதல் மூன்று பதிப்புகள் உ.வே.சா அவர்களாலும், நான்காவது பதிப்பு 1950 அவர் மகனாலும், பின்னர் வெளியான பதிப்பு பேரன் எழுதிய முகவுரையுடனும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.